சின்ன விஷயங்கள் காலையில் பருவநிலை மாறியது. பனி உருகி அழுக்கான தண்ணீராக உருக்கொண்டிருந்தது. அதன் சில துளிகள் சிறிய தோள் உயரப் பின்கட்டு நோக்கிய சன்னல் வழியே வழிந்தது. கார்கள் தெருவில் பனிச் சகதியில் விரைந்து கொண்டிருந்தன. வெளியே இருள் வரத் துவங்கியது. உள்ளேயும் இருள் ஆரம்பித்திருந்தது. அவன் படுக்கையறையில் சூட்கேஸில் துணிகளைத் திணித்தபடி இருந்தான். அப்போது அவள் கதவருகே வந்தாள். “நீ போவதில் எனக்கு சந்தோஷம்.. நீ போவதில் எனக்கு சந்தோஷம்.. நான் சொல்வது கேட்கிறதா?” என்றாள். அவன் சூட்கேஸில் எதையோ திணித்தபடி இருந்தான். “….மகனே! நீ போவதில் எனக்கு சந்தோஷம்” அவள் அழ ஆரம்பித்தாள். “என்னை முகத்துக்கு நேராக உன்னால் பார்க்க முடியுமா?” சொல்” என்றாள். பின்பு படுக்கை மீது குழந்தையின் புகைப்படம் இருந்ததைப் பார்த்தாள். அதைக் கையில் எடுத்தாள். அவன் அவளைப் பார்த்தான். அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனையே வெறித்தாள். பின்பு திரும்பியபடி முன்னறைக்குச் சென்றாள். அவன் “அதை இங...