Skip to main content

Posts

Showing posts from January, 2024

மலர்களின் நடனம்

நடனத்திற்குப் பிறகு (After the Dance) டால்ஸ்டாய் எழுதிய கதை. அதன் துவக்க வரியை மேலே பாருங்கள். இந்தக் கதையைச் சொல்பவர் இவான் வாஸிலிவிச். தனது இளமைப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் அப்போது பல்கலைக்கழக மாணவன். ,படிப்பு, பனிச்சறுக்கு விளையாட்டு, குதிரையேற்றம்,  நண்பர்கள், இளமை,கொண்டாட்டம் இவையே வாழ்க்கை. ஒரு சமயம் நடன விருந்துக்குச் செல்கிறார். பிரபுக்களும் படைத் தளபதிகளும் மாதர்களும் நிறைந்த அறை. காலரியில் இசைக்குழு. தின்பதற்கு ஏராளமாய் பண்டங்கள். நதி போல வழிந்து ஓடும் ஷாம்பெயின். ஆனால் இவான் வாஸிலிவிச்சுக்குக் காதலின் போதை மட்டுமே  ஏறியிருந்தது. காரணம் மெல்லிய தேகமும் உயரமும்,, இனிமையும் கனிவும் ததும்பும் கண்களும் உடைய வரின்கா. செலுத்தப் பட்டவர் போல் வலியச் சென்று அவள் கைகளைப் பற்றி நடனம் ஆட அழைக்கிறார். இணக்கத்தோடு அழைப்பை ஏற்ற வரின்கா அவரோடு இணைந்து ஆடுகிறாள். அறை முழுதும் பரவி சுழன்று சுழன்று ஆடுகிறார்கள். வெள்ளை உடை அணிந்த அவளது அண்மை வாஸிலிவிச்சை வேறு ஒர் உலகத்திற்கு இட்டுச் செல்கிறது. இடையினில் கைகளை வளைத்தும் தோள் மீது கை வைத்தும் சிறி...

ஒரு ராகம் பழகியது

  சரஸ்வதி சபதம் என்று ஒரு திரைப்படம். எனக்கு சுமார் ஒன்பது வயது இருக்கும் போது பார்த்தேன். பார்தததோடு முடிந்ததா? படத்தின் வசனம் பாடல்கள் எல்லாம் வீட்டின் பின்புறச் சந்தின் முனையிலிருந்து ஒலிக்கும். வசனம் பாடல் வரிகள் மெட்டு எல்லாம். ஓலிபெருக்கிக் குழாய் வழியாக. எல்லாமும் மனதில் ஏறிவிடும். பள்ளிப் பாடங்களை விட விரைவாக. வீதி விளையாட்டில் சற்றே ஈடுபட்டாலும் மனம் பாட்டிலேயே நிற்கும். கேட்டதை அப்படியே மெட்டு மாறாமல் பாடிப் பார்ப்பது ஒரு சுகம்.  அதில் ஓரு பாடல் தெய்வம் இருப்பது எங்கே என்று. பின்னிட்டு நான் வேலைக்கு வந்த போது உத்தமபாளயத்தில் தங்க நேர்ந்தது.  அழகான சிறிய ஊர். ஆறு ஓடும். பச்சை வயல்களைப் பார்க்கலாம். அங்கே நாங்கள் தங்கியிருந்த விடுதியில் அறைகள் என்ற பெயரில் புறாக் கூண்டுகள் உண்டு.  இருவர் தங்கும் கூண்டுகள். வசதியிருந்தால் தனிப் புறாக்கூண்டு. எல்லோருக்கும் குளியலறை பொது. தனியறையில் தங்கியிருந்த ஓருவரோடு நட்பு கூடியது. அவர் நல்ல இசை ரசிகர். அவரிடம் ஒரு டேப்ரிகார்டர் உண்டு. அதில் இருந்து பாடல்கள் ஒலித்த வண்ணம் இருக்கும். இரவு உணவு சீக்கிரம் முடிந்து விடும். அவர...

