பள்ளியில் தமிழ் படித்தேன். பின்பு ஏனோ கல்லூரியில் முதல் மொழியாகத் தமிழைத் தேர்வு செய்யவில்லை. "யாயும் யாயும் யாயாகியரோ" என்று சங்கத் தமிழை என் நண்பர்கள் படித்தார்கள். நான் படித்ததோ ஹிந்திக் கவிதைகள்.
சங்கத் தமிழை படிக்காதது ஒரு குறை. அந்தக் குறை தனிப்படத் தேடித் தேடிப்
படிப்பதில் தீருகிறது.
ஐங்குறுநூறில் ஒரு பாடல் அம்மூவனார் என்ற புலவர் இயற்றியது. அது நெய்தல் நிலப் பாடல்-. தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்திரூக்கிறது. அந்தப் பாடல் வருமாறு
கோடு புலம் கொட்பக் கடல் எழுந்து முழங்கப்
பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும
துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தோழி, என் வளையே.:
இதன் பொருளைப் பார்க்கலாம்
தலைவி கூறுகின்றாள்-
தோழி! சங்குகள் கடற்கரையில் சுழல்கின்றன. கடல் அலைகள் ஆரவாரம் செய்கின்றன. ஒலி மிகுந்த துறையிலிருந்து, மரக்கலங்கள் விரைந்து செல்கின்றன- அந்தக் குளிர்ந்த துறையின் துறைவன் என்னைப் பிரியும் பொழுது என் வளையல்கள் நெகிழ்கின்றன. அவன் வரும் பொழுது என் கைகள் பருத்து விடுகின்றன. வளைகள் நெகிழாது நிற்கின்றன.
இந்த சங்க காலப் பாடல் கொண்டு வந்த சூழல் ஒரு பழைய திரைப் பாடலை
நினைவு படுத்தியது. மனதைப் பறித்துச் சென்ற நாயகன் பிரிந்து சென்றதற்கு
நாயகி வருந்திப் பாடுவதாக அந்தப் பாடல் அழகான பாடல் வரிகள். நல்ல இசை- நெஞ்சை எடுத்து நெருப்பினில்வைத்துச் சென்றவனை நினைத்துப் பாடும் பாடல். பி.சுசீலாவின் குரலில். தான் எத்தனை பாவம். அறுபதுகளில் பலருக்கு இந்தப் பாடல் பிடிக்கும். இப்போது கேட்டாலும் பிடிக்கும்
கேட்கலாம்-
மதி :
ReplyDeleteஅருமை.
படகோட்டி படத்தில் அனைத்து பாடல்களும் வாலி.
இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.
இதை ஐங்குறுநூறில் நீ இணைத்தது அதனினும் அருமை.
நன்றி மதி
Deleteமதி : 2).
ReplyDeleteMrs. ஜெயந்தி குறுந்தொகை பாடல் வைத்து எழுதிய
கதை வந்ததா, படித்தாயா.
படித்தேன். உனக்கு அனுப்புகிறேன்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteSorry for the sodhappal. Edit panna option illama delete panna vendiyadhachu.
ReplyDeleteநெகிழ்ந்து விழும் வளையல சேட்டுகிட்ட வச்சுறப் போறான்.. உஷாரா இரும்மா தலைவி!! எமோஷனக் கொற..
எமோஷனக் கொற ..
நானும் காலேஜ்ல தமிழ் இல்ல, Sanskrit. நீ ஹிந்தி ப்ரசார் சபா எக்ஸாம் பாஸ் பண்ணி ஹிந்தி கத்துண்ட நெனச்சேன். அக்கா அப்டித்தானே? அக்காக்கும் உனக்கும் ஒரு அழகான bond உண்டுல்ல?
ReplyDeleteபிரசார் சபா பரிட்சையும் பாஸ் செய்தேன். மத்யமா வரை. அக்காவோட.. சொல்ல வரல.. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. Great soul.
DeleteTrue. Akkathan enga ellarkkum role model
DeleteAarubathilum aasai varum nalla Tamil padika yes.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள். படிக்கும் ஆர்வம் இருந்தால் போதும்
Delete