எனது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இதைக் கருத வேண்டுகிறேன். ஒரு ஹங்கேரியக் கவிதை. அதன் தலைப்பு மஞ்சள் ரிப்பன். ஆங்கிலத்தில் இருந்ததன் தமிழாக்கம் செய்தது இவ்வாறு. நான் வீடு திரும்புகிறேன் என் தண்டனைக் காலம் முடிந்தது இப்போது எது எனது எது எனதல்ல என்று தெரிந்து கொள்ள வேண்டும் எனது கடிதம் உனக்குக் கிடைத்திருக்கக் கூடும் நான் வெகு சீக்கிரம் விடுதலை ஆகி விடுவேன் என்றால் உனக்குத் தெரியும் நீ என்ன செய்ய வேண்டும் என்று இன்னமும் நீ என்னை விரும்பினால் அந்தப் பழைய நெடிய மரத்தைச் சுற்றி ஒரு மஞ்சள் ரிப்பனை நீ கட்டி விட வேண்டும் நெடு நாட்கள் ஆகிவிட்டது நீ இன்னமும் என்னை விரும்புகிறாயா? ஒரு வேளை மரத்தைச் சுற்றி கட்டிய மஞ்சள் ரிப்பனை நான் காணவில்லை என்றால் நான் பஸ்ஸிலேயே அமர்ந்து இருப்பேன் மறந்து விடு , பழியை என் மீது போட்டு விடு இது பஸ் டிரைவருக்கு ஒரு வேளை மரத்தைச் சுற்றி கட்டிய மஞ்சள் ரிப்பனை நான் காணவில்லை என்றால்... என் மேல் கவனம் வையுங்கள் என்னால் அந்தக் காட்சியைக் காண முடியாது நான் இன்னமும் சிறையிலேயே இருப்பேன் சிறையின் சாவி எனது அன்பிடம் இருக்கிறது ஒரு எளிய மஞ்சள் ரிப்பன் ...