Skip to main content

Posts

Showing posts from July, 2022

ஒரு குரல் ஒரு அடையாளம்

  அந்தக் குரல் மென்மை கொண்டு இழைவது. ஆழமான சோகத்தை உள்ளே தரித்துக் கொண்டது. கேட்பவர் மனத்தைத் தவிப்பு கொள்ள வைப்பது. கேட்டு முடித்த உடன் மனம் வேறு எதிலும் லயிக்க விடாதது.. மனம் ஏதேதோ நினைவுகளில் மூழ்கி விடும். சென்னையில் ராஜகுமாரி என்று ஒரு தியேட்டர் இருந்தது. அங்குதான் அந்தக் குரலை முதலாகக் கேட்டேன். அப்போது எனக்குப் பதினாறு வயது. பரிச்சய் என்று ஒரு ஹிந்தித் திரைப்படம். ஆர்.டி.பர்மன் இசை. பாடலை எழுதியவர் குல்ஸார். லதா மங்கேஷ்கர் உடன் இணைந்து பாடிய அந்தக் குரலைப் பற்றி தான் மேலே குறிப்பிட்டேன்.  அது பூபேந்தர் சிங் என்ற பாடகரின் குரல். ஹிந்துஸ்தானி இசை திரைப் பாடல்களில்  இருந்து முற்றிலும் நீங்கி விடாத காலம் அது. எனக்கு ஹிந்தி ஓரளவு அப்போது பரிச்சயம் ஆகி இருந்தது. அதாவது பரிச்சய் என்றால் பரிச்சயம் என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு.  நான் சொன்ன பாடல் பீதி நா பிதாயி ரயினா என்று துவங்கும். அந்தக் காட்சியில் ஜெயா பாதுரி யும் சஞ்சீவ் குமாரும் நடித்திருப்பார்கள். ஜெயா மகள். சஞ்சீவ் நோயுற்ற தந்தை. ஜெயா பாடுவார். பாதி பாடும் போது  வரிகள் தவறி விடும். அப்போது சஞ்சீவ் அந்த ...

சிலி தேசத்துக் குயில் 2

  என்னுடைய முந்தைய பதிவைப் படித்துவிட்டு தம்பி சேகர் எழுதியிருந்தான். தீவிரமாக மொழிபெயர்ப்பில் இறங்கலாமே என்று. நண்பர் ராமச்சந்திரன் பாப்லோ நெருடாவின் The Captain's verses என்ற தொகுப்பில் தான் 'உனது சிரிப்பு" என்ற கவிதை இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார்.  இது எனக்கு ஒரு உத்வேகத்தைத் தந்தது.  The Captain's Verses ஐ தேடினேன். கிடைத்தது. தேடுவதெல்லாம் கிடைத்து விடுகிறது உடனே. அதற்குப் பெரிதும் மகிழ முடிவதில்லை.  The Captain's Verses  ல்  43  கவிதைகள் இருந்தன.  கிடைத்ததை எல்லாம் மொழி பெயர்க்க மனம் துடிப்பதில்லை. அது முடிவதும் இல்லை.  எனது தேர்வாக ஒரு கவிதை இறந்து போன பெண் திடீரென்று நீ இல்லாமல் போனால் திடீரென்று நீ வாழவில்லை என்றால் நான் வாழ்ந்து கொண்டுதான் இருப்பேன் நான் துணியவில்லை இதை எழுதத் துணியவில்லை நீ இறந்து போனால் நான் வாழ்ந்து கொண்டுதான் இருப்பேன் ஏனென்றால் எங்கே ஒரு மனிதனுக்குக் குரல் இல்லையோ அங்கே நான் குரலாக வேண்டும் எங்கே கறுப்பர்கள் தாக்கப் படுகிறார்களோ  அங்கே நான் இறந்தவனாக இருக்க முடியாது எனது சகோதரர்கள் சிறை செல்லும் போது ...

