Skip to main content

Posts

Showing posts from August, 2025

மதிய உணவிற்குப் பிறகு

  After Lunch After eating lunch, I feel so sleepy. Waking later, I sip two bowls of tea, then notice shadows aslant, the sun already low in the southwest again. Joyful people resent fleeting days. Sad ones can't bear the slow yers. It's those with no joy and no sorrow— they trust whatever this life brings. Bai JuYi மதிய உணவிற்குப் பிறகு மதியம் சாப்பிட்ட பின் தூக்கமாக வருகிறது  விழித்து எழுந்த பின் இரண்டு கோப்பை தேநீர் பருகினேன் பின்பு கண்டு கொண்டேன் சாய்வான கிரணங்களை தென் மேற்கில் ஏற்கனவே இறங்கியிருக்கும்  சூரியனை சந்தோஷமான மனிதர்கள் விரைந்து போகும் நாட்களுக்கு  வருந்துகிறார்கள் துயரமானவர்கள்  வருடங்கள் மெல்ல நகருவதைத்  தாங்கிக் கொள்கிறார்கள் இல்லை மகிழ்ச்சியோ துயரமோ அற்றவர்கள் வாழ்க்கை கொண்டு வருவது எதுவாயினும் நம்பிக்கை கொள்கிறார்கள் சீனக் கவிதை ஆங்கிலம் வழியாக தமிழில் தி சந்தானம்

இழந்து போன குரல்

 . வாழ்க்கையில் எல்லாம் கடந்தபடியே இருக்கிறது. பழகிய மனிதர்கள் தொலைவிலேயே நின்று விடுகிறார்கள். ஆனால் அவர்களது குரல் காலமெல்லாம் தொடர்ந்து வருகிறது. பிரியத்துடன் பேசிய குரல்கள். ரகசியம் பகிர்ந்த குரல்கள். ரசனையான பேச்சில் பரவசம் காட்டிய குரல்கள். இப்படி எல்லாம்.. எல்லாம்…. சமீபத்தில் இந்தக் கவிதையைப் படித்தேன். ஒரு சின்னக் கவிதை என்னவெல்லாம் செய்து விடுகிறது? Idealized, beloved voices of those who have died or are lost to us like the dead. Sometimes they speak in our dreams; and our mind hears them in our thoughts. And with their echo for an instant echoes of the first poetry in our lives come back like music that fades into the distant night Constantine Cavafy இழந்து போன குரல் போற்றிய குரல்கள் பிரியமான குரல்கள் இறந்தவர்கள் குரல்கள் இழந்து போன குரல்கள் சில பொழுது அவை கனவில் நம்மோடு பேசுகின்றன எண்ணங்களில் நமது மனது கேட்கிறது ஓரு கணம் அவை எதிரொலிக்கும் போது வாழ்வின் முதல் கவிதை போல ஒலிக்கிறது அது இரவில் தொலைவில் தேய்ந்து மறையும் இசை போன்றே இருக்கிறது தமிழில்  தி சந்தானம்