Skip to main content

Posts

Showing posts from February, 2025

ஒன்றும் புதிதல்ல

  மரணம் தழுவுகின்ற இறுதிக் கணம். நேருவின் படுக்கைக்கு அருகே ஒரு கவிதைப் புத்தகம் இருந்தது. அது ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற அமெரிக்கக் கவிஞனின் கவிதைத் தொகுப்பு. Stopping by the woods என்று ஒரு கவிதை. அதன் இறுதி வரிகள் நேருவால் அடிக்கோடு இடப்பட்டு இருந்தது. அந்த வரிகள் The woods are lovely, dark and deep But I have promises to keep  And miles to go before I sleep, And miles to go before I sleep நேருவின் மனம் நுட்பமானது. அவருக்கு வாய்த்தது கவி மனம். இயற்கை சார்ந்த ரசனை, தத்துவ விசாரம், உலகளாவிய பார்வை இவை எல்லாம் அவருக்கு இருந்தது. அவர் நிறையப் படித்தார். படிப்பு அவரது எழுத்தைச் செழுமைப் படுத்தியது. நிறைய எழுதினார். சிறை வாழ்க்கை அதற்கு உதவியது. காச நோயாளியான தனது மனைவிக்கு Pearl S Buck எழுதிய The Good Earth என்ற புத்தகத்தைப் படித்துக் காட்டும் மனிதராக அவர் இருந்தார்.  இன்று ராபர்ட் ஃப்ராஸ்டின் சில கவிதைகள் படிக்கக் கிடைத்தது. ஆங்கில மூலத்தையும் தமிழில் அதைச் செய்ததையும் கீழே தந்திருக்கிறேன். Nothing new One moment when the dust to-day Against my face was turned to spray, I dr...

கரை காணாப் பறவை

  வெங்கண்திண் களிறடர்த்தாய்  வித்துவக்கோட்டு அம்மானே! எங்குப் போய் உய்கேன் உன் இணையடியே அடையல் அல்லால் எங்கும் போய்க் கரை காணாது  எறிகடல் வாய் மீண்டேயும்  வங்கத்தின் கூம்பேறும்  மாப்பறவை போன்றேனே  குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி பறவை ஒன்று பாய்மரக் கொடியிலிருந்து பறந்து செல்கிறது. கீழே கடல் நீர் அசைந்தபடி இருக்கிறது. எந்தப் பக்கம் பறந்தாலும் பறவையால் கரையைக் காண முடியவில்லை. மீண்டும் அது பாய்மரக் கொடியின் உச்சிக்கே வந்து சேருகிறது. அது போலவே வித்துவக்கோட்டில் உறையும் எனது இறைவனே! வலிமையான யானையைக் கொன்றவனே! உனது திருவடியை அடையாமல் நான் எங்கு சென்று வாழ்வேன்? எங்கு சுற்றி அலைந்தாலும் உன் இணையடியே வந்து சேர்வேன்.  “தருதுயரம் தடாயால் உன்சரண் அல்லால் சரண் இல்லை “என்று துவங்கி வரும் பத்து பாசுரங்களில் மேலே கண்ட பாசுரம் ஒன்று. எல்லாமே அற்புதமான பாசுரங்கள். தாய் சினந்தாலும் அவள் முழங்காலையே வந்து கட்டிக் கொள்ளும் குழந்தை. மருத்துவன் வாளால் அறுத்தாலும் சுட்டாலும் அவனையே நம்பி இருந்து அன்பு பூணும் நோயாளி. கதிரவனின் தழல் எரித்தாலும் அவனையே நோக்கி மலரும் தா...

மோகக் குழப்பம்

                                 I இரவு எங்கும் விரிந்திருந்தது மரத்தின் கிளைகள் உயர்ந்து இருந்தது இலைகள் உதிர்ந்த கிளைகளின் ஊடாக நிலவு தெரிந்தது பேரிருள் சிறு வெளிச்சத்தைத் தழுவிக் கிடந்தது நிலவில் சிறு களங்கம் ஏறி இருந்தது நிலவு சற்றே மங்கியது போல் இருந்தது “நிலவுக்குப் பின்னால் நிழல் இருக்கிறது நிழலுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?” என்று அவளிடம் கேட்டேன். சுடர் போலப் புன்னகை சிந்தினாள்  பின்னும் முகத்தில் அருள் காட்டினாள்  மோகமது தீர்ந்த பாடில்லை                                   II ஒரு நாள் கனவில் யமுனா வந்தாள் பாதம் வாழை இலைக் குருத்தைப் போலப் பொலிந்தது அவள் கழுத்தைச் சுற்றியிருந்த புடவையில்  சுட்டி சுட்டியாக ஈரம் சோப்பு போட்டு அலம்பிய முகம் துடைத்து விட்ட பளிங்குக் கல் போல இருந்தது நெற்றியில் பொட்டு இல்லை. நான் பாபுவைப் பற்றிக் கேட்டு இருக்கக் கூடாது யமுனாவின் தலை குனிந்தது  அவள் முகம் கட...

காதல் கடிது

  காதல் கடிது கொப்பும் கிளையுமாக நெடிது வளர்ந்திருந்தது அந்த மரம் பச்சை இலைகளோடு ஒரு செழுமை அதனைச் சூழ்ந்திருந்தது கனிகளைத் தாங்கியபடி ஒரு தனி அழகு கொண்டு விளங்கியது நான் அதைப் பார்த்து பார்த்துப் பரவசம் கொண்டேன் என் காதலை ஒரு நாள் இல்லை ஒரு நாள் சொல்லி விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன் அதற்கான தனிமை வாய்க்காமலே இருந்தது ஒரு நாள் மழை பெய்தது. மரத்தின் மேனி எல்லாம் நனைந்து போனது இலைகள் எல்லாம் பளபளத்தது  ஒரு அற்புதமான அழகுடன் மரம் இருந்தது. மழை விட்டதும் நான் மெல்ல அதனிடம் சென்றேன் என்னுடைய காதலைச் சொன்னேன் மரம் மறுமொழி ஏதும் சொல்ல வில்லை. லேசாகக் காற்று வீசியது இலைகளில் தங்கியிருந்த மழைத் துளிகளை மட்டும் என் மேல் தெளித்து விட்டு சும்மா இருந்தது மரம் நகராது நான் நகர்ந்து விடக் கூடியவன் அது மரத்துக்கும் தெரிந்திருந்தது ஏற்கப் படாத காதல் எனக்குள்ளே காலம் முழுவதும் இருந்தது தி சந்தானம்