Skip to main content

முள்ளும் மொழியும்

 அப்பொழுதெல்லாம் கிராமத்தில் நடந்து செல்லும் போது வழித்தடங்களில் முட்கள் குறுக்கிடும். கவனியாமல் நடந்தால் காலில் பாய்ந்து விடும். நெருஞ்சிமுட்கள் பல முனைகளில் கூராக இருக்கும். கொத்தாக அப்பிக் கொள்ளும்.கருவேல முள் பாய்ந்தால் கண்களில் நீர் வரும். ரத்தம் வந்துவிட்டால் ஒரு ஆறுதல். முள் உள்ளே தங்கி விட்டால் வேளியே எடுக்கும் வரை நோகும். எடுப்பது  ஒரு பாடு.  எடுக்கும போதும் வலி. பிள்ளைமனம் குத்திய முள் மீது கோபம் கொள்ளும். தைத்த முள்ளை உபாயங்கள் செய்து வெளியே எடுக்கும் வரை வேதனை தான்.

சச்சிதானந்தம் மலையாளக் கவிஞர். இரு மொழி ஞானம் கொண்டவர்.

மலையாளத்தில் எழுதிய கவிதைகளை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விடுவார்.  வேறு எங்கும் கிடைக்காத விடைகளை அவர் கவிதையில் தேடிக் கண்டறிவார். சமயங்களில் இவரது கவிதைகள் நெஞ்சைத் தைத்துவிடும்.

உண்மை அதைத்தானே செய்யும்.  கவிதையைப் பார்ப்போம்.





முட்கள் எனது மொழி

எனது இருப்பை

ரத்தம் தோய்ந்த தொடுகையால்

அறிவிக்கிறேன்


ஒரு காலத்தில் 

இந்த முட்கள் மலர்களாக இருந்தன

ஏமாற்றும் காதலர்களை நான் வெறுக்கிறேன்

கவிஞர்கள் பாலையைக் கைவிட்டனர்

சோலைகளுக்குத் திரும்பிச் சென்றனர்


ஒட்டகங்கள்தான்  இங்கு இருக்கின்றன

மேலும் வணிகர்களும்

எனது மலர்ச்சியை மிதித்து

மண்ணோடு மண்ணாகச் செய்தபடி


ஒவ்வொரு முள்ளுக்கும் ஒரு அரிய நீர்த்துளி போதும்

நான் வண்ணத்துப் பூச்சிகளை ஈர்ப்பதில்லை

ஒரு பறவையும் என்னைப் புகழ்ந்து பாடுவதில்லை

வறட்சிக்கு நான் பணிந்து போவதில்லை


நான் வேறொரு அழகைப் படைக்கிறேன்

நிலவொளிக்கு அப்பால்

கனவுகளின் இந்தப் புரம்

ஒரு கூரிய தைக்கின்ற இணை மொழி

                           ****


முட்கள் தைப்பதில்லை. நம்மோடு பேசவே செய்கின்றன. நாம் ஒரு போதும் அதை அறிவதில்லை.


தி சந்தானம்



Comments

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...