“அன்மோல் கடீ “( விலை மதிப்பில்லாத கடிகாரம்) என்று ஒரு ஹிந்தித் திரைப்படம். 1946ம் வருடம் வெளிவந்தது.இதன் இசையமைப்பாளர் நெளஷாத் அலி. மேதை. தனித்தனமை கொண்டவை இவர் இசையமைத்த பாடல்கள். இவரது பாடல்களைக் கேட்டால் நெஞ்சிலே ஏக்கம் எழும். முடிவற்ற சோகத்தில் கண்களில் நீர் கட்டும். தடையற்ற ஆனந்தத்தில் உள்ளம் துள்ளிக் குதிக்கும்.அழகான உணர்வுக் கோலங்கள் இவரது பாடல்கள். நாம் முன்பு குறிப்பிட்ட“ அன்மோல் கடீ” என்ற திரைப்படத்தில் ஒரு பாடல். "ஆவாஜ் தே கஹான் ஹை."பாடியவர்கள் நூர்ஜஹான் மற்றும் சுரேந்திரா. ஒரு பேட்டியில் ஒரு பாடலை எப்படி அமைக்கிறீர்கள என்ற கேள்விக்குப் பதிலளித்த நெளஷாத் இப்படிக்கூறுகிறார்.
"எப்படி ஒரு பாடலை அமைக்கிறீர்கள் என்று கேட்டீர்கள். அன்மோல் கடீ என்று ஒரு படம். மஹபூப் கான் இயக்கியது. அதில் ஒரு பாடல் பெரிதும் பேசப்பட்டது.
இன்றளவும் நூர்ஜஹான் ஒவ்வொரு மேடைக் கச்சேரிகளிலும் பாடுகிறார். அந்தப் பாடல் “ஆவாஜ் தே கஹான் ஹை துனியா மேரி ஜவான் ஹை” இந்தப்
பாடலுக்கு ஒரு ஆன்மீகத்தன்மை வர வேண்டும் என்று நினைத்தேன். ஆன்மாவிலிருந்தே இப்பாடல் வெளிக்கிளம்பி வருவது போல. ஆனால் என்னால் சரியான மெட்டைக் கண்டடைய முடியவில்லை.இரவு முழுதும் மேலும் கீழும் நடந்தபடி இருந்தேன். பல பாடல்கள் அப்படி பல மைல் தூரம் நடந்த பின்பு மெட்டமைப்பேன். இந்தப் பாடலுக்காக பத்து இரவுகள் இப்படி நடந்திருப்பேன்.
ஒரு இரவு மெட்டை நினைத்தபடியே தூங்கிவிட்டேன். இப்படிப் பல முறை நடக்கும் அல்லவா? எண்ணம் நினைவு மனத்திலிருந்து நினைவிலி மனத்திற்குக் கடந்து செல்லும். நாம் தூங்குவோம். கனாக் காண்போம்.நினைவிலி மனம் விழித்துக் கொள்ளும். அப்படி மெட்டும் இசைக் குறிப்புகளும் கனவில் என்னை வந்தடைந்தன. நான் விழித்துக் கொண்டேன்.ஹார்மொனியத்தின் முன்னே அமர்ந்தேன். ஆவாஜ் தே கஹான் ஹை என்ற பாடலின் முழுக் குறிப்பையும் எழுதி முடித்தேன்-"
பாடலைக் கேட்கலாம்.நூர்ஜஹானின் குரல் இழைகள் நுட்பமானவை.
உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள். பாடல் வரிகள் தமிழில் கீழே தந்திருக்கிறேன்
பெண்
குரல் கொடு. நீ எங்கே இருக்கிறாய்?
எனது உலகம் இளமையாக இருக்கிறது
நம்பிக்கை எனது மனதில் குடியிருக்கிறது.
எனது உலகம் இளமையாக இருக்கிறது
வா.. இரவு சென்று கொண்டிருக்கிறது
நிலவின் திருமண ஊர்வலம் போல
நடசத்திரங்கள் வானில் அணி அணியாக
அந்தக் கூட்டத்தில் நீ எங்கே இருக்கிறாய்?
எனது உலகம் இளமையாக இருக்கிறது
ஆண்
எனது விதி இரவின் கரிய மசியால் எழுதப்பட்டிருக்கிறது
அமைதி இல்லாத எனது உறக்கத்திற்கு நட்சத்திரங்களே சாட்சி
நான் இங்கே அழிந்து கொண்டிருக்கிறேன்
நீ எங்கே அமைதியுடன் இருக்கிறாய்?
வானம் வலி உணராது இருக்கிறது
குரல் கொடு… நீ எங்கே இருக்கிறாய்
தி சந்தானம்
Song very nice. To enjoy the meaning translation helped. Going back to yesteryears to dig out the treasure.
ReplyDeleteHats off Santhanam
Thank you Ram for listening
DeleteMohd Rafi முந்தைய பாடகர் அருமை
ReplyDelete