Skip to main content

Posts

Showing posts from November, 2025

தூக்கம் உன் கண்களை

 தூங்கும் நேரம் தவறிப் போனால் அதைப் பிடிப்பது கடினம். ஊரெல்லாம் துஞ்சுகிறது. உலகெல்லாம் நள்ளிருள் சூழ்கிறது. தூக்கம் வருவது இல்லை. எண்ணங்கள் வந்து சூழ்கிறது. இரவைக் கடத்துவது கடினமாகி விடுகிறது. Sleep dwell upon thine eyes, peace in thy breast. Would I were sleep and peace so sweet to rest. அது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் வரும் வசனம். காதல் வயப்பட்ட ரோமியோ அவளைப் பிரிந்து செல்லும் போது இப்படிச் சொல்கிறான். காதல் தூக்கத்தையும் நிம்மதியையும் பறித்து விடுகிறது. எனவே தூக்கமும் அமைதியும் அவளுக்கு வாய்க்கட்டும் என்று வாழ்த்துகிறான். தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்  உன் ஹ்ருதயத்தில் சாந்தி இளைப்பாறட்டும். அந்தத் தூக்கமும் அமைதியும் நானாக இருந்தால்… இது அம்பிகாபதி என்ற 1937ம் வருட திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் பேசும் வசனம். இந்த வசனத்தை எழுதியவர் இளங்கோவன். படத்தை இயக்கியவர் எல்லிஸ் ஆர் டங்கன். அம்பிகாபதி கவிஞன். கம்பரின் மகன். ஆனால் இந்தப் படத்தில் எம் கே டி கவிதையைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அமராவதியாக நடிக்கும் எம் ஆர் சந்தானலட்சுமியை அடிக்கடி காதல் பார...

தொலை தூரம் சென்று விடாதே 2

சென்ற பதிவின் தொடர்ச்சி......  தீவிலேயே அழகான ஒரு பெண்ணை மரியோ நேசிக்கிறான். நேசம் வளர நெருடாவின் கவிதைகள் உதவுகிறது. காதலியிடம் அந்தக் கவிதைகள் எல்லாம் தான் எழுதியதாகவே காட்டிக் கொள்கிறான். நெருடாவுக்கு எல்லாம் தெரியும். தபால்காரனின் காதலுக்கு தனது கவிதைகள் உதவியதில் அவருக்கு உள்ளூர மகிழ்ச்சியே. இருந்தாலும் மரியோவிடம கேட்கிறார். நான் எனது காதலிக்காக எழுதிய கவிதையை நீ எப்படி உனது காதலிக்கானதாகக் கொள்ளலாம்?. அது எனது எழுத்தைத் திருடுவது ஆகாதா என்று. மரியோ சட்டெனச் சொல்கிறான். கவிதை எழுதியவருக்கு உரியது இல்லை. எவருக்குத் தேவைப்படுகிறதோ அவருக்கு உரியது. காதல் மரியோவை சிந்தனை வயப்பட்டவனாக ஆக்குகிறது. மனதில் சொல்ல முடியாத ஒரு சோகத்தை ஏற்றுகிறது. அவனது காதல் ஏற்று கொள்ளப்படுகிறது. என்றாலும் காதலியை வளர்த்தெடுத்த அத்தை திருமணத்திற்குக் குறுக்கே நிற்கிறாள். எப்படியோ சம்மதம் பெற்று நெருதா சாட்சிக் கையெழுத்து இடத் திருமணம் நடைபெறுகிறது.  திருமண நாளன்று அக்கார்டியன் ஆனந்த இசை இசைக்கிறது. மதுக்கோப்பைகள உயருகின்றன. மகிழ்ச்சியான சேதி வருகிறது. நெருடாவுக்கு தந்த தண்டனை நீக்கப்பட்டு மீண்டு...

தொலை தூரம் சென்று விடாதே

 Don't go far off Don't go far off, not even for a day, because - because - I don't know how to say it: a day is long and I will be waiting for you, as in an empty station when the trains are parked off somewhere else, asleep. Don't leave me, even for an hour, because then the little drops of anguish will all run together, the smoke that roams looking for a home will drift into me, choking my lost heart. Oh, may your silhouette never dissolve on the beach; may your eyelids never flutter into the empty distance. Don't leave me for a second, my dearest, because in that moment you'll have gone so far I'll wander mazily over all the earth, asking, Will you come back? Will you leave me here, dying? Pablo Neruda தொலை தூரம் சென்று விடாதே  தொலை தூரம் சென்று விடாதே அது ஒரு நாள் ஆனாலும் கூட ஏனென்று சொன்னால்.. ஏனென்று சொன்னால்.. எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை ஒரு நாள் என்பது நீண்ட பொழுது நான் காத்திருப்பேன் காலியான ஸ்டேஷனில் ரயில் எல்லாம் எங்கோ நிறுத்தப்பட்டு உறங்க...

செளடையாவின் வயலின்

 வயலின் என்ற ஒன்றை நான் அறிந்தது வானொலிப் பெட்டி மூலமாக. ஆகாஷவாணி ஒலிபரப்பு துவங்கு முன் ஒரு இசை வரும். அது தான் வயலின் என்று பிற்பாடு தெரிந்தது. அந்த வயலினோடு சுருதி சேர்த்த வண்ணம் ஒரு தம்பூரா ஒலியும் ரீங்காரமிடும். அம்மா காபி போடுவதற்காக கரி அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைப்பார்கள். நீர் மெல்ல மெல்லக் சூடேறி கொதி நிலைக்கு வரும் போது ஒரு ஓசை எழும். சுருதி சேர்த்த தம்பூரா ஒலியோடு மனம் அதை ஒப்பிட்டுப் பார்க்கும். காபி போடும் போது அம்மா ‘பரிமள ரங்கா எழுந்திரும்’ என்று பாடும் பூபாளம் சுருதி சுத்தமாக இருக்கும். சிறு வயதில் கேட்ட ஒரு கச்சேரியில் வயலின் இசை ஒன்று இணைந்து ஒலித்தது. அந்த ஓசை மாறுபட்டு இருந்தது. அது யார் வாசித்தது என்று கேட்டு அறிய முயன்றேன். அந்த ஓலியை எழுப்பியவர் மைசூர் செளடையா என்று அறிந்தேன். அவர் வாசித்தது அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கு என்றும் தெரிந்து கொண்டேன். சாதாரணமாக வயலினில் நான்கு நரம்புகள் அல்லது ஐந்து இருக்கலாம். செளடையாவின் வயலினில் ஏழு நரம்புகள் இருக்கும். எனவே தான் நான் கேட்ட மாறுபட்ட ஒலி. எனவே தான் செளடையாவின் வயலின் பாடகர் குரல் ...