புரியவில்லை

  Who walked past the window of my childhood and breathed on it? Who walked past in the deep night of childhood, that still was starless? With his finger he made a sign on the pane, on the moist pane with the ball of his finger, and then passed on to think of other things, leaving me deserted for ever. How should I be able to interpret the sign, the sign in the moist afterwards of his breath? It stayed there a while, but not long enough for me to be able to interpret it. For ever and ever would not have sufficed to interpret it. Par  Lagerkvist  யார் எனது குழந்தைப் பருவம் என்ற சன்னல் அருகே நடந்து செல்வது? நடந்து சென்று அதன் மீது மூச்சு விடுவது?  குழந்தைப் பருவம் என்ற ஆழம் கொண்ட இரவின் அருகே இன்னமும் நட்சத்திரங்கள் இல்லாத இரவின் அருகே யார் நடந்து செல்வது? விரலால் அவன் சன்னல் கண்ணாடி மீது ஏதோ குறி இட்டான் விரல் நுனியால் ஈரமாக இருந்த கண்ணாடி மேல் பிறகு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தத் தலைப்பட்டான்  என்னை நிரந்தரமாகக் கைவிட்டவனாய்   அவன் இட்டுச் சென்ற குறி...

இருள் இல்லாத இரவு

  பாரதி தெளிவாகத்தான் சொன்னார். அன்பு காண் மரியா மக்தலேனா ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து மேலும் சொன்னார். முன்பு தீய வடிவினைக் கொன்றால் மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும் பின்பு முடிக்கும் போது சொல்கிறார் பெண்மை காண் மரியா மக்தலேனா பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.  மரியா மக்தலேனா என்ற பெண் யேசுவைத் தொடர்ந்தபடியே இருந்தாள். அவர் பிரசங்கம் செய்யும் கூட்டங்களில் அவள் இருந்திருக்கிறாள். ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஏழு பேய்கள் அவளைப் பிடித்திருந்ததாகப் புதிய ஏற்பாடு சொல்கிறது. யேசு அவளோடு பேசியிருக்கிறார்.  யேசு சிலுவையில் ஏற்றப்பட்டபோது அங்கு இருந்த மூன்று பெண்களில் மரியா மக்தலேனா ஒருத்தி. யேசுவின் ஏனைய சீடர்கள் எல்லாம் சிலுவை ஏற்றத்தின் போது சிதறி விலகி ஓடிவிட்டார்கள்.  மரியா மக்தலேனா இறுதி வரை யேசு உடன் இருந்தாள். யேசு மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததைக் கண்டவள் மரியா மக்தலேனா. கண்டதை உலகறியச் சொன்னவளும் அவளே. கலீல் ஜிப்ரான் எழுதியது. Jesus the Son of Man என்ற  பெயரில் ஆங்கிலத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு பகுதி  மரியா மக்தலேனா யேசுவைப் பற்றி பேசுவதாக அமைந்தி...

துயரம் விலக்கிய தூக்கம்

  I have seen the pain and suffering That I longed for each and every foodgrain With whom should share my sorrows? I haven’t found a good friend yet My beloved mother had said child, grow up, You have to become the arms of your father You will bear the home on your shoulders So stand up on your feet And I was drunk in youthfulness away from such motherly advice And friend, I never knew in which direction my life will take me And friends, it has been years since I had bread baked by mother, I never thought my life would be spent without seeing home again O people, we strangers have seen much oppression, For building a house, we left our country And friend Aamir, what sorrow keeps you away from sleep? I’ve seen many people go from rags to riches —Translated from Gojri Aamir Chauhan, Jammu & Kashmir From Outlook Magazine நான் வலியைக் கண்டது உண்டு துன்பத்தையும் ஒவ்வொரு தானிய மணிக்காகவும் நான் ஏங்கியிருக்கிறேன்  என் துயரங்களை நான் யாரிடம் பகிர்ந்து கொள்வது ஒரு நல்ல நண்பனை நான் ...

