Skip to main content

துயரம் விலக்கிய தூக்கம்

 I have seen the pain and suffering

That I longed for each and every foodgrain

With whom should share my sorrows?
I haven’t found a good friend yet

My beloved mother had said child, grow up,
You have to become the arms of your father

You will bear the home on your shoulders
So stand up on your feet

And I was drunk in youthfulness away from such motherly advice
And friend, I never knew in which direction my life will take me

And friends, it has been years since I had bread baked by mother,
I never thought my life would be spent without seeing home again

O people, we strangers have seen much oppression,
For building a house, we left our country

And friend Aamir, what sorrow keeps you away from sleep?
I’ve seen many people go from rags to riches

—Translated from Gojri

Aamir Chauhan, Jammu & Kashmir

From Outlook Magazine


நான் வலியைக் கண்டது உண்டு

துன்பத்தையும்

ஒவ்வொரு தானிய மணிக்காகவும் நான் ஏங்கியிருக்கிறேன் 

என் துயரங்களை நான் யாரிடம் பகிர்ந்து கொள்வது

ஒரு நல்ல நண்பனை நான் இன்னும் கண்டறியவில்லை 

எனதன்பான அம்மா சொல்லியிருக்கிறாள்

மகனே! வளர்ந்து பெரியவனாகி விடு

உன் அப்பாவுக்கு நீ இரு கரங்களாக வேண்டும்

வீட்டின் சுமையைத் தோள்களில் தாங்க வேண்டும்

எனவே உனது கால்களில் நில்

நான் இளமையின் போதையில் இருந்தேன்

எனது அம்மாவின் அறிவுரையில் இருந்து விலகி இருந்தேன்

கேள் நண்பா

வாழ்க்கை எந்தத் திசையில் இட்டுச் செல்லும் என்று அறியாது இருந்தேன் 

நண்பர்களே, வருடங்கள் ஆகிவிட்டது.  என் அம்மாவின் கையால் சாப்பிட்டு

என் வாழ்க்கை வீட்டைப் பாராமல் இப்படியே கழிந்து விடும் என்று எண்ணிக் கூடப் பார்க்கவில்லை

ஓ மனிதர்களே! 

நாங்கள் அயலார்

நிறைய அடக்குமுறையைப் பார்த்து விட்டோம்

எங்களுக்கான வீட்டை உருவாக்கிக் கொள்ள நாட்டை விட்டே சென்றோம்

நண்பா அமீர், எந்தத் துயரம் உன்னைத் தூக்கத்திலிருந்து விலக்கி வைத்திருக்கிறது

நான் பல பேரைப் பார்த்து இருக்கிறேன்

குப்பை மேட்டில் இருந்து கோபுரத்திற்கு உயர்ந்திருக்கிறார்கள் 

மூலம் கோஜ்ரி மொழியில்

ஆமீர் செளஹான்


ஆங்கிலம் வழியாகத் தமிழில்

தி சந்தானம் 

நன்றி அவுட்லுக் ஆங்கில இதழ்








Comments

  1. அருமையான ஆங்கில பதிவு மற்றும் தமிழாக்கம். எங்கோ தேடிப்பிடித்து தான் ரசித்ததை எங்களுக்கு பதிவிடும் முயற்சி தொடரட்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...