Skip to main content

Posts

Showing posts from April, 2024

ஒரு இளைய கவிக்கு

                              Mahmoud Darwish                                    Fady Joudah ஒரு இளைய கவிக்கு BY MAHMOUD DARWISH TRANSLATED BY FADY JOUDAH தமிழில் தி சந்தானம்  எங்களது விவரங்களை  நம்பாதே. மறந்து போ உனது  சொந்த    வார்த்தைகளிலேயே தொடங்கு ஏதோ நீதான் முதலாக கவிதை எழுதுபவன் போல  அல்லது நீ தான் கடைசிக் கவி என்பதைப்  போல  எங்களது படைப்புகளை நீ  படித்தாலும் எமது  நீட்சியாக நீ எழுதுவது இருக்க வேண்டாம் துன்பத்தின் புத்தகத்தில் எங்களின் தவறுகளைத் திருத்தி எழுதியதாக  அவை இருக்கட்டும் யாரிடமும் கேட்காதே நான் யாரென்று  உனது அன்னையை  யாரென்று உனக்குத் தெரியும் தானே தந்தை..  தந்தை என்றால், உனக்கு நீயே தந்தையாக இரு உண்மை வெண்மை. அதன் மேலே எழுதி விடு காக்கையின் மையைக் கொண்டு உண்மை கருமை அதன் மேலே எழுதி விடு கானலின் ஒளியைக் கொண்டு பருந்தோடு உனக்கு சண்டை என்ற...

இன்று

                தாமஸ் கார்லைல் ஸ்காட்லாண்டைச் சேர்ந்தவர். எழுத்தாளர்,வரலாற்று ஆசிரியர் தத்துவவியலாளரும் கூட. இவர் எழுதி நன்கு அறியப்பட்ட புத்தகம் French Revolution A History என்பது. சமீபத்தில் இவருடைய கவிதை ஒன்று படிக்கக் கிடைத்தது. அதைத் தமிழில் செய்தேன்          Today So here hath been dawning Another blue Day: Think wilt thou let it Slip useless away. Out of Eternity This new Day is born; Into Eternity, At night, will return. Behold it aforetime No eye ever did: So soon it forever From all eyes is hid. Here hath been dawning Another blue Day: Think wilt thou let it Slip useless away. Thomas Carlyle                    இன்று  இதோ இங்கே உதயம் இன்னொரு நீல தினம் இதை வீணில் நழுவிச் செல்ல விடுவாயா? நிரந்தரத்திலிருந்து பிறக்கும் இந்தப் புதிய தினம் நிரந்தரத்திற்கே இரவில் திரும்பி ...

ஏழிசையின் சுவை

  கண்ணுள் நின்றகலான் கருத்தின் கண் பெரியன் எண்ணில் நுண்பொருள் ஏழ் இசையின் சுவைதானே வண்ண நன்மணி மாடங்கள் சூழ் திருப்பேரான் திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றே 10.8.8 நம்மாழ்வார் திருவாய்மொழி Never leaves my eye A greater one for conception A subtle thing for contemplation The flavour of seven notes of music He is, the lord of Thiruper , A town surrounded by colorful mansions, He entered my heart today for sure To encompass it In English T Santhanam  Note Thiruper (Koviladi) is a town 20 miles away from Tiruchirappalli

குள்ளச்சாமியும் நானும்

        குள்ளச்சாமியும் நானும்                          சிறுகதை                                                   தி சந்தானம் எங்கள் பகுதிக்கு ஓரு சாமியார் வந்தார். கட்டை குட்டையான உருவம். இளந்தொந்தி. வெண்பற்கள். நீண்டு வளர்ந்த தாடி. எடுப்பான மூக்கு. சுடர் விடும் கண்கள்.  இது அவருடைய புற அடையாளம்.   அவருடைய அகத் தேடல்கள் இன்னதென்று பிடிபட்டது இல்லை. அவர் அதிகம் பேசுவது இல்லை.  சில வார்த்தைகள் பேசுவார் அரிதாக. அதில் பொய் இருக்காது.  எளிய உண்மைகள் இருக்கும்.  சூரியன் கிழக்கில் தானே உதிக்கும்....

சந்தேகத்தின் நிழல்

  சுஜாதா எழுதிய ஒரு  கதை ஒரு விபத்தின் அனாடமி. பல வருடங்களுக்கு முன்னால் படித்திருக்கிறேன். விபத்து ஒன்று நடக்கிறது. ஹிட் அண்டு ரன் (Hit and run) கேஸ். குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பது கதை. அது சுஜாதாவின் ஆரம்பகாலக் கதைகளில் ஒன்று. அனாடமி என்ற வார்த்தையை அறிந்தது மேலே சொன்ன கதையைப் படிப்பதற்கும் பல வருடங்கள் முன்னால்.  மதுரை மருத்துவக் கல்லூரிக்கு பள்ளி மாணவர்கள் ஒரு கூட்டமாகச் சென்றோம்.அங்கே ஒரு கல்விக் கண்காட்சி. ஒவ்வொரு துறையாக அழைத்துச் சென்றார்கள்.அதில் ஒர் துறை அனாடமி பற்றியது. அனாடமி என்றால் உடற்கூறு இயல் என்று பின்புதான் தெரிந்தது. அந்த அறையில் ஒரு உயிரற்ற உடல் இருந்தது. நடுத்தர வயது மதிக்கத்தக்க மனிதனின் உடல். கைகளில் ரப்பர் உறை அணிந்திருந்த ஒரு அண்ணன் உடற் பாகங்களைச் சுட்டிக் காட்டி ஏதேதோ விளக்கம் சொல்லியபடி இருந்தார். மிகச் சமீபமாக Anatomy of a fall என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப் பட்ட படம். இதை இயக்கியவர் ஜஸ்டின் ட்ரட்.  இதை டைப் அடிக்கும் போது சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது இவருக்குக் கிடைத்திருக்கிறது. ...

காதல் மையல் ஏறினேன்

  உரைக்க வல்லேன் அல்லேன் உன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின் கடைக்கண் என்று செல்வன் நான் காதல் மையல் ஏறினேன் புரைப்பு இல்லாத பரம்பரனே பொய் இலாத பரஞ்சுடரே இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன் நம்மாழ்வார் திருவாய்மொழி I have no capacity for words When shall I reach the end of the water flooded with Your infinite Greatness? I have become mad with your Love  You are the Supreme,  the Spotless , A Light that knows no lie As the learned people sing your praise aloud, I also do sing your praise In English T Santhanam