கீதாஞ்சலி பதின்பருவத்துப் பெண். வாழ்வதின் சத்தியத்தையும் துடிப்பையம் ஒரு சங்கீத அலையாய் தனக்குள் உணர்ந்தவள். சகல சாத்தியங்களும் நம்பிக்கைகளும் அவளுக்குள்ளே கிளர்ந்து எழுகின்ற பருவம்.. ஆனால் விதி பொல்லாதது ஆயிற்றே? அவளுக்கு மூளையில் புற்று நோய் என்று கண்டு அறியப்படுகிறது. நோயின் வலியும் சிகிச்சையின் வேதனையும் அவளைப் பற்றுகிறது. சாவு மெல்ல மெல்ல நெருங்குவதை உணருகிறாள் தனிமையும் தூக்கமின்மையும் அவளை வாட்டுகிறது. அவள் எழுதுகிறாள. கிடைத்த காகிதங்களில் எல்லாம் எழுதுகிறாள். எல்லாம் கவிதைகளாய் எழுதுகிறாள். நோயையும் மரணத்தையும் கவித்துவத்துடன் எதிர் கொண்ட இந்த இளம் கொடியைப் பற்றி அருண் சத்தா ஒரு அற்புதமான டாகுமண்டரிப் படம் எடுத்திருக்கிறார். கீதாஞ்சலியின் கவிதைகளின் தமிழாக்கம் இதோ 1 துயிலே! நாம் கடைசியாக என்று பார்த்தோ...