Skip to main content

நிலவில் தயங்கி விடாதே

 பெரி கோமோ அமெரிக்கப் பாடகர். எனக்கு இவரைப் பற்றி தெரியாது."நடசத்திரங்களை உன் கண்களுக்குள் வாங்கி விடாதே” என்று ஒரு பாடல்.பெரி கோம் பாடியது. இந்தப் பாடல் எனக்குத் தெரிய வந்தது. எப்படி என்றால் அ முத்துலிங்கம் மூலமாக. அ.முத்துலிங்கம் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர். நுட்பமான எழுத்தாளர்.  கனடாவில் இருக்கிறார். ஒரு கதையில் இந்தப் பாடலைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இவருடைய கட்டுரைகள் கதை போலவும், கதைகள் கட்டுரை போலவும் சுவாரசியம் குன்றாமல் இருக்கும்.- ஒரு கதையில் இந்தப் பாடலை ஒரு பெண் கிடார் இசைத்தபடி தோட்டத்தில் பாடுவாள்.



இணையத்தில் தேடும் போது இந்தப் பாடல் கேட்க  கிடைத்தது.என்ன குரல்..

பாடல் இசையோடு துள்ளாட்டம் போட வைத்தது.1952ம் வருடம் வெளிவந்து

இந்தப் பாடல் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் சக்கைப் போடு போட்டிருக்கிறது. வின்ஸ்டன் மூர் என்பவர் எழுதியிருக்கிறார். எளிய வரிகள்.;

மெல்லிய உணர்வுகள். பாடலைத் தமிழில் பார்ப்போம்.


நட்சத்திரங்களை உன் கண்களுக்கு உள்ளே வாங்கி விடாதே

நிலவை உன் இதயத்தை நொறுக்க விடாதே

காதல் இரவில் மலர்கிறது

பகலில் மரிக்கிறது

நட்சத்திரங்களை உன் கண்களுக்கு உள்ளே வாங்கி விடாதே

உன் இதயத்தை என்னிடமிருந்து ஒளிக்காதே

ஒரு நாள் நான் திரும்பி வருவேன்

உனக்குத் தெரியும்

உன்னைத் தவிர வேறொருவரை நான் நினையேன்


பலபல இரவுகள

பலபல நடசத்திரங்கள்

பலபல நிலவுகள் உன் மனதை மாற்றி விடும்

(நிலவை உன் மனதை மாற்ற விடாதே)

நான் பல நாள் விலகிச் சென்றாலும்

மறந்து விடாதே நீ யாருக்குச் சொந்தம் என்று

நட்சத்திரங்கள் வெளிவரும்போது

நினைவுகொள் , நீ எனக்கே என்று


பலபல மைல் தூரம்

பலபல நாட்கள்

பலபல இரவுகள் தனியாக

(பல இரவுகள தன்னந் தனியே)

உன் இதயத்தைக் காத்திரு

நாம் பிரிந்து இருக்கும் போது

நான் இல்லாத போது

நிலவிலே தயங்கி விடாதே


இனி பாடல்


தி சந்தானம்



Comments

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...