தாகம் என்று ஒரு திரைப்படம் 1974 ம் வருடம் வந்தது. மதுரையில சிந்தாமணி தியேட்டரில் ரிலீஸ் ஆனதாக ஞாபகம். முத்துராமன் மற்றும் நந்திதா போஸ் நடித்திருந்தனர். தமிழில் அது ஒரு சோதனை முயற்சி. மதுரை திரைப்பட ரசிகர்கள் அதை தங்களுக்கு ஏற்பட்ட பெரும் சோதனையாகக் கருதினர். விளைவு. படத்தை மூன்று நாட்களுக்கு முன்னாலேயே தூக்கி விட்டார்கள். முத்துராமன் பார்வையற்றவராக நடித்திருந்ததாக அறிந்தேன்.
எங்கள் கல்லூரி நூலகத்தில கணையாழி, தீபம் போன்ற பத்திரிக்கைகள் படிக்கக் கிடைக்கும். இந்தப் படத்தைப் பற்றி கணையாழி பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள். நந்திதா போஸ் டவுன் பஸ்ஸில் செல்லும் காட்சியில் அவர் மேல் படர்ந்து விலகும் பார்வைகளை எப்படி காமிரா மூலம் அழகாகக் காட்சிப் படுத்தியிருந்தார்கள் என்று சொல்லி இருந்தார்கள். ஒரு பஸ் காட்சியில் காமிரா இப்படி புகுந்து புறப்படுவது அப்போதெல்லாம் பெரிய விந்தை. இந்தப் படத்தை ஓரு இளைஞர் பார்த்தார். ஒரு காட்சியில் பஸ் சன்னலோரம் அமர்ந்திருக்கும் நந்திதா போஸின் ஒற்றை முடி காற்றில் பறக்கும். இந்த் காட்சியால் உந்தப் பட்டு திரைப்பட இயக்குநர் ஆக விரும்பினேன் என்று சொன்னார். அவர் பெயர் ஜெயபாரதி. பிற்பாடு குடிசை, தேனீர் என்று இரண்டு படங்கள் இயக்கினார். எனக்கு தாகம் படத்தைப் பார்க்க வாய்க்கவில்லை. ஆனால் பாடல்களை வானொலிப் பெட்டியில் கேட்க முடிந்தது. படத்திற்கு இசை எம்.பி.ஸ்ரீனிவாசன். தனிப்பட இவர் இசையமைத்த சேர்ந்திசைப் பாடல்களும் மிகவும் நன்றாக இருக்கும். குரல்களைத் திறம்படப் பயன்படுத்தக் கூடியவர். இவரது இசையில் ஜெய பேரிகை கொட்டடா என்ற பாரதி பாடல் நினைவில் இருந்து நீங்கவே இல்லை. குறிப்பாகப் பயம் என்னும் பேய் தன்னை அடித்தோம் என்ற வரிகளைப் பின் தொடரும் குரல்கள். தென்னம் கீற்று ஊஞ்சலில் என்ற ஜெயகாந்தன் எழுதிய பாடலுக்கு இசையமைத்தது எம்.பி.ஸ்ரீனிவாசன் தான்.
தாகம் படத்தில் இரண்டு பாடல்கள்.
கேட்கலாம்.
நந்திதா போஸ் யார்னு எனக்கு தெரியாது. சமீபத்தில்தான் கேள்விபட்டேன். பரதனோட சாவித்திரி என்ற படம் போன வாரம் பார்த்தேன். அதில் நடித்திருந்தார்.
ReplyDeleteஅப்படியா? என்ன ரோல்?
Deleteவி எஸ் ராகவனோட தங்கை. அவ பையன் தான் கிராமத்துக்கு வருவான்
Deleteஅப்படியா?
Deleteவிக்கிலயும் கதை விபரம் இல்லை. யூ ட்யூப்லயும் படமில்லை. ஒரே சோதனைதான். 😂😂
ReplyDelete😄
Delete