மேகங்களின் நிழலில்

  மலர் நள்ளிரவில் அவிழ்ந்து மணம் பரப்புகிறது.  அது ஒரு ரகசியம் வெளிப்படுவது போல் இருக்கிறது. இசை காதில் வந்து சேருகிறது. அதிலும் எத்தனையோ ரகசியங்கள்.   நேற்று ஒரு பாடலைக் கேட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு கேட்டேன். மீரா என்ற மிகப் பழைய திரைப்படத்தில் வரும் ஒரு பாடல். எழுபதுகளில் வந்த ஒரு ஹிந்தித் திரைப்படம். அதன் பெயர் ஷர்மிளி. மதுரையில் அந்தப் படம் வெளிவந்தது. ஷர்மிளி என்ற திரைப்படத்தின் தலைப்பை அழகாக “நாணமுள்ள நங்கை” என்று மொழிபெயர்த்து போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். அதில் ஒரு பாடல். மேகா சாயே ஆதீ ராத் என்று துவங்கும். மேகங்களின் நிழலில் பாதி இரவு என்று பொருள் கொள்ளலாம். நிழல்கள் என்ற திரைப்படத்தைப் பார்க்க நண்பர்கள் எல்லாம் விழுந்து அடித்து ஓடினார்கள். நான் சற்றுத் தாமதித்து விட்டேன். நான் பாரக்கும் போது அந்தப் பாடல் காட்சி இடம் பெறவில்லை.  அந்தப் பாடல் தூரத்தில் நான் கண்ட உன் முகம் . “தூக்கு மரத்தின் நிழலில்”என்று ஒரு தொடர்..  C.A. பாலன் எழுதியது. பிரபல வார இதழில் வந்தது.  அதை அடிப்படையாகக் கொண்டு எடுத்த படம் “இன்று நீ நாளை நான்”. மதுரையில் சென்ட்ரல்...

இல்லாதது ஒன்று

  காற்று காதில் ஓசையைக் கொண்டு வந்து சேர்க்கிறது. அந்த ஓசையில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அதற்கு ஒரு வடிவம் இருக்கிறது. வார்த்தைகள் சேர்ந்து ஒரு முறைமை அதற்கு வழங்கி வருகிறது. அது இசை என்று பெயர் கொள்கிறது. ராகங்களை வெறும் கேள்வி அறிவைக் கொண்டு அறிவது ஒரு வினோதமான அனுபவம். ராகங்களுக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. அது சுரங்கள் வழியாக வந்து சேருகிறது. அதற்கு ஒரு ஏறுமுகம் மற்றும் இறங்கு முகம் இருக்கிறது. இசையோ இலக்கணமோ அறியாத நிலையில் ஒரு ராகத்தை எப்படி அடையாளம் கொள்வது? கேட்டுக் கேட்டுப் பழகி அந்த ஓசையின் ஒழுங்கு பிடிபடுகிறது. ராகங்களுக்கும் பெயர் உண்டு தானே? கற்று உணர்ந்தவர்கள் சொல்லும் போது அந்தப் பெயர்கள் எல்லாம் புழங்கி வருகிறது. பெயரில் என்ன இருக்கிறது? இன்று ஒரு ராக ஆலாபனையைக் கேட்டேன். அதை நீங்களும் கேளுங்கள். இந்த ராகத்தின் பெயர் சிம்மேந்திர மத்யமம். எனக்கு எட்டு வயது இருக்கும் போது ஒரு பாடலைக் கேட்டிருக்கிறேன். அது ஒரு ஓசை. அது ஒரு ஒழுங்கு. அந்தப் பாடலை வரிகளோடும் பாடியவரோடும் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் மீதும் தான் முதலில் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது.  பின்பு இசையை...

