Skip to main content

அபி-மதி-நான்

 அந்தத் தேவாலயத்தின் பெயர் தூய பேதுரு ஆலயம்.வளாகத்தின்  உள்ளே நுழைந்தேன்.  பேதுரு ஏசுவின் பன்னிரண்டு சீடர்களில் தலையானவர் 

யூதாஸ் ஏசுவை காட்டிக் கொடுக்கிறான். மற்ற சீடர்கள் சிதறி ஓடி விடுவார்கள்.ஆனால்  பேதுரு மட்டும் ஏசுவை பிடித்துச் செல்ல வந்தவர்களில் ஒருவன் காதை வெட்டி விடுவார்.  இப்படிப் பட்ட சீடரை நோக்கி ஏசு சொல்லுவார். " கோழி  கூவுவதற்குள் நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்"   அது அவ்வாறே நடக்கும்.  உள்ளே நுழையும் போது இத்தனையும் ஞாபகம் வந்தது


தேவாலயத்துக்குள்ளே  இருக்கைகள் காலியாக இருந்தன.

அந்த வெறுமை இசைக் கோவைகளுக்கு இடையே நேரிடும் மெளனம்போலத் தோன்றியது. வலப்பக்கமாக இருந்த அறையில் மதிவாணன் இருந்தார்.

எழுதிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்தார்.. பெரிய விழிகள்.அகலப் பார்த்தார்.  பார்வை கனிவாயிற்று. வெண்பல் தெரியச் சிரித்தார் . எழுதியது போலப் புருவங்கள். பெரிய நெற்றி. மதிவாணன் பாதிரியார் அல்ல. எனது நண்பர். நண்பர்களைப் பார்ப்பதும் வார்த்தையாடுவதும் சுகம்.  குறிப்பாக வெறுமை விசிறியடிக்கும் கொரோனா காலங்களில். பலதும் பேசி பழைய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டோம். அபியைப் பற்றியும். 




1979. மதிவாணன் வங்கிப் பணிக்கு வந்து சேர்ந்தார். அவர் வருவதற்கு நான்கு மாதங்கள்முன்பே நான் அங்கு பணியில் இருந்தேன்.லா.ச.ராமாமிருத்த்தைப் பற்றி அவர் என்னுடன் பேசுவதற்கு அதிக காலம் பிடிக்கவில்லை. லா.ச.ராவின் அபிதா மற்றும் சில கதைகளைப் ஏற்கனவே படித்திருந்தேன். அப்படிப்  படித்ததில்  ஒரு கதை.அபூர்வ ராகம். அந்தக் கதை இப்படித் துவங்கும்.


“வீணையின் ஸ்வரக்கட்டுக்களை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில்

திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி 

ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பது போல்  அவள் என் வாழ்க்கையில்  முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்.”  வார்த்தைகளா? ஒளிச் சிதறல்கள்!. ரத்தினக் குவியல்கள்!!  என்னவென்று புரியாத உணர்வில் மனம் கிளர்ச்சியுற்று அலையும். சொற்கள் சுடும். சொற்கள் குளிர்ச்சி தரும். சொற்கள் அமைதியைக் குலைத்து விடும். சொற்கள் அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கும் சொற்கள். அம்மம்மா!  லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் அப்படித்தான்.


இப்படியான லா,ச,ராவின் படைப்புகளை தனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தார் அபி. மதிவாணன் படித்த போது மேலூர் அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்.  மதிவாணன் அபியின் “அந்தர நடை”

என்ற கவிதைத் தொகுப்பைப்  படிக்கத் தந்தார். அபூர்வமான கவிதைகள்அடங்கிய தொகுப்பு. விதம் விதமான நுட்பங்கள். நிசப்தம் “வெடித்துச் சிதறுகிறது” அவர் கவிதைகளில்.  ஈர விரலின் உரசலில் ஈமத்தீ எழுகிறது. வேறு வேறு சாயைகள்- வேறு வேறு கூறுகள்- வேறு வேறு படிமங்கள்.


மதிவாணனும் நானும் இந்தக் கவிதையை அடிக்கடி பேசுவோம்.


இந்தப் பழக்கம்

விட்டுவிடு


எங்காயினும்

வானிலேனும் மண்ணிலேனும்

புள்ளியொன்று கிடக்கக் கண்டால்

சுற்றிச் சுற்றி

வட்டங்கள் வரைவதும்

சுழன்று சுழன்று 

கோலங்கள் வரைவதும்


குறுக்கும் நெடுக்குமாய்ப்

புள்ளியின் வழியே

பரபரத்துத் திரிவதும்-


இந்தப் பழக்கம் விட்டுவிடு


முடிந்தால்

புள்ளியைத் தொட்டுத்தடவி

அதன் மூடிதிறந்து

உள்நுழைந்து

விடு


அபியின் கவிதைகள் பல்வேறு தொகுப்புகள் கண்டன. மெளனத்தின் நாவுகள்,

என்ற ஒன்று , என்றெல்லாம்.  ஆனால் மேலே கண்ட கவிதையின் இறுதி வரி மட்டும் மதிவாணனையும் என்னையும் காலமெல்லாம் தொடர்ந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் ஹிந்து தமிழ் திசையில் அபியின் பேட்டியைப் படித்துவிட்டு மதிவாணன் அலைபேசியில் தொடர்பு கொண்டார், அவர் குரலில் பரவசம் இருந்தது. முதன் முதலில் அபியைப் பற்றியும் அவர் கவிதைகளைப்  பற்றியும்  பேசிய போது இருந்த அதே பரவசம்.


தி சந்தானம்


Comments

  1. அழகு
    எளிய தமிழ்
    சரள நடை
    27 வயது சந்தானம்
    இன்னும் இருப்பது குறித்து மிக சந்தோசம்

    ReplyDelete
  2. பா. மதிவாணன் இன்பராஜ்

    ReplyDelete
  3. அழகா எழுதற.. அபியின் கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தொடர்ந்து படிப்பதற்கும் எழுதுவதற்கும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...