சிலப்பதிகாரத்தின் கானல் வரியில் மனம் தோய்ந்தேன். அழகுத் தமிழ்.
பாரதி சொன்னது போல் நெஞ்சை அள்ளியது. மாதவி யாழைச் சோதித்து கோவலன் கையில் தருகிறாள். கோவலன் யாழை மீட்டியபடி பாடுகிறான்.
அந்தப் பாடல் “திங்கள் மாலை வெண்குடையான்” என்று துவங்குகிறது.
அவன் பாடி முடித்தவுடன் மாதவி யாழ் இசைத்துப் பாடுகிறாள். பாடி இருவரும் மகிழ வேண்டிய நேரத்தில் பாழான ஊழினால் இருவரும் பிரிய நேருகிறது.
அது என்ன? கோவலன் சொல்கிறான். “வெண் கொற்றக் குடை உடைய சோழ
மன்னன் கங்கையைச் சேருகிறான். ஆனாலும் காவிரியே! நீ அவனோடு பிணங்குவதில்லை. இதுவல்லவோ மாதரின் கற்பு. நீ வாழ்க!”
“மாதரின் கற்புக்கு இலக்கணம் வகுக்கும் ஆண்கள் கடல் மீது ஆணையிட்டு வாக்களித்து விட்டுப் பின் பிரிவதென்ன? " என்ற பொருளில் பாடுகிறாள் மாதவி.கானல் வரி நான் பாட தானொன்று மனத்தில் வைத்துப் பாடுகிறாளே “ என்று சினம் கொள்கிறான் பிரிகிறான். இது கானல் வரி காட்டும் காட்சி. சில பாடல்களைப் பார்க்கலாம்.
நேர்ந்த நங்காதலர் நேமி நெடுந்திண்டேர்
ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே
ஈர்ந்தண் டுறையே இதுதகாது என்னீரே
*************
கதிரவன் மறைந்தனனே காரிருள் பரந்ததுவே
எதிர்மலர் புரையுண்கண் ணெவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட் டுளதாங்கொன்
மதியுமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தவிம் மருள்மாலை
******************
கைதை வேலிக் கழிவாய் வந்தெம்
பொய்த லழித்துப் போனா ரவர்நம்
பொய்த லழித்துப் போனா ரவர்நம்
மையன் மனம்விட் டகல்வா ரல்லர்
********’***********
“கரும்பு” என்று ஒரு திரைப்படம். இசை சலீல் செளத்திரி. திங்கள் மாலை என்ற
கானல் வரிப் பாடல் யேசுதாஸ் சுசீலா இவர்கள் குரலில் தனித்தனியே ஒலிக்கிறது. கேளுங்கள்.
Comments
Post a Comment