சிலி தேசத்துக் குயில்

  ஒரு நதி எங்கே துவங்குகிறது?  அறிதல் கடினம். ஒரு சிரிப்பு எங்கே துவங்குகிறது?  அறிய முயலலாம். சில சிரிப்புகள் புருவங்களில் துவங்குகிறது. சில சிரிப்புகள் நெற்றியில் துவங்குகிறது. மூக்கில் பரவி நாசி மடல்களில் சிலிர்க்கிறது. இதழ்களில் கண நேரம் நிலை பெறுகிறது. பின்பு வானவில்லைப் போல மறைந்தும் விடுகிறது. மனதில் மழையும்  இள வெயிலும் மாறி மாறி அடிக்கிறது.  பாப்லா நெருடா என்று ஒரு அற்புதமான கவிஞர். சிலி தேசத்தைச் சேர்ந்தவர். கவிஞர் மட்டுமல்ல. தீவிர அரசியலில் ஈடுபட்டவர். பல பதவிகள் வகித்தவர். இவர் பிறந்து 118 ஆண்டுகள் ஆகிவிட்டன.. அவர் சிரிப்பை பற்றி எழுதிய ஒரு கவிதையைப் பார்க்கலாம். உனது சிரிப்பு ரொட்டித் துண்டை எடுத்துச் செல் என்னிடமிருந்து நீ விரும்பினால் காற்றை எடுத்துச் செல் ஆனால் உன் சிரிப்பை மட்டும் என்னிடமிருந்து எடுத்துச் செல்லாதே நீ பறித்த ரோஜாவை எடுத்துச் செல்லாதே மகிழ்ச்சியில் திடுமெனத் தெறிக்கும் திவலையை உனக்குள்ளே ஜனிக்கும் வெள்ளி அலையை.. எனது போராட்டம் கடுமையானது களைத்த கண்களுடன் நான் திரும்பி வருகிறேன்  சில பொழுது, மாறாத இந்த உலகைப் பார்த்தவனாய்...

யாதுமாகி நின்றாய்

  நான் படித்த ஆரம்பப் பள்ளி எனது வீட்டுக்கு எதிர் சாரியிலேயே இருந்தது. பள்ளி வாசலில் ஒரு பெண்மணி தின்பண்டங்கள் விற்பார். கொடுக்காப் புள்ளி,சவ்வு மிட்டாய்,கமர்கட்டு,இலந்த வடை இவைகளை விற்பார்.  விலை ஒரு பைசாவிலிருந்து ஐந்து பைசா வரை இருக்கும். அந்தப் பெண்மணியின் பெயர் காளியம்மா. காளி என்றால் தின்பண்டம் விற்கும் அம்மா தான் நினைவில் வருவார். பின்பு மகாகவி காளிதாஸ் என்று ஒரு திரைப்படம் பார்த்தேன். காளி அருளால் படிப்பில்லாத தற்குறி ஆட்டு இடையன் பெருங் கவிஞன் ஆகி விடுவான்.  அதில் காளி ஒரு மூதாட்டியாக வருவார். அவர் பளீரென்று ஒரு சிரிப்பு சிரித்தார். எனக்கு முதுகு சில்லிட்டுப் போயிற்று.  அப்படி ஒரு சிரிப்பு. பின்பு ஒரு காட்சியில் காளி ஆடினாள். கையில் சூலம் இருந்தது. கூந்தல் அவிழ்ந்திருந்தது. கண்கள் அசைய தோள்கள் அசைய இடை அசைய காலினில் தண்டை ஒலிக்க ஆடினாள். நான் பயந்து போனேன். காளியின் பார்வை அப்படி இருந்தது. காளிதாசன் கலக்கம் அடையும் போதெல்லாம் காளி வருவாள் மூதாட்டி வடிவில். கறுப்பு நிற புடவை அணிந்திருப்பாள். சிகப்பு அல்லது வேறு ஏதாவது அழுத்தமான நிறமாகத் கூட இருக்கலாம். கறுப்ப...