Skip to main content

கனவுகளைப் பற்றிக் கொள்

 லாங்ஸ்டன் ஹுயூஸின் தந்தை அவர் அயல்நாடு சென்று பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பினார். ஹுயூஸ் கவிஞர் ஆனார். பெரும்பாலும் அது அப்படித்தான் நிகழ்கிறது.  லாங்ஸ்டன் ஹுயூஸ் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். சுதந்திர புருஷர்.. விட்டு விடுதலையாகி சிட்டு குருவியைப் போல் நிற்க நினைப்பவர். இவர் கவிதைகளில் அதிகம் பயன்படுத்திய வார்த்தை கனவு.  கனவைப் பயன்படுத்தாத கவிஞரும் உண்டா?   பாரதி கனவு மெய்ப்பட வேண்டும் என்று சொல்லவில்லையா?  மேலும்" உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவு" என்றும் பேசவில்லையா பாரதியின் கவிதைகள். லாங்ஸ்டன் ஹுயூஸின் கவிதைகளிலும் கனவு  என்ற வாரத்தை வருகிறது. எவ்வாறு? பார்க்கலாம்.


இப்போதெல்லாம் கனவு கிடைப்பதில்லை

கனாக் காண்பவர்களுக்கு


பாடலும் கிடைப்பதில்லை

பாடுபவர்களுக்கு


சில நிலப் பரப்புகளில்

இருண்ட இரவும்

குளிர்ந்த எஃகும்

இருக்கின்றன


ஆனால்

கனவு வந்து விடும்


மேலும்

பாடல்

சிறைக் கதவை உடைத்து

வெளிவரும்



இன்னொரு கவிதை


கனவுகளை பற்றிக்கொள் இறுக

ஏனென்றால்

கனவுகள் இறந்து விட்டால்

வாழ்க்கை

 ஒரு சிறகொடிந்த பறவை

பறக்க முடியாது அதனால்


கனவுகளைப் பற்றிக் கொள் இறுக

ஏனென்றால்

கனவுகள் போய் விட்டால்

வாழ்க்கை

பனியில் உறைந்த ஒரு பாழ் நிலம்

பார்க்க முடியாது உன்னால்


கவிஞன் கனவோடு நிற்கவில்லை. காதலைச் சொல்லுகிறான்.


நட்சத்திரங்கள் இல்லாத இரவுக்கு

நான் உன்னை ஒப்பிட்டு விட முடியும்

ஆனால் உனது கண்கள் இருக்கிறதே?


கனவுகள் இல்லாத உறக்கத்திற்கு

நான் உன்னை ஒப்பிட்டு விட முடியும்

ஆனால் உனது பாடல்கள் இருக்கிறதே?



கனவுகள் அலைகள் போல புரண்டு வருகின்றன. 

கவிதை என்னும் பறவை தன் சின்னச் சிறகுகளை அதில் நனைக்கவே செய்கிறது.



தி சந்தானம்





குறிப்பு  லாங்ஸ்டன் ஹுயூஸின் கவிதைகள் இணையத்தில் படிக்கக் கிடைத்தது. கவிதைகளின் தமிழாக்கம் என்னுடையது.  (Poem hunter

My poetic side)


Comments

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...