Skip to main content

ஷெல்லிதாசன்

 ஷெல்லியின் கவிதைகள் செறிவு மிகுந்தவை. பாரதி ஷெல்லியின் கவிதைகளில் மனம் தோய்ந்தவர். தன்னை "ஷெல்லிதாசன்"  என்று அவர் அழைத்துக் கொள்வது உண்டு. வாழ்க்கை அவர்கள் இருவரையும் ஒரு இடத்தில் நிலைத்து இருக்க விடவில்லை. ஷெல்லி ஐரோப்பா  முழுதும் திரிந்தார்.  இத்தாலியில் அவர் தங்கியிருந்த நாட்கள் படைப்பு ஊக்கம் மிகுந்த நாட்களாக இருந்தன. அது போலவே பாரதி புதுவையில் இருந்த நாட்களில் தன்னுடைய சிறந்த படைப்புகளை உருவாக்கினார்.  ஷெல்லி இருபத்தொன்பது வயதிலேயே மறைந்தார்.  


"சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர் புகழும் இராமனும் ஆற்றினில் வீழ்ந்தான் 

பார் மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்"


என்று பாடிய பாரதி முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்தார்.



பாரதி தன்னுடைய சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளார்.

அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.


பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு

தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு

வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம்

தூய சுடர் வானொளியே சூறை அமுதே

கண்ணம்மா


வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு

பூணும் வடம் நீ எனக்கு புதுவயிரம் நான் உனக்கு

காணும் இடம் தோறும் நின்றன் கண்ணின்

ஒளி வீசுதடி 

மாணுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா


வானமழை நீ எனக்கு வண்ண மயில் நான்

உனக்கு

பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு

ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்

ஊனமறு நல்லழகே உறுசுவையே கண்ணம்மா


காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு

வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு

போதமுற்ற போழ்தினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே 

நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா


மேலே கண்ட பாடலை பாரதி இப்படி மொழி பெயர்த்து உள்ளார்.


Though to me the flowing light

And I to thee discerning sight

Honied blossom thou to me

Bee enchanted I to thee

Oh Heavenly lamp with shining ray 

O Krishna Love O Nectar spray

With faltering tongue and words that pant 

Thy glories here I strive to chant 


Though to me the harp of gold 

And I to thee the finger hold

Necklace shining though to me

New set diamond I to thee

O mighty Queen with splendor rife 

O Krishna Love, O well of life

Thine eyes do shed their light on all

Wherever I turn, their beams do fall


Rain that singeth thou to me

Peacock dancing, I to thee

Though to me the juice of grape 

And I to thee the cup agape 

O spotless beauty, Krishna bright

Perennial fount of deep delight

O Love, the face hath grace divine

For there, the deathless truth doth shine


Deep attraction though to me

Living magnet I to thee

Though to me the Veda pure 

And I to thee the Knowledge sure

Voice vibrant of the world's desire 

O Krishna Love, all quickening fire 

In utter stillness, here I see

Thy face that yieldeth ecstacy 


எத்தனை செறிவாக இருக்கிறது. ஒவ்வொரு வரி முடிவிலும் எதுகை தவறவே இல்லை.


பாரதி தனது பாடல்களில் சிலவற்றை மட்டுமல்ல. நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் சிலவற்றையும் மொழி பெயர்த்துள்ளார்.

சான்றாக இது..


ஆருயிரேயா அகலிடமுழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்திட்ட 
பேருயிரேயா பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்து அடைத்து உடைத்த
சீரியரேயா மனிசர்க்குத் தேவர் போலத்
தேவர்க்கும் தேவாவோ 
ஓருயிரேயோ உலகங்கட்கு எல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ 

                                                                        8.1.5

O dear soul of Mine,
O great Life that made and pierced and ate and spouted and measured
All this immense space,
O Glorious Life that made the oceans, dwelt therein and churned
And stopped and broke them,
Thou who art unto the Gods what the gods are unto men,
O Soul unique of all the worlds, whither shall I go to meet 

ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் என்பார் திருமங்கை ஆழ்வார்.

ஆசை பற்றி அறையலுற்றேன் என்பார் கம்பர். நமக்கும் ஆசை பற்றியது. பாரதியின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது என்று. சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன் என்று பாரதியின் ஒரு கவிதை. அதை வருமாறு மொழி பெயர்த்தேன்


Saw Her in the moonlight 

And I strode in surrender

Won over my five senses 

Killed my desires all


She told me in a whisper 

"Labour for a cause 

Bother not the result 

Lead a life of devotion"

She freed me of my worries 

She plucked out all my grief


The light of stars, She made

The wind that blows around 

The space around The sky

And in my heart the fount of Joy


நம்மாழ்வார் திருவாய்மொழியில் வரும் ஒரு பாசுரம்.


தானே யாகி நிறைந்து, எல்லா

         உலகும் உயிரும் தானேயாய்,

தானே யான் என்பான் ஆகி

         தன்னைத் தானே துதித்து,எனக்குத்

தேனே பாலே கன்னலே 

          அமுதே திருமாலிருஞ்சோலை 

கோனே யாகி நின்றொழிந்தான்

           என்னை முற்றும் உயிர்உண்டே 


                                           

                                                          10.7.2


இந்தப் பாசுரத்தை வருமாறு மொழிபெயர்த்தேன்


He is everywhere, overflowing, He Himself 

All  the world and all living beings

He Himself is me

He Himself adores Himself and to me

He is honey, milk, candy, the elixir,

The Lord of Thirumalirunjolai, 

 He devoured my life entire 


ஷெல்லிதாசனை இன்று நினைந்து அவர் வழியில் நடந்தது நிறைவாக இருக்கிறது.


நமது மொழிபெயர்ப்பின் குறைகளை கற்றறிந்தவர்கள் பொறுத்து அருள்க

Comments

  1. Good tribute to mundasu kavi I am Sathanadasan

    ReplyDelete
  2. திருவாய்மொழி ஆங்கிலத்தில் பாரதியாரால் மொழிபெயர்க்கப் பட்டது என்பது புதிய செய்தி. சந்தானத்தின் மொழி பெயர்ப்பும் அருமை. ரசிக்கத்தக்கது

    ReplyDelete
  3. Nice to remember Mahakavi on his Memorial day!

    ReplyDelete
  4. A wonderful tribute to Barathy.

    I enjoyed your transaction work as well

    ReplyDelete
    Replies
    1. Thank you Ram Glad to have your feedback on my translations

      Delete
  5. Excellent translation of tiruvoimozhi pasuram Anna

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...