ஐம்பெருங் காப்பியங்கள் யாவை? இது சாதாரணமாகப் பள்ளிப் பருவத்தில் நாம் எதிர்கொள்ளும் கேள்வி. அதற்குப் படித்துப் பதிலும் எழுதி இருக்கிறோம். பள்ளிப் பாடத்தில் சிலப்பதிகாரக் காப்பியத்தின் வழக்காடு காதை வந்திருக்கிறது. நங்காய், கள்வனைக் கோறல் கடுங்கோலன்று, வெண்வேற்கொற்றம் காண் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. எனது சகோதரி சீவக சிந்தாமணி படித்ததாக நினைவு. பின்னுமொரு சகோதரிக்கு மணிமேகலை பாடமாக வந்திருக்கிறது. காயசண்டிகையின் யானைப்பசி என்னும் நோயை மணிமேகலையின் அமுதசுரபி தீர்த்து வைக்கும். ஆனால் குண்டலகேசி, வளையாபதி போன்ற காப்பியங்களின் பாடல்கள் அறிந்து கொண்டதே இல்லை. அதாவது பாடப்பகுதி மூலம் அறிமுகமாகி மேலும் விரிவாகத் தன் முயற்சியில் அறிந்து கொள்ள வாய்க்கவே இல்லை. நண்பர் செளந்தர் குண்டலகேசியின் ஒரு பாடலைச் சில வருடங்களுக்கு முன் சொன்னார். அந்தப் பாடல் வருமாறு பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ இந்தப் பாடல் என்னை வியக்க வைத்ததோடு சிந்த...