Skip to main content

Posts

Showing posts from May, 2024

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

நீர்க்குமிழிகளோடு ஒரு பேச்சு

  கவிதை என்பது ஓயாமல் சளசளப்பது அல்ல. கவிதை என்பது நமக்குள்ளே ஆழத்தில் ஒரு மெளனத்தை விதைப்பது. தேவதச்சனின் கவிதைகளைப் படித்து முடித்தவுடன் ஒரு நிசப்தம் உள்ளே இறங்குகிறது. இந்தக் கவிதைகளைப் படியுங்களேன். அரசமரம் அரசமரத்திற்குக் கீழ் நின்றுகொண்டிருந்தேன் ஒவ்வொரு இலை விழும்போதும் ஒரு அரசமரம் வீழ்ந்து சரிந்தது சாலையில் வேகமாய் விரையும் வாகனங்களின் சக்கரத்தை ஒட்டிப் பறக்கும் , அரசிலைகள் வாகனத்தில் ஏறவும் இல்லை சக்கரங்களை நிறுத்தவு மில்லை                   ****************** தாய்மொழி என்னைவிட இளைஞர்களிடம் நான் பேசுவதில்லை எனது முதுமையின் பாடல்கள் அவர்களுக்கு எதுக்கு? என்னைவிட முதியவர்களிடமும் பேசுவதில்லை நேற்றைய உலகம் எப்பவோ காணாமல் போய்விட்டதே பூனைகளிடமும் பூச்சிகளிடமும் மரங்களோடும் பேசுவதில்லை அவைகளுக்குப் பதிலுக்குப் பேசத் தெரிவதில்லை என்னோடும் பேசுவதில்லை இரண்டு நான்களை என்னால் தாங்க முடியாது நான் பேசுவதெல்லாம் நீர்க்குமிழிகளோடுதான் அவைகளுக்கும் எனக்கும் ஒரே‌ தாய்மொழி என்பதால்   ...

மரம் அறியும்

  I carry inside myself my earlier faces, as a tree contains its rings.                                          Tomas Transformer மரங்கள் எப்படியாவது கவர்ந்து இழுத்து விடுகிறது. நடை பழகும் காலை நேரங்களில் பெரிய பெரிய மரங்களைப் பார்த்தபடியே நின்று விட நேர்கிறது.மரத்தின் கீழே அமர்ந்து கண்மூடி அசையாமல் எவரேனும் இருந்தால் அவரும் மரமே என்றே தோன்றுகிறது. மாலை நேரங்களில் இள வயது ஆணும் பெண்ணும் மரத்தடியில் தான் பேசுகிறார்கள். என்ன ஒரு பேச்சு. தீராத பேச்சு. மரத்தின் இலைகள் ஒன்றுடன் ஒன்று பேசுவதைப் போல. மரத்தடியில் தான் கெளதமனுக்கு ஞானம் பிறந்தது. பின்பு அவர் புத்தர் ஆகிவிட்டார். அவர் பல நாட்கள் அலைந்து திரிந்தார். மனிதர்கள் துக்கத்தில் வீழ்ந்து அல்லல் படுகிறார்கள். இதைத் தீர்க்க வழி ஏதும் உண்டா என்றே அவருக்குச் சிந்தனை.  பல நாள் அலைச்சல். பல நாள் பசி. சுருண்டு விழுந்து விடுகிறார். அப...

மஞ்சள் வெயில்

  அப்போது எல்லாம் சென்னையில் மியூஸியானோ என்று ஒரு இசைக்குழு இருந்தது. அதை வெற்றிகரமாக நடத்தி வந்தவர் பெயர் ரமணன்.  எழுபது கால கட்டங்களில் ஹிந்தித் திரை இசைப் பாடல்கள் தான் கோலோச்சியது. அந்த இசைக் குழுவில் ஓரு பெண் பாடுவார். புடவையைக் கால் நகம் வரை போர்த்தியபடி தான் பாடுவார். மிகவும் அழுத்தமான அவரது குரல் பலரையும் கவர்ந்தது. பாடும் போது எந்த அசைவும் இருக்காது. குரல் மட்டும் எழும்பி வந்து அரங்கை நிறைக்கும். அந்தக் குரலுக்கு உரியவர் பெயர் உமா வெங்கட்ராமன். எம்.ஏ. படித்த பெண். அமர்க்களமாகப் பாடுகிறாள் என்றெல்லாம் சொல்வார்கள். ஒரு கண்ணியமான தோற்றத்தில் என் வயது ஒத்தோருக்கு எல்லாம் அப்போது ஒரு தமக்கையைப் போல காணுவார். பாடலில் நெருடலான வரிகள் வந்தால் அதைப் பாடுவதைத் தவிர்த்து விடுவார். பின்னாளில் ரமணனை மணந்து கொண்டு உமா ரமணன் ஆனார். இவரைப் பின்னணிப் பாடகியாகத் தமிழ் திரை உலகம் வரித்துக் கொண்டது.  இவருடைய குரலுக்கும் திறமைக்கும் ஏற்றாற் போலவே பாடல்களும்  இவருக்கு அமைந்தன. ஆனந்த ராகம், பூங்கதவே தாள் திறவாய், தாகம் எடுக்கிற நேரம், ஆகாய வெண்ணிலாவே, நீ பாதி நான் பாதி என்று எத்த...

கல்யாணத் தேன் நிலா

  அப்பா அடிக்கடி சொல்வது உண்டு. திரை இசைப் பாடல்கள் இன்ன ராகம் என்று எல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று. மெய் தான். இசையமைப்பாளரின் கற்பனையில் சில போது ஓரிரு ராகங்களின் சேர்க்கையாக முடிவது உண்டு. பழைய திரை இசைப் பாடல்களில் ஓரு  ராகத்தின் அம்சம் முழுமை பெற்று ஒலிப்பதை அவர் குறிப்பிடுவார். அப்படி அவர் சொன்ன பாடல் சாருகேசி ராகத்தில் அமைந்த மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடல். இது போன்று பல மிகப் பழமையான பாடல்கள் பற்றி அவர் சொன்னது உண்டு. பின்னிட்டு அப்பாவிற்கு சில திரை இசைப் பாடல்கள் பிடித்தமானதாக இருந்தது. எழுபது வயதை அவர் கடந்த பிறகு. கலப்படம் இல்லாத சுத்தமான ராக லட்சணத்தோடு அது அமைந்திருக்க வேண்டும். அதனால் தான் அவருக்கு அவை பிடித்துப் போயிருக்கும் என்று நான் கருதிக் கொண்டேன். அவரிடம் எதுவும் இதைப் பற்றிக் கேட்டதில்லை.  தொலைக்காட்சி பெட்டியில் இந்தப் பாடல் ஒலிக்கும் போது ஆஹா என்று அவர் ரசிப்பதைப் பார்த்து இன்புற்று இருக்கிறேன். அந்தப் பாடல் கல்யாணத் தேன் நிலா என்பது. சில பாடல்கள் கேட்க மிகவும் நன்றாக இருக்கும். பார்க்க முடியாது. இந்தப் பாடல் அப்படி இல்லை. பார்...