Skip to main content

தாகூர் என்ற ஆன்மிகவாதி

ரவீந்திர நாத் தாகூர் வங்காளம் தந்த ஒப்பற்ற மனிதர். கவி. காந்தியை மகாத்மாவாக

கண்டவர். காந்திக்கு இவர் குருதேவ். இருவரும் முரண்பட்டாலும்

தமக்குள் மேன்மையான உறவைப் பேணினர். முரண்பட்ட கருத்தைப் பகிர்ந்தாலே

சமூகத் தளங்களில் வெறுப்பு உமிழப்படும் காலம் இது. இப்போது இருவரையும் நினைத்தால் கணகளில் நீர் கசிகின்றது.   தாகூர் கீதாஞ்சலி என்ற படைப்புக்காக

தனது 52 வது வயதில் நோபல் பரிசு பெற்றார் .


விடுதலை பெற்று உயர்ந்தெழுந்த ஆன்மாவின் உன்னதப் படைப்புகள் அவர்

கவிதைகளில். எனது தேர்வாகச் சில கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழ்

ஆக்கியிருக்கிறேன். மிஸ்டிக் (mystic) தனமை மிளிரும் கவிதைகள்.




                                   1


நீ என் வாழ்க்கையின் ஆணி வேராக இருக்கிறாய்

ஒரு வேளை அதுதான் தவறா?

மறந்தவனாய் நான் நடக்கிறேன்


மலர்களை நான் புறக்கணிக்கிறேன் அல்லவா?

நடசத்திரங்களையும் கூட


எனினும் நான் சுவாசிக்கும் காற்றில்

அவை சுகந்தம் தருகின்றன

எனது மறதியின் பிழைகளை

ராகங்களால் நிரப்புகின்றன.


மறதிக் கடலின் மஹாஆழத்தில் நான்

என் நாளங்களில் உன் அலை அதிர்வுகள்


என் கணகள் உன்னைப் பார்ப்பதில்லை

நீ என் கண்களில் குடி புகுந்துள்ளாய்

நீதான் பசுமையில் பச்சை

நீலத்தில் ஊதா

உன்னில் என் மொத்த உலகின் இசைவு எல்லாம்

நான் அறியாமல்

வேறு யார் அறியாமலும்


எனது பாடல்கள்

உனது ராகங்களையே தொடுகிறது


நீயே கவியின் உள்ளத்தில் இருக்கும் கவி


நீ பிம்பம் அல்ல

எழுதிய ஓவியமும் அல்ல


ஒரு அறியாத புலரியில் 

நீ என்னுடன் இருந்தாய்

பின்பு

இரவில் நான் உன்னை இழந்தேன்


இருட்டின் நடுவிலே

நான் அறியாத வண்ணம்

மீண்டும் மீண்டும்

நீ தென்படுகிறாய்


நீ வெறும் பிம்பம் அல்ல

எழுதிய ஓவியமும் அல்ல



                        2


நீ தன்னந் தனியாக இருந்த அன்று

நீயே கூட உன்னைப் பார்த்திருக்க முடியாது


எங்கும் யாருக்காகவும் ஆன

ஆர்வமான காத்திருத்தல் இல்லை


கணகள் அசும்பொழுகத்

தப்பிய காற்றின்

இக்கரைக்கும் அக்கரைக்குமான

அலைச்சலும் இல்லை


நான் வந்தேன்

உன் உறக்கம் முறிந்தது


தூரத்து சூனிய வெளியில்

ஒளி, மலர்களின் குதூகலமாய்

உடைந்து நொறுங்கியது


மலர்களையும் கனிகளையும் சொரிந்து

நீ என்னை முகிழ்க்க வைத்தாய்


என்னை உயர்த்திப் பிடித்து

நட்சத்திரங்களிலிருந்து நட்சத்திரத்திற்கு

எறியவும் செய்தாய்

பின்பு மடியில் ஏந்தினாய்



  

சாவின் கவசத்தில் என்னை மூடி

புதுப்புது வடிவங்களில்

என்னை வரவேற்றாய்


நான் வந்தேன்

உன் நெஞ்சகம் விம்மித் தணிந்தது

நான் வந்தேன்

உன் துயரும் வந்தது


நான் வந்தேன்

நெருப்பேறிய உன் உவகை வந்தது


ஒரு புயலாகிய வசந்தமும்-

வாழ்வையும் மரணத்தையும்

எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபடி


என்னைப் பார்த்துத் தடவி

நீ உன்னையே உணர்ந்தாய்


என் கண்களில் நாணம்

என் இதயத்தில் பயம்


ஒரு மெல்லிய திரை

என் முகத்தை மூடுகிறது


உன்னைப் பார்ப்பதற்கு ஒரு தடை

எனவேதான் என் விழிகளில் கண்ணீர்


இருப்பினும் இறையே!

என்னைக் காண்பதற்கான

உனது ஆவல் மீறுகிறது

அநாதி காலம் தொட்டு


இல்லை என்றால்

இந்தச் சூரியனுக்கும் நட்சத்திரங்களுக்கும்

என்னதான் பொருள்?


தி சந்தானம்

Comments

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...