Skip to main content

Posts

Showing posts from April, 2022

நகரத்து விளக்குகள்

  பல வருடங்களுக்கு முன்னால் மதுரையில் சார்லி சாப்ளின் திரைப்பட விழா ஒரு வாரம் நடந்தது. மாப்பிள்ளை விநாயகர் என்ற தியேட்டர். City Lights, The Great Dictator Modern Times என்று வரிசையாக சாப்ளின் படங்கள். இறுதி நாளன்று Limelight என்ற திரைப்படம். அது மட்டும் முழுக்க முழுக்க பேசும் படம்.  The Great Dictator ல் கொஞ்சம் பேச்சு உண்டு. ஏனைய படங்கள் முழுக்க முழுக்க மெளனப் படங்கள். இந்த விழாவில் ஒரு படத்தைக் கூட தவறவிடவில்லை. நானும் நண்பர் ராமச்சந்திரனும். இன்று வாட்ஸப்பில் The Great Dictator என்ற படத்தில் சாப்ளின் பேசும் வசனத்தின் எழுத்து வடிவத்தை பதிவு செய்து அனுப்பியிருந்தார். ஏறக்குறைய அதே சமயத்தில் நானும் சாப்ளினை நினைத்தபடி இருந்தேன். இந்த தற்செயல் வியப்பு அளித்தது. இன்று 16 ஏப்ரல் சாப்ளின் பிறந்த தினம் வேறு. நான் மேலே குறிப்பிட்ட சாப்ளின் திரைப்பட விழாவிற்கு முன்னரே பார்த்திருந்த திரைப்படம் City Lights. சாப்ளினை முதன் முதல் அறிந்தது இந்தத் திரைப்படம் மூலமாகத்தான். மூக்குக்கு கீழே வித்தியாசமாக மீசை. தலையில் தொப்பி. இறுக்கமான அளவில் சிறிய சட்டை மற்றும் கோட். தொளதொள பேண்ட். பழைய ஷூ. க...

சொக சுகா மிருதங்க தாளமு

  பட்டாம் பூச்சிகள் அலைந்தபடியே இருக்கும். செடிகள் மீதும் சின்னப் பூக்களின் மேலும். மெதுவாக நெருங்கி சிறகைப் பிடித்தால் மற்றொரு சிறகு படபடக்கும். விடுபடத் துடிக்கும். கைகளில் குறுகுறுக்கும். சிறகின் வண்ணங்கள் எண்ணெய் பிசுபிசுப்பாய் கைகளில் சேரும். வண்ணத்தைப் பார்க்கும் போது பட்டாம் பூச்சி பறந்து விடும். வெறுமை வந்து சேரும்.  அது போலவே  பழைய நினைவுகள்.  அப்போது பதினாறு என்ற இலக்கமிட்ட வீட்டில் இருந்தோம். நான் பதினாறு வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். அது வடக்கு பார்த்த வீடு. முதல் அறையின் சன்னல் வழியாக  முதல் சூரிய கிரணங்கள் வரும்.  பொன் தூசியைப் பரப்பி இருக்கும். அறையில் பாய் விரித்திருக்கும்.. ஹார்மோனியப் பெட்டி நடுவில் இருக்கும். ஒருபுறம் அக்கா. மறுபுறம் பாட்டு வாத்தியார். சங்கீத அலைகள் சுற்றிலும் பரவும். காது உடையவன் கேட்கிறான் என்பது பைபிள் வாசகம். பல காதுகளில் அது கேட்கும். நானும் கேட்பேன் பாடல்களை.. ராகங்களில் மனம் தோய்வேன். அந்த இலக்கணம் பிடிபடாது. அக்காவின் குரலும் பாடும் முறையும் கேட்க கேட்க பழகி விடும். அக்கா பாடிப் பார்த்துக் கொள்வார். சம்மணமிட்டு ...

திக்கற்ற பார்வதி

  நான் கல்லூரியில் புதுமுக வகுப்பில் இருந்தேன். வணிகத் திரைப்படங்களைத் தாண்டி எதுவும்  தெரியாது. அப்போது தான் திக்கற்ற பார்வதி என்ற திரைப்படச் சுவரொட்டியைப் பார்த்தேன். அந்தப் பெயரில் ராஜாஜியின் கதை படித்தது ஞாபகம் வந்தது. குடிப்பழக்கத்தின் கேட்டை விளக்கும் கதை. கருப்பனை "வேறே" வைத்தார்கள் என்று துவங்கும். அந்தக் கதைதான் திரைப்படம் ஆயிற்று என்று புரிந்து கொண்டேன். திரை அரங்கம் தொலைவில்  இல்லை.. அதன் பெயர் அப்போது ஜகதா. கையில் அபூர்வமாக காசு இருந்தது. தனியே கிளம்பி விட்டேன். அரங்கத்தில் கூட்டம் இல்லை. வெகு சிலர் தான் இருந்தார்கள். நிஜமாகவே காற்றாடியது. திறந்திருந்த மடங்கு கதவு வழியாக. மாலைக் காட்சி. இயற்கையாகவே இருட்டி விடும். எனவே கதவுகள் திறக்கப்பட்டு விடும். நடிகர் ஸ்ரீகாந்த் கருப்பனாக நடித்தார். அவருக்கு இணையாக பார்வதி என்ற பாத்திரத்தில் லட்சுமி. கருப்பு வெள்ளைப் படம். சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இயக்கியிருந்தார். அப்போது கேள்விப் படாத பெயர். கேள்விப் பட்டிருந்தாலும் பெரிதாக ஒன்றும் இல்லை. திரை நாயகர்களைச் சுற்றித்தான் திரைப்படம் என்பதே அப்போதைய கோட்பாடு.  கர...

அவரோ வாரார்

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. இது குறுந்தொகையில் வரும் பாடல். தேவகுலத்தார் என்பவர் எழுதிய பாடல். குறிஞ்சி நிலப் பாடல். தலைவி கூறுவதாக அமைந்திருக்கிறது. பாடலை இப்படி விளக்கலாம். குறிஞ்சி மரத்தின் கொம்புகள் கரியவை. வண்டுகள் அந்த மரத்தின் மலர்களிலிருந்து பெருமளவில் தேனைச் சேகரிக்கின்றன. இத்தகைய நாட்டின் தலைவனிடம் நான் நட்பு கொண்டேன்.  இந்த நட்பு பூமியைக் காட்டிலும் பெரியது. ஆகாயத்தைப் பார்க்கிலும் உயர்ந்தது. கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் கொண்டது. பின்னும் ஒரு பாடல். உறையூர் முதுகொற்றனார் இயற்றியது. அவரோ வாரார் முல்லையும் பூத்தன      பறியுடைக் கையர் மறியினத் தொழியப்     பாலொடு வந்து கூழொடு பெயரும்      யாடுடை யிடைமகன் சென்னிச்     சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே அவர் வரவில்லை.  முல்லை பூத்தது. பனை ஒலையைக் குடையாகக் கொண்டு வந்து குட்டிகளை உடைய ஆட்டின் திரளோடு சென்று தங்கு முன்பு பாலைக் கொண்டு...