Skip to main content

Posts

Showing posts from April, 2026

பூ உதிரும்

  கையிலிருந்த ரோஜாவை அவள் கூந்தலில் சூட்டிய பின், ஒரு விநாடி அமைதியாக அவள் முகத்தையும், மலர் சூடிய கூந்தலின் அழகையும் பார்த்தான்; தொடர்ந்துசொன்னான் அவன்; “இதோ இந்தப் பூ, செடியிலே இருக்கறப்போ நல்லாத்தான் இருந்தது. இது நல்லா இருக்கே பறிக்காம இருப்போம்னு விட்டுட்டா, அது உதிராம இருக்கப் போகுதா? இப்ப நான் அதைப் பறிச்சு உன் தலையிலே வெச்சிருக்கேன்…நீ அதைப் பறிச்சி உனக்கு இஷ்டமான ஒரு தெய்வத்துக்கு மாலை கட்டிப் போடறே… அதிலேதான் அந்தப் பூவுக்கு… உதிர்ந்து போகிற சாதாரணப் பூவுக்கு ஒரு மகத்தான அர்த்தம் இருக்கு… இல்லியா?… அது மாதிரிதான், மனுஷன்னு பொறந்தா..பூத்திருக்கிற மலர் உதிர்ந்து போகிற மாதிரி… மனுஷனும் ஒரு நாளைக்கு செத்துத்தான் போவான்… அப்படி விதி முடிஞ்சி, வியாதி வந்து சாகிற மனுஷன் அந்த உயிரை, தான் நேசிக்கிற தேசத்துக்காக, தான் விரும்பும் ஒரு லட்சியத்துக்காக அர்ப்பணம் பண்ணினா, அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கு இல்லியா? பெண்ணின் கூந்தலை அலங்கரிக்கும் பூவைப்போல, புனிதமான தெய்வத்துக்கு அர்ச்சிக்கப்பட்ட மலரைப் போல… கௌரி, பூ…உதிரும்…மனுஷனும் சாவான்…” என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்கையில், தா...

மரணம் என்பதும் தற்செயல்

 எழுபதுகளில் கேட்டது பெருமளவில் ஹிந்திப் பாடல்கள். அதில் ஆஷாவின் பாடல்களும் உண்டு. பெரிதும் ஆடல் நங்கைகளுக்கு அவர் பாடுவார். கதாநாயகிக்கு அவருடைய அக்கா பாடுவார். ஒரு பாடல் பியா தூ அப் தூ ஆஜா என்று. ஆர் டி பர்மனின் இசை.  திகில் இசையுடன் துவங்கும். பன்னிரண்டு மணி அடிக்கும். டிரம்பட் போன்ற வாத்தியங்கள் ஆசையில் முழங்கும். ஆஷாவின் பெருமூச்சுக்கள் இந்தப் பாடல் முழுதும் கலந்திருக்கும். இளைஞர்களின் இதயத் துடிப்பு எகிறி விடும். அதே ஆர் டி பர்மனின் இசையில் இவர் பாடிய தம் மாரோ தம் என்ற பாடல் உலகப் பிரசித்தம். Gay abandon. அது தான் இந்தப் பாடல். ஜெயகாந்தன் பற்றி ஒரு டாகுமெண்டரி எடுக்கப் பட்டது. அதில் ஒரு காட்சி. மேல் துண்டை தலையில் முண்டாசாகக் கட்டியிருப்பார். மனிதர் ஆனந்தமாகப் புகையை இழுத்து விடுவார். தம் மாரோ தம் என்று பாடுவார். ஜெயகாந்தன் வரை போய்ச் சேர்ந்திருக்கிறது அந்தப் பாடல். ஜவானி திவானி என்று ஒரு படம். கல்லூரி மாணவ மாணவிகளின் ஆதரவோடு பிரமாதமாக ஓடியது மதுரையில். ஆர் டி பர்மன் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட். எல்லாப் பாடல்களிலும் ஆஷாவின் பங்கு உண்டு. ஜானே ஜா.. நஹி நஹி என்ற பாட...