I was once a tree- all green. Very tall, bobbing in the wind. I had leaves, branches. And occasional flowers. I, too, had a name. A woman. A mother. Once a tree. I brush them aside, My tears, an upright foliage Lying heavy on my chest. Ranu Uniyal This Could Be a Love Poem for You Collection of Poems நான் முன்பொரு காலம் ஒரு மரமாக இருந்தேன் மிகவும் உயரம் எங்கும் பசுமை எனக்கு இலைகள் இருந்தன கிளைகள் இருந்தன அரிதாக மலர்கள் எனக்கும் ஒரு பெயர் உண்டு ஒரு பெண். ஒரு அன்னை முன்பு ஒரு மரம் நான் அதை எல்லாம் ஒதுக்கித் தள்ளுகிறேன் நிமிர்ந்திருக்கும் இலைகள் போல எனது கண்ணீர்த் துளிகள் இதயத்தில் கனமாக விழுந்து கிடக்கிறது ரானு உனியல் தமிழில் தி சந்தானம் பெண் மரமாக தன்னை நினைக்கிறாள். மலராக முகிழ்க்கிறாள். கனியாக இனிக்கிறாள். தண்ணென்று நிழல் தருகிறாள். சுற்றம் என்னும் பறவைகள் எல்லாம் அருகில் கூடிக் கலகலப்பாய் சிரிப்பதை ரசிக்கிறாள். ஜெய்ஹிந்த்புரம் என்றெல்லாம் மதுரையில் ஒரு பகுதிக்குப் பெயர் இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பதினைந்து வருடம் ஆகியிருந்தது. நேரு என்று ஒரு தலைவர் இருந்தார். ...