Skip to main content

Posts

Showing posts from December, 2025

இரவு என்பது பத்து நிமிடம்

 வினோத் குமார் சுக்லா செவ்வாய்க் கிழமை 23.12.2025 அன்று மறைந்தார். 88 வயது. ஹிந்திக் கவிஞர். கதைகளும் எழுதி இருக்கிறார். नौकर की कमीञ நெளகர் கீ கமீஸ் (வேலைக்காரனின் சட்டை) அவர் எழுதிய நாவல். இதை மணி கெளல் திரைப்படம் ஆக்கினார். இந்த இரண்டு நாட்களில் இவருடைய நிறைய கவிதைகளைப் படித்தேன்.  எளிமையான சொற்கள் . கனிந்த கருத்துக்கள். பிரமித்துப் போனேன். Simple is the seal of virtue.   குழந்தைகள் சில சமயம் நம்மிடம் கேள்வி கேட்கும். பதில் சொல்ல முடியாது. யோசித்தபடியே நின்று விடுவோம்.  இவருடைய கவிதைகளைப் படிக்கும் போது அப்படி ஒரு அனுபவம் நேர்கிறது. சின்னதாக கணக்கு போடுவது போல ஒரு கவிதை. रात दस मिनट की होती तो पाँच मिनट में आधी रात हो जाती रातें ऐसी ही बीतीं। दिन दस मिनट का होता तो पाँच मिनट में आधा दिन बीत जाता दिन ऐसे ही बीते। मैं दो दिन की ज़िंदगी जी सकता हूँ एक दिन मैं तुम्हारे पास रहूँगा दूसरे दिन तुम मेरे पास रहना। இரவு என்பது பத்து நிமிடம் என்றால் ஐந்தே நிமிடத்தில் நடுநிசி ஆகிவிடும் இரவுகள் இப்படியே கழிந்து விடும் பகல் என்பது பத்து நிமிடம் என்றால் ஐந்தே நிமிடத்தில் நண்...

பனியின் வாசமும் கூந்தலின் ஈரமும்

 Moonlit Night Tonight my wife must watch alone the full moon over Fu-zhou; I think sadly of my sons and daughters far away, too young to understand this separation or remember our life in Chang'an. In fragrant mist, her flowing hair is damp; In clear moonlight, her jade-white arms are cold. When will we lean at the open casement together while the moonlight dries our shining tears? Du Fu நிலவொளி இரவு இன்று இரவு எனது மனைவி தனியே முழு நிலவைக் காண்பாள்  தூர தூரத்தில் இருக்கும் எனது மக்களை நினைத்துக் கொள்கிறேன் வயதில் சிறிய அவர்களுக்கு இந்தப் பிரிவின் துயரம் புரியாது சாங்கனில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை கூட நினைவில் இருக்காது பனியின் வாசமும் விழுகின்ற அவள் கூந்தலின் ஈரமும்.. தெளிந்த நிலவில் தண்ணென்றிருக்கும் வெண்ணிறக் கைகளும்.. நாங்கள் எப்போது இனி ஒன்றாக திறந்த சன்னலின் மீது சாய்ந்து இருப்போம் நிலவொளி எங்கள் ஒளிரும் கண்ணீர்த் துளிகளை உலரச் செய்யும் போது சீனக் கவிஞர் டூ ஃபூவின் கவிதை சங்க காலக் கவிதை போல இருக்கிறது. பள்ளிப் பருவத்தில் படித்த சத்திமுத்தப் புலவரின் பாடல் ஞாபகம் வந்தது...

காலம் வெளி கடந்து

    காலம் என்றால் என்ன                          அது ஒரு பூ                                  அந்தப் பூவுக்குள்                                      ஒரு உலகம் இருக்கிறது                                                 மகிழ் ஆதன் ஊழி என்று ஒரு சொல் உண்டு. அது ஒரு நீண்ட காலப் பகுதியைக் குறிக்கிறது. யுகம் என்று சொல்கிறோம் இல்லையா? ஊழி தோறு ஊழி ஒருவன் என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழி சொல்லும்.  காலம் என்பது நம்மைத் தொடர்ந்தபடியே இருக்கிறது. ஒரு கரிய நிழல் போல. அது நிலை பெயராத ஒன்றா அல்லது தொடரும் ஒரு இயக்கமா என்பதில் குழப்பம் வருகிறது. அது அசைவது கிடையாது. அது ஒரு மெளன சாட்சி என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறது. கண்ணுக்கு ம...