நாளை வந்து சேரும்

  பாஸ்டர்நாக் எழுதிய நாவல் டாக்டர் ஷிவாகோ. அதில் பிற்சேர்க்கையாக டாக்டர் ஷிவாகோவின் கவிதைகள் வரும். எனது முந்தைய பதிவு Three of Us என்ற திரைப்படம் குறித்து. அதில் ஷைலஜா பல ஆண்டுகளுக்குப் பின் பள்ளித் தோழன் பிரதீப் காமத்தைச் சந்திக்கிறாள். எது அவளை அந்த ஊருக்குக் கொண்டு வந்து சேர்த்தது? அவள் இங்கே வந்து என்ன தேடுகிறாள்?  என்ன தொலைந்து போயிற்று? இப்படி எல்லாம் அவன் யோசிக்கிறான். அவன் கவிதை எழுதுபவன் தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்று ஒரு கவிதை எழுதுகிறான். அந்தக் கவிதையின் தலைப்பு தோற்றுவாய். கவிதை வருமாறு ஓசையின் காட்சி நாளைய தினத்தைத்  தாங்கிக் கொள்வதற்கு நம்பிக்கையின் ஒரு கல் மலையேற்றத்தில் மூச்சு வாங்கியபடி புரட்டுவதற்கு இன்று விளையாடித் தீர்ந்த பின்பு தானே நாளை வந்து சேரும் நீ ஏற்கனவே வழியைக் கண்டடைந்து விட்டாய், எனவே கேள் நாம் அந்த நகரத்தை நோக்கி நடப்போம்  வாழ்க்கை எத்தனை தூரம் நம்மை இட்டுச் செல்கிறதோ அத்தனை இன்று விளையாடித் தீர்ந்த பின்பு தானே நாளை வந்து சேரும் ஆயிரம் ஆயிரம் முத்துக்களை நீ சேகரித்துக் கொள்  இறுதி நாளில் நீ வெறும் கையோடு தான் செல்ல வேண்டி இ...

நினைவுகள் உலர்ந்து போகும்

ஷைலஜா திடீரென்று  சொன்னாள். வெங்குலாவுக்குப் போக வேண்டும். முந்தைய தினம் தான் விருப்ப ஓய்வு பெற்றிருந்தாள். அவளுக்கு குடும்ப நீதிமன்றத்தில் மண விலக்குப் பிரிவில் வேலை. கணவர் தீபாங்கருக்கு ஒன்றும் புரியவில்லை.  ஏன் என்று  கேட்டதற்கு நான் ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அங்கு படித்தேன். உடனே சென்று அந்த ஊரைப் பார்க்க வேண்டும். நாளை எனது நிலைமை எப்படி ஆகும் என்று சொல்ல முடியாது என்கிறாள்.  மறுநாளே ரயிலைப் பிடிக்கிறார்கள். வெங்குலா ஒரு அழகிய ஊர். கொங்கன் கடற்பகுதியில் அமைந்த ஊர்.  தென்னையும் வாழையும் இன்ன பிற மரங்களும் செழித்து வளர்ந்திருக்கும் ஊர். ஷைலஜாவிற்கு சமீபமாக மறதி ஏற்படுகிறது. செய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்கள் மறந்து விடாமல் இருக்க டைரியில் குறித்து வைக்க வேண்டியிருக்கிறது. எப்போதும் அவள் கைப்பையில் அந்த டைரி இருக்கிறது. அது ஒரு நரம்பு சம்பந்தமான கோளாறு. Dementia. தனது நிலைமை அவளுக்குப் புரிகிறது. பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற அதுவும் ஒரு காரணம்.  நினைவுகள் உலர்ந்து மறைந்து விடுமா? வெயிலில் ஈரம் காய்ந்து மறைந்து விடுவது போல. இந்த நில...