“ஒருவர் மட்டும் திரும்பவில்லை” (And One did not return) என்று ஒரு சிறுகதை- எழுதியவர் கே.ஏ.அப்பாஸ். டாக்டர் துவாரக்நாத் கோட்னீஸ் என்பவரைப் பற்றியது- இந்தக் கதையை கே.ஏ.அப்பாஸ் சாந்தாராமிடம் கொடுத்தார்.சாந்தாராம் படத்தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர். நடிகரும் கூட. (தோ ஆன்கேன் பாரா ஹாத் நினைவுக்கு வருகிறதா?) அந்தக் கதையை திரைப்படமாக்க முடிவு செய்தார் சாந்தாராம்- படத்தின் பெயர் டாக்டர் கோட்னீஸ்கீ அமர் கஹானி”. அதாவது டாக்டர் கோட்னீஸின் அழியாச் சரிதம்.கே. ஏ.அப்பாஸ் திரைக்கதை எழுத வசந்த் தேசாய் இசை அமைத்த படம். டாக்டர் கோட்னீஸ் கீ அமர் கஹானி- இந்தப் படப் பெயரை நான் அறிந்தது அம்மாவிடமிருந்து. தனக்கே உரிய ஹிந்தி உச்சரிப்பில் அதைச் சொல்வார். அப்போது அவர் முகம் பிரகாசமாக இருக்கும். ஆனால் படத்தின் கதையைச் சொன்னதில்லை. நானும் கேட்டுக் கொள்ளவில்லை. 1946ல் வெளிவந்த இப்படத்தை யூ டியூபில் பார்த்தேன். இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக ஓடியது.டாக்டர் துவாரக் நாத் கோட்னீஸ் என்பவரின் உண்மைக் கதை. சிறு வயதில் சினிமா தியேட்டர்களில் பாட்டுப் புத்தகம் விற்பார்கள். பாடல்களுக்கு முன்னால் திரைப...