Skip to main content

Posts

Showing posts with the label இலக்கியம் சினிமா

வாராய் குண்டலகேசி

 ஐம்பெருங் காப்பியங்கள் யாவை? இது சாதாரணமாகப் பள்ளிப் பருவத்தில் நாம் எதிர்கொள்ளும் கேள்வி. அதற்குப் படித்துப் பதிலும் எழுதி இருக்கிறோம். பள்ளிப் பாடத்தில் சிலப்பதிகாரக் காப்பியத்தின் வழக்காடு காதை வந்திருக்கிறது. நங்காய், கள்வனைக் கோறல் கடுங்கோலன்று, வெண்வேற்கொற்றம் காண் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. எனது சகோதரி சீவக சிந்தாமணி படித்ததாக நினைவு. பின்னுமொரு சகோதரிக்கு மணிமேகலை பாடமாக வந்திருக்கிறது. காயசண்டிகையின் யானைப்பசி என்னும் நோயை மணிமேகலையின் அமுதசுரபி தீர்த்து வைக்கும். ஆனால் குண்டலகேசி, வளையாபதி போன்ற காப்பியங்களின் பாடல்கள் அறிந்து கொண்டதே இல்லை. அதாவது பாடப்பகுதி மூலம் அறிமுகமாகி மேலும் விரிவாகத் தன் முயற்சியில் அறிந்து கொள்ள வாய்க்கவே இல்லை. நண்பர் செளந்தர் குண்டலகேசியின் ஒரு பாடலைச் சில வருடங்களுக்கு முன் சொன்னார். அந்தப் பாடல் வருமாறு பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ இந்தப் பாடல் என்னை வியக்க வைத்ததோடு சிந்த...

இல்லாத சொந்தங்கள்

 தீபாவளி என்றால் வழக்கமான கொண்டாட்டம் தவிர பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவருவது பெரும் கொண்டாட்டம். புது ரிலீஸ் படத்தைத் தீபாவளி அன்றே பார்த்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் வயதில் மூத்தவர்கள்.இளைஞர்கள். அதாவது வேலை பார்ப்பவர்கள். கல்லூரியில் படிக்கின்றவர்கள். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு புரளும் வாய்ப்பு பெற்றவர்கள். எல்லோரும் புத்தாடை அணிந்து கொள்வார்கள். அம்மாக்களுக்கு நிறைய வேலை இருக்கும். வேலை எல்லாம் முடித்து விட்டு மாலை வேளையில் சிறு பொழுது மட்டுமே புத்தாடை அணிவார்கள். சிறுவர்கள் நாள் பூராவும் புத்தாடையுடன் திரிவோம்.  இன்று மூன்று தெய்வங்கள் என்ற நிரைப்படத்தில் வரும் தாயெனும் செல்வங்கள் என்ற பாட்டு ஞாபகம் வந்தது. தீபாவளி கொண்டாட்டத்தை இசைக்கும் பாடல். சாதாரணமாக வீடும் உறவுகளும் கொண்டாடும் பண்டிகை. புத்தாடை இனிப்பு பட்டாசு என்று. இந்தப் பாடலில் சொந்தமில்லாமல் வந்த யாரோ மூன்று பேர் சொந்தமாக ஆகித் தீபாவளி கொண்டாடும் காட்சி. பாடலின் இறுதியில் வரும் வரிகள் இப்படி அமைந்து இருக்கும். எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம் இல்லாத சொந்தங்கள் உருவாகலாம் தாயாக மகனாக உறவாட...

இழந்த காதல்

  சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய நாவல் A Tale of two Cities. அதில் வரும் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு  The fellow of no delicacy. அவன் தான் ஸிட்னி கார்ட்டன். அவன் ஒரு குறிக்கோளற்ற மனிதன். குடிகாரன். நிம்மதி இழந்து அலையும் ஒரு உயிர். அவனுக்கு லூஸி மானெட்டின் மீது காதல். கனிவும் நல்ல இயல்பும் கூடிய பெண்மை அது. எந்த விதத்திலும் அவன் அவளுக்குத் தகுதியானவன் அல்ல. இதை அறிந்நே இருக்கிறான். அவன் லூஸி மானெட்டைத் தனியே சந்தித்துப் பேசுவதுதான் இந்த அத்தியாயம். அவனுடைய கால்கள் அந்த கல் பதித்த நடைபாதையில் பல இரவுகள் நடந்திருக்கின்றன.  மது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்ததில்லை. துக்கத்தில் தான் தள்ளி இருக்கிறது. இலக்கை அறியாதது அவனது கால்கள். விடியும் வரை அவன் நடந்தது உண்டு.  தேவாலயங்கள், புராதனமான கட்டிடங்களில் சூரியனின் முதல் கிரணம் விழுகின்ற வரை. படுக்கையில் விழுந்தாலும் உறக்கம் அவனைப் பற்றியது இல்லை. இன்று இரவு அவனது கால்கள் ஒரு இலக்கை அறிகிறது. அது லூஸி மானெட்டின் இல்லம். வீட்டில் விளக்கு எரிகிறது.  அவன் உள்ளே நுழைகிறான். அவனது வரவு அறிவிக்கப் படுகிறது. மாடியில் லூஸி மானெட் தனித்து ...