Skip to main content

Posts

Showing posts with the label அமுதப் பாசுரங்கள் ஆங்கிலத்தில்

யானே நீ

  யானே என்னை அறியகிலாதே, யானே, என் தனதே என்றுஇருந்தேன், யானே நீ, என் உடைமையும் நீயே, வானே ஏத்தும் எம் வானவர் ஏறே.                                                    2.9.9 நம்மாழ்வார் திருவாய்மொழி Yaane ennai ariyakilathe Yaane en thanadhe enru irundhen Yaane nee, en udaimaiyum neeye  Vaane ethum vanavar yere Nammalwar Thiruvaimozhi. 2.9.9 விண்ணும் புகழ்கின்ற வானவர் தலைவனே! எனக்கு என்னையே தெரியவில்லை. ஆனாலும் நான் எனது என்றே இத்தனை காலமும் இருந்தேன்.  இப்போது அறிந்து கொண்டேன். நான் நீ தான். என்னுடைய உடைமைப் பொருளும் நீ தான். Even the Me in me did not know Me And so I thought everything was about Me and mine all along  I realise now that I am You, You are my possession Our Lord of the Celestials, majestic like a bull, You are glorified by the Sky In English T Santhanam

எங்கும் அவன்

  சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் எங்கும் தானாய நங்கள் நாதனே 1.8.9 நம்மாழ்வார் திருவாய்மொழி Discus and Conch He has in his hands It's Him everywhere He is our Master In English T Santhanam

உலகெல்லாம் நள்ளிருள்

  ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்  நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால் பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால் ஆரெல்லே வல்வினையேன் ஆவிகாப் பாரினியே  நம்மாழ்வார் திருவாய்மொழி ஊர் முழுதும் உறங்குகிறது. இந்த உலகம் முழுதும் இருள் சூழ்ந்து அடர்ந்து இருக்கிறது. நீர் எல்லாம் அலைகள் அடங்கி தெளிவாக இருக்கிறது. இரவு மிகவும் நீண்டு வளர்ந்தபடி இருக்கிறது. உலகத்தை எல்லாம் முழுதும் உண்டவன், பாம்பின் மேல் பள்ளி கொள்பவன் இன்னும் வரவில்லையே? எனது உயிரை இனி யார் காப்பாற்றுவார்கள்? The whole place is in slumber The whole world is pitch dark The waters still and clear The night is longer than long He who had the entire world He who has serpent as his bed He has not come,  Who shall then deliver me of my sins And save my soul? Nammalwar Thiruvaimozhi In English T Santhanam

கிடந்த கடல்

திரியும் காற்றோடகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் எரியும் தீயோடிரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை சுரியும் பல் கருங்குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே                3.6.5 நம்மாழ்வார் திருவாய்மொழி The wind that wanders The sky that expands The earth compacted  The lying sea The raging fire The Sun, the Moon, the Gods And everything else complete Is His appearance… The dark skinned, The lotus eyed, Kannan,The Lord of Heaven With black hair that curls and A crown that gleams   In English T Santhanam

உறக்கம் போனது

  ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடிவை எல்லாம் எளிமையால் இட்டென்னை  ஈடழியப் போயினவால் குளிர் அருவி வேங்கடத்து  என் கோவிந்தன் குணம் பாடி அளி அத்த மேகங்காள்  ஆவி காத்திருப்பேனே  நாச்சியார் திருமொழி Oh merciful clouds! My glow, My colour, My bangles, My thought, My sleep, All these l have lost I am weak I shall sing your  praise The Master of Cowherds My Lord of the seven Hills Of cold water falls Thus shall I save my soul In English T Santhanam

மலையும் அசையவில்லை

நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும் நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும் நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே                                                                                           7.4.3 நம்மாழ்வார் திருவாய்மொழி இப்பாசுரத்தில் பெருமான் வராக உருவம் எடுத்து மண்ணைத் தனது கொம்பால் இடந்து பூமியைத் தன் பற்களில் கொண்ட செய்கையைப் பேசுகிறது. அப்படி அவன் செய்யும் போது மண்ணும் அசையவில்லை. மலையும் அசையவில்லை. கடலும் அசையவில்லை. They tilted not They were secure in their place The seven isles on the earth  The...

வெட்டி மறையும் மின்னல்

  மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே மின்னல் வெட்டி மறைகிறது. அது போலவே உயிர் உறையும் இந்த உடல்கள்.  சில பொழுதே வாழ்கிறது. எனவே இறைவனையே நீங்கள் நினைத்திருங்கள்   Transient like a lightning, The bodies where the soul rests This being so You think of the Lord always  The bodies where the soul rests are impermanent. Like a lightning that splashes across the sky only for a brief while. So think of God always நம்மாழ்வார் திருவாய்மொழி In English T Santhanam

நினைப்பும் மறப்பும்

  நம்மாழ்வார் திருவாய்மொழி ஆறாம் பத்து மூன்றாம் திருமொழியில் பாசுரங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன.  பாசுரங்கள் நெடுகிலும்  ஒன்றுக்கு ஒன்று முரணான வார்த்தைகள் நயம்பட செறிவான பொருள் கொண்டு அமைந்திருக்கிறது. படிக்கப் படிக்க எல்லையில்லாத பரவசம் பெருகுகிறது.  சில பாசுரங்களைப் பார்க்கலாம். புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய் எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய் திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் கண்ணன் இன்னருளே கண்டுகொள்மின்கள் கைதவமே?     நாம் கண்ட பொருள் எல்லாம் கண்ணனின் இன்னருள் என்று ஆகும் போது பொய்ம்மையும் துன்பமும் என்ன செய்து விடும்? இதை அறிந்து கொள்க. புண்ணியமும் பாவமும் அவனே.  இணைதலும் பிரிதலும் அவனே நினைப்பும் மறப்பும் அவனே. இருப்பதும் இல்லாததும் இவை அல்லாததுவும் அவனே. வலிமையான மாடங்கள் சூழ்ந்த திருவிண்ணகர் நகரில் அவன் இருக்கின்றான்.  திருவிண்ணகர் கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன்(ஒப்பிலியப்பன்) கோவில் என்று நீங்கள் அறிவீர்கள். Oh Deceit, Oh Sufferings, Realise this Everything is His sweet Grace He is...

ஆழி எழ

  ஆழி எழச் சங்கும் வில்லும் எழ திசை வாழிஎழத்தண்டும்வாளும்எழஅண்டம் மூழி எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே 7.4.1 நம்மாழ்வார் திருவாய்மொழி The discus came rising The conch came rising The bow came rising The greetings from the directions, The shaft and the sword, The bubbles as the Universe broke open The Head of my Lord, His feet And His Time came rising As He had the World In English T Santhanam

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...