இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. கோடையின் கடுமை சற்றே குறைந்திருக்கிறது. தாகத்தோடு அலைந்த பறவைகள் ஆசுவாசம் கொண்டிருக்கின்றன.. மழை நீரில் மரத்தின் பச்சை இலைகள் மினுங்குகின்றன. மேகங்கள் மழையை கொண்டு வருகின்றன. மழை பொழியும் போது மனம் நிறைந்து ததும்புகின்றது.
அத்வைத தாஸ் என்று ஒரு கவிஞர். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு Songs of sanity என்பது. இந்தத் தொகுப்பில் ஒரு கவிதை எனது குறிப்பில் இருந்தது. அதை நான் தமிழில் மொழி பெமர்த்தேன். இப்படி
அவள் நகரத்திற்கு மழை கொணர்ந்தாள்
அவள் மேகத்தில் இருந்த போது
பூமியைத் தொடுவதற்கு முன்
பிறகு அடுத்த நாள் காலை மழை பெய்தது
இறந்தவர் மீது
சூரியனால் உலர்ந்தவர் மீது
அவள் எங்கு சென்றாலும் மழை கொண்டு வருகிறாள்
வெண்மையை சாம்பல் நிறமாக மாற்றுகிறாள்
சாம்பல் நிறத்தை ஆகாயத்திற்கு எடுத்துச் சென்று
தனது சன்னலில்–படுக்கைக்கு மேல்
இருத்தி விடுகிறாள்
ஒரு நிலவும் துண்டு அவளுடைய கைப்பையிலிருந்து சற்றே எட்டாத
தூரத்தில் இருக்கிறது
சற்றே மெலிதாகத் தூங்குவதற்கு போதுமானதாக
இரவில் நட்சத்திரக் கூட்டங்கள் ஒழுங்கமைக்கப் பெறுகின்றன
அவளது ரசனைக்கு ஏற்றவாறு
விளக்குகள் அணையும் பொழுது
மழையின் நடனமாக அவள் நடை ஆகிறது
மழையின் நடனம் அவளது குருத்துக்களில்
மேலும் வேகம் அணிந்த மேகங்களின் பாடல்
நான் அவளை அடைகிறேன்
அவள் என்னை
தி சந்தானம்

நல்ல மொழி பெயர்ப்பு. கவிதை நன்றாக இருந்தது
ReplyDeleteநன்றி ராம்
Deleteமதி :
ReplyDeleteஅருமையான மொழிபெயர்ப்பு. Original கவிஞரின் உணர்வுகள் தெரிகின்றன👏
நன்றி மதி.. ஆம் மொழிபெயர்ப்பில் உஊர்வுகளின் மொழியும் பிரதிபலித்தல் வேண்டும்
Delete//உணர்வுகளின்//
Delete