Skip to main content

மஞ்சள் ரிப்பன்

 எனது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இதைக் கருத வேண்டுகிறேன்.


ஒரு ஹங்கேரியக் கவிதை. அதன் தலைப்பு மஞ்சள் ரிப்பன். ஆங்கிலத்தில் இருந்ததன் தமிழாக்கம் செய்தது இவ்வாறு.

நான் வீடு திரும்புகிறேன்

என் தண்டனைக் காலம் முடிந்தது

இப்போது எது எனது எது எனதல்ல

என்று தெரிந்து கொள்ள வேண்டும்

எனது கடிதம் உனக்குக் கிடைத்திருக்கக் கூடும்

நான் வெகு சீக்கிரம் விடுதலை ஆகி விடுவேன் 

என்றால் உனக்குத் தெரியும்

நீ என்ன செய்ய வேண்டும் என்று

இன்னமும் நீ என்னை விரும்பினால் 

அந்தப் பழைய நெடிய மரத்தைச் சுற்றி

ஒரு மஞ்சள் ரிப்பனை நீ கட்டி விட வேண்டும்

நெடு நாட்கள் ஆகிவிட்டது

நீ இன்னமும் என்னை விரும்புகிறாயா?

ஒரு வேளை மரத்தைச் சுற்றி கட்டிய

மஞ்சள் ரிப்பனை நான் காணவில்லை என்றால்

நான் பஸ்ஸிலேயே அமர்ந்து இருப்பேன்

மறந்து விடு , பழியை என் மீது போட்டு விடு

இது பஸ் டிரைவருக்கு

ஒரு வேளை மரத்தைச் சுற்றி கட்டிய மஞ்சள் ரிப்பனை நான் காணவில்லை என்றால்...

என் மேல் கவனம் வையுங்கள்

என்னால் அந்தக் காட்சியைக் காண முடியாது

நான் இன்னமும் சிறையிலேயே இருப்பேன்

சிறையின் சாவி எனது அன்பிடம்  இருக்கிறது

ஒரு எளிய மஞ்சள் ரிப்பன்

அது தான் தேவை

என்னை விடுதலை செய்ய

என்ன ஆயிற்று இப்போது?

எல்லோரும் கை தட்டுகிறார்கள்

என்னால் நம்ப முடியவில்லை

நூறு நூறு ரிப்பன்கள்

மரத்தைச் சுற்றி கட்டியிருப்பதைப் பார்க்கிறேன்

நான் மகிழ்கிறேன்

நீ இன்னமும் என்னை விரும்புகிறாய்

நான் வீடு திரும்பினேன்


இந்தக் கவிதை பாலு மகேந்திராவிற்கு பெரிய உந்துதலாக இருந்திருக்க வேண்டும். யாத்ரா திரைக்கதை அமைக்கும் போது.


தி சந்தானம்








Comments

  1. நல்ல கவிதை. ரசித்தேன்.

    ReplyDelete
  2. இருக்கலாம். ஆனால் படம் ஒரு அற்புதமான கவிதை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆர்க்கே. ஒரு உன்னதமான கவிதையைப் படித்த உணர்வு , திரைப்படத்தைப் பார்த்த போது

      Delete
  3. விக்கியாண்டவர் சொல்றார், யாத்ரா யெல்லோ ஹேண்ட்கர்ச்சீஃப் என்ற ஜப்பானிய படத்தை தழுவி எடுக்கப்பட்டதென்றும், அந்த ஜப்பானிய படம், நீ சொல்லும் மஞ்சள் ரிப்பன் போயமால் இன்ஸ்பயர் ஆகி எடுக்கப்பட்ட படமென்றும்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கட்டுமே. ஒரு தீபம் இன்னொரு தீபத்தை ஏற்றட்டுமே. யாத்ரா படம் ஆர்க்கே சொன்னது போல ஒரு நல்ல கவிதை. மஞ்சள் ரிப்பன் ராம் சிலாகித்தது போல ஒரு நல்ல கவிதை.
      எனக்கு எஞ்சியது யாத்ரா குறித்து நல்ல நினைவுகள்.

      Delete
    2. நன்றி ஜயந்தி படித்ததற்கும் தகவலைப் பகிர்ந்ததற்கும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...