ரவீந்திர நாத் தாகூர் எழுதிய கவிதைத் தொகுப்புகளில் ஒன்று Stray Birds என்பது. அதில் எல்லாம் சின்னச் சின்ன கவிதைகள்.அதிலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதைகளை மொழி பெயர்த்தேன். 1 நீரில் மீன் மெளனமாக இருக்கிறது நிலத்தில் மிருகம் சத்தம் போடுகிறது காற்றில் பறவை கானம் பாடுகிறது ஆனால் கடலின் மெளனம் நிலத்தின் சத்தம் காற்றில் கானம் எல்லாம் மனிதருள் இருக்கிறது 2 அலையும் கோடை காலப் பறவைகள் என் சன்னல் அருகே வருகின்றன பாடிப் பறந்து செல்கின்றன படபடத்து இலையுதிர் கால மஞ்சள் இலைகள் பாடல் இன்றித் தரையில் விழுகின்றன பெருமூச்சு விட்டபடி ...