வயலின் என்ற ஒன்றை நான் அறிந்தது வானொலிப் பெட்டி மூலமாக. ஆகாஷவாணி ஒலிபரப்பு துவங்கு முன் ஒரு இசை வரும். அது தான் வயலின் என்று பிற்பாடு தெரிந்தது. அந்த வயலினோடு சுருதி சேர்த்த வண்ணம் ஒரு தம்பூரா ஒலியும் ரீங்காரமிடும். அம்மா காபி போடுவதற்காக கரி அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைப்பார்கள். நீர் மெல்ல மெல்லக் சூடேறி கொதி நிலைக்கு வரும் போது ஒரு ஓசை எழும். சுருதி சேர்த்த தம்பூரா ஒலியோடு மனம் அதை ஒப்பிட்டுப் பார்க்கும். காபி போடும் போது அம்மா ‘பரிமள ரங்கா எழுந்திரும்’ என்று பாடும் பூபாளம் சுருதி சுத்தமாக இருக்கும். சிறு வயதில் கேட்ட ஒரு கச்சேரியில் வயலின் இசை ஒன்று இணைந்து ஒலித்தது. அந்த ஓசை மாறுபட்டு இருந்தது. அது யார் வாசித்தது என்று கேட்டு அறிய முயன்றேன். அந்த ஓலியை எழுப்பியவர் மைசூர் செளடையா என்று அறிந்தேன். அவர் வாசித்தது அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கு என்றும் தெரிந்து கொண்டேன். சாதாரணமாக வயலினில் நான்கு நரம்புகள் அல்லது ஐந்து இருக்கலாம். செளடையாவின் வயலினில் ஏழு நரம்புகள் இருக்கும். எனவே தான் நான் கேட்ட மாறுபட்ட ஒலி. எனவே தான் செளடையாவின் வயலின் பாடகர் குரல் ...