Skip to main content

Posts

Showing posts from May, 2026

வாடிய ரோஜா மலர்ந்த போது

எனக்கு சத்யஜித் ரேயின் படங்கள் பிடிக்கும். அநேகமாக அவரது எல்லாப் படங்களும் பார்த்திருக்கிறேன். சத்யஜித் ரேக்கு நேருவைப் பிடிக்கும். அவர் நேருவைப் பற்றிச் சொல்வார். "நான் நேருவுக்கு மிக நெருக்கமாகவே உணருகிறேன். எனக்கு நேருவை ரொம்பப் பிடிக்கும். நான் அவரை நன்கு புரிந்து கொண்டேன். நானும் ஒரு விதத்தில் கிழக்கும் மேற்கும் சேர்ந்த கலவை தான். சுதந்திரப் போக்கு, மேற்கத்திய மதிப்பீடுகளின் மீது ஒரு புரிதல், கீழை மற்றும் மேலை மதிப்பீடுகளின் சேர்க்கை நேருவிடம் இருந்தது. அது காந்தியிடம் இல்லை. ஆனால் ஒரு மனிதனாக, ஒரு குறியீடாக, பல்லாயிரம் பேரை காந்தி தொட்டு அடைந்தது அசாதாரணமான ஒன்று. ஆனால் ஒரு மனிதனாக நேரு என்ன செய்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. எப்போதும். தாகூரைப் புரிந்தது போல. இந்த முக்கோணத்தில் தாகூரை விட்டு விட முடியாது." உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? சத்யஜித் ரே Sight and sound என்ற பத்திரிக்கைக்கு 1970 ம் வருடம் கொடுத்த பேட்டியில் இவ்வாறு சொன்னார் என்று Mainstream என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள். ஐ.ஏ.எஸ் பரீட்சைக்கு படிப்பவர்கள் அப்போது எல்லாம் Ma...