Skip to main content

Posts

Showing posts from June, 2023

நான் யாரும் இல்லை

  அது 1993 ம் வருடம். மதுரையில் நாடக விழா நடந்தது. கோமல் சுவாமிநாதன் பொறுப்பேற்று நடத்தினார். பல நவீன நாடகக் குழுக்கள் பங்கேற்றன.  ஞாநியின் பரீஷா குழுவும் அதில் அடக்கம்.அன்று துவக்க விழா. நான் அரங்கிற்கு வெளியே இருந்தேன். விழாவைத் துவக்க இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா. ஒரு கார் அவரை இறக்கி விட்டுச் சென்றது. இறங்கிய அவர் என் மீது ஏறக்குறைய மோதுவது போல ஆயிற்று. சென்ற வாரக் குமுதத்தில் 21ம் விளிம்பு என்று அவர் எழுதிய கட்டுரைத் தொடரில் என்னுடைய கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை சிலாகித்து எழுதியிருந்தார். எனது நண்பன் ஆர்க்கே நான் கையெழுத்து இட்டுத் தந்திருந்த கவிதைத் தொகுப்பின் ஒரு பிரதியை அவரிடம் தந்திருக்கிறான். நான் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்த போது இதை சுஜாதா குறிப்பிட்டார். "In future everybody will be famous for at least a few minutes" என்று அவர் எப்போதோ எழுதியிருந்ததைக் குறிப்பிட்டேன். சுஜாதா கண்களை அகல விரித்துப் பார்த்தார்.  ஓரு கல்லூரி மாணவனுக்கு உரிய பரபரப்பும் வேகமும் அவரது பேச்சில் இருந்தது.  "கலாப்ரியா வந்திருக்கிறாரா" என்று ஆசையுடன் கேட்ட...

அன்றே அப்போதே வீடு

  வீடென்று எதனைச் சொல்வீர்? அது இல்லை என் வீடு ஜன்னல் போல் வாசல் உண்டு எட்டடிச் சதுரம் உள்ளே பொங்கிட மூலை  ஒன்று புணர்வது மற்றொன்றில் நண்பர்கள் வந்தால் நடுவிலே குந்திக் கொள்வர் தலை மேலே  கொடிகள் ஆடும் கால்புறம் பாண்டம் முட்டும் கவி எழுதி விட்டு செல்ல கால் சட்டை மடித்து வைக்க வாய் பிளந்து வயிற்றை எக்கிச் சுவரோரம் சாய்ந்த பீரோ அது மாலன் எழுதிய கவிதை. எண்பதுகளில் வாசித்திருக்கிறேன். அது மாலன் சாவி பத்திரிக்கையில் எழுதிய சிறுகதையின் துவக்க வரி. சிறுகதையின் தலைப்பு " கல்லுக்குக் கீழும் பூக்கள்".  எந்திரமாகிப் போன மனித வாழ்க்கை. அதில் கொஞ்சம் போல கவிதை.   சுமைகள் வந்து அழுத்தும் நடுத்தர வர்க்க வாழ்க்கை. அதில் துளியூண்டு ரசனை. கதையைச் சொல்லும் "இவன்" காலைப் பனியில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிறான். தண்டவாள இரும்புக்கும் குவிந்திருக்கும் சரளைக் கற்களுக்கும் இடையே நீல மலர்கள் மலர்ந்து கிடப்பதைப் பார்க்கிறான். இது தான் கதை.  "மனே" என்று ஒரு கன்னடத் திரைப்படம். மனே என்றால் வீடு. கிரீஷ் காசரவல்லி இயக்கம். நசிருதீன் ஷா மற்றும் தீப்தி நாவல் நடித்திருந்தனர்.  தேசிய விர...

என் ரோஜாப் பதியன்கள்

  தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் பெண்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள் கயிற்றில தொங்குவார்கள். அல்லது விஷம் என்று ஒரு குப்பியில்  எழுதியிருக்கும். அதிலிருந்து எதையோ எடுத்துச் சாப்பிட்டு விட்டு உயிரை விடுவார்கள். காலம்  செல்லச் செல்ல  தூக்க மாத்திரைகளை அதிகமான எண்ணிக்கையில் விழுங்கி விட்டு உயிர் துறப்பார்கள். ஆற்றில் விழும் கதாநாயகிகளும் உண்டு. டால்ஸ்டாய் எழுதிய முக்கியமான கதை அன்னா கரனினா. அன்னா என்ற அந்த பரிதாபத்திற்குரிய பெண் ரயிலின் குறுக்கே பாய்ந்து விடுவாள்.  தற்கொலை என்பது கண நேரத்தில் எடுக்கப் படும் முடிவு. அந்தக் கணத்தைக் கடந்து விட்டால் எண்ணம் மாறிவிடும். ஆழமான உளவியல் காரணங்களும் அதீதமான மன அழுத்தமும் தற்கொலைக்குக் காரணமாகிறது. பெரும்பாலும் அது ஒரு கவன ஈர்ப்பு. ஆத்மாநாம் அற்புதமான கவிஞர்.  கவிதைக்காகவே "ழ" என்று ஒர் பத்திரிக்கை நடத்தி வந்தார்.  இந்த உலகத்தில் அவர் எதிர்பார்த்தது கொஞ்சம் அன்பும்  சிறிது கவனமும் தான். நிராகரிக்கப் படுவது பெரிய கொடுமை. கவிதை ததும்பும் உள்ளம் அதிக மனவெழுச்சிக்கு உள்ளாவது இயல்பு. துள்ளுவதும் அடங்குவதும்...

சைக்கிள் திருடர்கள்

  சைக்கிள் என்று ஒரு வாகனம் வெகுவாகப் புழக்கத்தில் இருந்த காலம் ஒன்று இருந்தது. பலருக்கு அது உற்ற துணைவன். தொழிலாளிகளின் வாகனம். ஆலைச் சங்கொலி ஒலித்து முடிந்ததும் அணி அணியாக சைக்கிள்கள் வருவது என் கண்கள் நிறைந்த சிறு வயதுக் காட்சி. அப்படி ஒரு வாகனம் எனக்குச் சொந்தமாக இருபத்தைந்து வயது முடிய வேண்டியிருந்தது. அதில் வியப்பு இல்லை. ஆனால் அதை வசப்படுத்த எனக்கு அத்தனை ஆண்டு பிடித்தது. சைக்கிள் பழகும் முயற்சி வெவ்வேறு வயதில் தோல்வியிலேயே முடிந்தது. முதன் முதலில் ஒரு கோடை விடுமுறையில் ராமநாதபுரத்தில் பழக முயன்றேன். ஊரணிக் கரையில் சுவரோடு சுவராக வாலும் உயர்த்திய கையும்  வாயுமாக இருந்த ஆஞ்சனேயர் மேலேயே மோதி சைக்கிளோடு கீழே விழுந்தேன். பிரேக் என்ற ஒன்று இருப்பதையே அறியவில்லை.  அடுத்த கோடையில் அரை மணிக் கூறுக்கு வாடகை  சைக்கிள் எடுத்தும் எனக்குப் பத்து நிமிடமே ஓட்டக் கிடைத்தது. ஓட்டுவது  என்பது இருபுறமும் நண்பர்கள் சைக்கிளைத் தாங்கிப் பிடித்திருக்க பெடலை மட்டும்  நாம் சுற்றுவது.  திடீரென்று இருபுறமும் தாங்கிப் பிடிப்பவர்கள் இல்லை என்ற உணர்வு வரும். காற்றில் மிதப்ப...