சூல் கொண்டு அசையும் மேகத் திரள்கள் மழையில் நனைந்த பனைமர மேனி ………………. கரவு,தனிமை, அச்சம் கறுப்பு நிறத்தின் வெவ்வேறு சாயைகள்…….. இது எழுபதுகளில் வந்த நெரோலாக் பெயிண்ட்ஸ் விளம்பரக் கவிதை. அற்புதமான கவிதை. கறுப்பு நிறத்தைக் கொண்டாடிய கவிதை. கணையாழி பத்திரிக்கையில் பல வருடங்கள் முன்னால் படித்திருக்கிறேன். இந்த கவிதையைக் குறிப்பிட்டு சிலாகித்தவர் யாரென்று தெரியவில்லை. இரவில் இருள் வந்து சூழும். இருள் கறுப்பாக இருக்கும். காலம் பேர்வது ஓர் காரிருள் ஊழி ஒத்ததால் என்று பேசும் நம்மாழ்வார் பாசுரம். ஆரம்பப் பள்ளியில் ஆசிரியை எழுதும் பலகை கறுப்பாக இருக்கும். சாக்பீஸால் எழுதி அழித்து அழித்து ஒரு சாம்பல் நிறம் கொண்டு விடும். பள்ளிக்கு ஆய்வாளர் வரும் போது ஊமத்தை இலை கொண்டு அதைத் தேய்ப்பார்கள் மீண்டும் கறுப்பாகி விடும். சிறு வயதில் கண்ணா கருமை நிறக் கண்ணா என்று ஒரு பாடலைக் கேட்டிருக்கிறேன். அந்தக் கறுப்புப் பெண்ணை யாரும் மணம் செய்து கொள்ள மாட்டார்கள். மனம் பார்க்க மறுப்பவர் முன் என்னை ஏன் படைத்தாய் என்று வருத்தப் படுவாள். அழுகையாக வரும். நான் போகும் கிராமத்து வழியில் கரிசல் மண்ணைப் பார்க்க மு...