Skip to main content

மேகங்களின் நிழலில்

 மலர் நள்ளிரவில் அவிழ்ந்து மணம் பரப்புகிறது.  அது ஒரு ரகசியம் வெளிப்படுவது போல் இருக்கிறது. இசை காதில் வந்து சேருகிறது. அதிலும் எத்தனையோ ரகசியங்கள்.  

நேற்று ஒரு பாடலைக் கேட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு கேட்டேன். மீரா என்ற மிகப் பழைய திரைப்படத்தில் வரும் ஒரு பாடல்.



எழுபதுகளில் வந்த ஒரு ஹிந்தித் திரைப்படம். அதன் பெயர் ஷர்மிளி. மதுரையில் அந்தப் படம் வெளிவந்தது. ஷர்மிளி என்ற திரைப்படத்தின் தலைப்பை அழகாக “நாணமுள்ள நங்கை” என்று மொழிபெயர்த்து போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். அதில் ஒரு பாடல். மேகா சாயே ஆதீ ராத் என்று துவங்கும். மேகங்களின் நிழலில் பாதி இரவு என்று பொருள் கொள்ளலாம்.



நிழல்கள் என்ற திரைப்படத்தைப் பார்க்க நண்பர்கள் எல்லாம் விழுந்து அடித்து ஓடினார்கள். நான் சற்றுத் தாமதித்து விட்டேன். நான் பாரக்கும் போது அந்தப் பாடல் காட்சி இடம் பெறவில்லை.  அந்தப் பாடல் தூரத்தில் நான் கண்ட உன் முகம் .




“தூக்கு மரத்தின் நிழலில்”என்று ஒரு தொடர்..  C.A. பாலன் எழுதியது. பிரபல வார இதழில் வந்தது.  அதை அடிப்படையாகக் கொண்டு எடுத்த படம் “இன்று நீ நாளை நான்”. மதுரையில் சென்ட்ரல் என்று ஒரு தியேட்டர் உண்டு. நண்பர் ஒருவரோடு பார்த்தேன். இரவுக் காட்சி. இரவின் அமைதியில் திரையில் அந்தப் பாடல் ஒலித்தது. உறவுகள் பிறழும் சூழலுக்கு அமைந்த பாடல் அது. பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் என்ற பாடல்.




எனக்கு ஒரு ரகசியம் வெளிப்பட்டது. இந்தப் பாடல் மெட்டுக்களின் கூறுகள் ஒன்றே போலத் தோன்றியது..  பாடல்கள் வெளிப்படுத்தும் உணர்வும் அவ்வாறே.  கேட்ட போது கண்களில் கண்ணீர் பெருகியது. தாகத்துக்குத் தண்ணீர் பருகினோம். தாகம் தீர்ந்து விட்டதா என்ன?

Comments

  1. அருமை. 👌🏻 இசை கூறும் ரகசியம். தாகம் தீர்ந்து விட்டதா என்ன என்பன.
    நான் பார்த்தபோது நிழல்கள் படத்தில் இந்த பாட்டு இருந்தது.
    நீ அவ்வளவு தாமதமாகவா பார்த்தாய்.
    அல்லது படம் வணிக ரீதியாக வெற்றி பெறாததால்,உடனே எடுத்து விட்டார்களா.
    அந்த படம் வெற்றி பெறாதது வருத்தமே.

    ReplyDelete
  2. ஆமாம் மதி. நான் பார்க்கும் போது அந்தப் பாடல் காட்சி இல்லை. அவ்வளவு தாமதம் இல்லை. கொஞ்சம் தாமதம். அதற்குள் அந்தப் பாடலைத் தூக்கி விட்டார்கள். இன்று இதைப் பதிவிடும் போதுதான் முழுப் பாடல் காட்சியையும் பார்த்தேன். நான் கற்பனை செய்திருந்தது வேறு.

    ReplyDelete
  3. அருமையான பாடல். படத்தில் பாடல் இருந்ததா என்ற நினைவில்லை. கருத்தும் அருமை. படம் அருமையான படம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...