Skip to main content

Posts

Showing posts from February, 2023

நீ தனியே நடக்கும் பாதை

The Path On Which You Are Walking Alone  by Pär Lagerkvist The lonely man is the weakest one. Not because he is alone but because He is denying what he is carrying within himself. Our soul, getting deeper, is the broad river of life. The path on which you are walking alone, is leading away from yourself. பெர் லாகர்க்விஸ்ட் ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர். கவிஞர். நோபல் பரிசு வென்றவர். பாரபாஸ் என்ற இவரது நாவலுக்காக க.நா.சுப்ரமணியன் இந்தக் கதையை அன்பு வழி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அன்பு வழி போல ஒரு நாவல் எழுதி விட மாட்டோமா என்ற ஆசையில் தான் எழுதிப் போகிறேன் என்று வண்ணநிலவன் கடல்புரத்தில் என்ற நாவலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.  பாரபாஸ் என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமீபத்தில் படித்து முடித்தேன். பாரபாஸ் கொள்ளையன். சிலுவையில் ஏற்றப்பட வேண்டியவன்.  பஸ்கா விருந்து நாளில் குற்றவாளி ஒருவனை விடுதலை செய்ய முடியும். பிலாத்து மக்களிடம் கேட்கிறான்.  நசரேயன் என்ற ஏசு அல்லது கொள்ளையன் பாரபாஸ் இவர்களில் யாரை விடுதலை செய்ய வேண்டும் எ...

எனைத் தேடும் மேகம்

  மேகம் அலைந்து கொண்டிருக்கும். அது என்ன தேடும்? மனம் அலைந்தபடியே இருக்கும். அது எதைத்தான் நாடும்?  கவி மனம் மேகத்தோடு பேசுகிறது.  மேகத்தைத் தூது விடுகிறது.  மேகத்தோடு விளையாடுகிறது. மேகம் தன்னைத் தேடுவதாகக் கற்பனை செய்கிறது.  சின்னச் சின்ன மேகம் தொட்டுப் பேசுவது போல உணருகிறது.  மேகம் விட்டு விலகிச் செல்லும் போது சோகம் கொள்கிறது. எண்பதுகளில் வந்த ஒரு பாடல் இப்படி எல்லாம் நினைவுகளைக் கிளறி வேடிக்கை பார்க்கிறது. இசை சங்கர் கணேஷ் இரட்டையர். கேட்கலாம்

இறங்கிய விடம்

  அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்   மாமியும் நீ, ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும  சுற்றமும் ஓர் ஊரும் நீ, துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்  நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே மேலே காண்பது திருநாவுக்கரசர் பதிகம். திருநாவுக்கரசர் திங்களூருக்கு வருகிறார். தோளில் உழவாரப் படை.  ஆலயத் திருப்பணியே கொண்ட லட்சியம். வயதில் தளர்ந்த உடல். ஆனால் தளராத மன உறுதி. இந்த ஊரில் ஒரு அதிசயம். எங்கு சென்றாலும் நாவுக்கரசர் பெயரில் நற்பணி நடக்கிறது. தண்ணீர்ப் பந்தல் நாவுக்கரசர் பெயரில். வாசகசாலை. நாவுக்கரசர் பெயரில்.  இப்படி எல்லாம். திருநாவுக்கரசருக்கு வியப்பு அடங்கவில்லை. எதிரில் தென்படும் ஒருவரிடம் விசாரிக்கிறார். இந்த தர்ம காரியங்களைப் புரிவது யார் என்று. அவர் அப்பூதி அடிகள் என்ற ஒருவர் திருநாவுக்கரசர் மேல் கொண்ட மாறாத அன்பினால் அவர் பெயரில் இந்த நற்பணிகளை செய்வதாகக் கூறுகிறார்.  இத்தனைக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை நேரில் கண்டதில்லை. திருந...

என் உள்ளில் எங்கோ

  பிள்ளைப் பருவத்திலே என்னைப் பேண வந்த ஒரு குரல். இப்படித்தான் வாணியின் குரலைச் சொல்ல வேண்டும். குரல் இனிமையானது. அழுத்தம் கூடியது. தெளிவான உச்சரிப்பு. அது எந்த மொழியாக இருந்தாலும். நல்ல ஞானம். பயிற்சி. ஹிந்துஸ்தானி இசையும் அதில் அடக்கம். எல்லா விதமான பாடல்களையும் சரளமாக மிகைத் தன்மை இன்றிப் பாடிச் சென்றிருக்கிறார்.  பாடல் வரிகளின் பொருள் உணர்ந்து பாடிச் சென்றிருக்கிறார். அது தனியாகப் பாடினாலும் இணைந்து பாடினாலும். வாணி தனியாகப் பாடிய பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். ஆகாயம் மழை பொழிஞ்சா மண்ணுலகில் இன்று தேவன் நாதம் என்னும் கோவிலிலே நீராட நேரம் நல்ல நேரம் என் உள்ளில் எங்கோ என் கல்யாண வைபோகம் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். பெண்மை தன் நிலையைப் பெரிதும் பேசுவதில்லை. அது உள்ளத்தில் எங்கோ கிடக்கிறது. ஆற்றாமையாக,  தேடலாக,கொண்ட தனிமையாக தவிப்பாக,   இப்படி எல்லாமும் உள்ளே இறுகிக் கிடக்கிறது. தண்ணென்ற நீரில் கிடக்கும் கல்லைப் போல.  மற்றவர்கள் மீது காட்டும் பரிவும் சின்னச் சின்ன அக்கறைகளும் மெல்லச் சுரந்தபடியே இருக்கிறது. வாணியின் குரல் பெண்மையின் உணர்வுகளை மெல்ல மெல்ல ...

சிரிக்கும் சலங்கை

  சிரி சிரி முவ்வா என்று ஒரு திரைப்படம். நானும் பாஸ்கரும் மதுரையில் இந்தப் படத்தைப் பார்த்தோம். பாஸ்கர் எனது ஒன்று விட்ட தம்பி. இந்தத் திரைப்படம் பார்த்ததை நினைவு கூர்ந்து எழுதியிருந்தான். ஜெயப்ரதா அறிமுகம் ஆனது இந்தத் திரைப்படம் என்று நினைக்கிறேன். இந்தப் படம் நெடுக ஓயாமல் ஆடிக் கொண்டே இருப்பார். மாற்றாந்தாய் காலில் சூடு வைத்தாலும் ஆடிக் கொண்டே இருப்பார். இரவில்.நிலவொளியில். தென்னை மர நிழலில்.  பகல் வெயிலில் பாறையில். மலைச் சரிவில். நீரலையில் இப்படி எல்லாப் பொழுதும் எல்லா இடங்களிலும் ஆடியபடியே இருப்பார். ஆடுவதில் அத்தனை விருப்பம்.  அவருடைய தோழன் சந்திரமோகன். அவரும் குனிந்து வளைந்து நிமிர்ந்து சலிக்காமல் இணைந்து ஆடுவார்.  கிராமத்தில் இருந்து விலகி நகரத்துக்குச் சென்று கலையின் உச்ச நிலையை அடைந்து எப்படிப் புகழ் ஈட்டுகிறாரகள் எ ன்பது கதை. மிகையும் நாடகத் தன்மையும் யதார்த்தமும் ஒரு வினோதக் கலவையில் உருவான படம். இந்தப் படத்தை இயக்கியவர் கே.விஸ்வநாத். எனக்கு அப்போதெல்லாம் G R விஸ்வநாத் என்பவரைத் தான் தெரியும். சொல்ல வேண்டியதில்லை. அவர் அந்நாளில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரர்...