I இரவு எங்கும் விரிந்திருந்தது மரத்தின் கிளைகள் உயர்ந்து இருந்தது இலைகள் உதிர்ந்த கிளைகளின் ஊடாக நிலவு தெரிந்தது பேரிருள் சிறு வெளிச்சத்தைத் தழுவிக் கிடந்தது நிலவில் சிறு களங்கம் ஏறி இருந்தது நிலவு சற்றே மங்கியது போல் இருந்தது “நிலவுக்குப் பின்னால் நிழல் இருக்கிறது நிழலுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?” என்று அவளிடம் கேட்டேன். சுடர் போலப் புன்னகை சிந்தினாள் பின்னும் முகத்தில் அருள் காட்டினாள் மோகமது தீர்ந்த பாடில்லை II ஒரு நாள் கனவில் யமுனா வந்தாள் பாதம் வாழை இலைக் குருத்தைப் போலப் பொலிந்தது அவள் கழுத்தைச் சுற்றியிருந்த புடவையில் சுட்டி சுட்டியாக ஈரம் சோப்பு போட்டு அலம்பிய முகம் துடைத்து விட்ட பளிங்குக் கல் போல இருந்தது நெற்றியில் பொட்டு இல்லை. நான் பாபுவைப் பற்றிக் கேட்டு இருக்கக் கூடாது யமுனாவின் தலை குனிந்தது அவள் முகம் கட...