தீபாவளி என்றால் வழக்கமான கொண்டாட்டம் தவிர பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவருவது பெரும் கொண்டாட்டம். புது ரிலீஸ் படத்தைத் தீபாவளி அன்றே பார்த்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் வயதில் மூத்தவர்கள்.இளைஞர்கள். அதாவது வேலை பார்ப்பவர்கள். கல்லூரியில் படிக்கின்றவர்கள். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு புரளும் வாய்ப்பு பெற்றவர்கள். எல்லோரும் புத்தாடை அணிந்து கொள்வார்கள். அம்மாக்களுக்கு நிறைய வேலை இருக்கும். வேலை எல்லாம் முடித்து விட்டு மாலை வேளையில் சிறு பொழுது மட்டுமே புத்தாடை அணிவார்கள். சிறுவர்கள் நாள் பூராவும் புத்தாடையுடன் திரிவோம். இன்று மூன்று தெய்வங்கள் என்ற நிரைப்படத்தில் வரும் தாயெனும் செல்வங்கள் என்ற பாட்டு ஞாபகம் வந்தது. தீபாவளி கொண்டாட்டத்தை இசைக்கும் பாடல். சாதாரணமாக வீடும் உறவுகளும் கொண்டாடும் பண்டிகை. புத்தாடை இனிப்பு பட்டாசு என்று. இந்தப் பாடலில் சொந்தமில்லாமல் வந்த யாரோ மூன்று பேர் சொந்தமாக ஆகித் தீபாவளி கொண்டாடும் காட்சி. பாடலின் இறுதியில் வரும் வரிகள் இப்படி அமைந்து இருக்கும். எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம் இல்லாத சொந்தங்கள் உருவாகலாம் தாயாக மகனாக உறவாட...