பாஸ்டர்நாக் எழுதிய நாவல் டாக்டர் ஷிவாகோ. அதில் பிற்சேர்க்கையாக டாக்டர் ஷிவாகோவின் கவிதைகள் வரும்.
எனது முந்தைய பதிவு Three of Us என்ற திரைப்படம் குறித்து. அதில் ஷைலஜா பல ஆண்டுகளுக்குப் பின் பள்ளித் தோழன் பிரதீப் காமத்தைச் சந்திக்கிறாள். எது அவளை அந்த ஊருக்குக் கொண்டு வந்து சேர்த்தது? அவள் இங்கே வந்து என்ன தேடுகிறாள்? என்ன தொலைந்து போயிற்று? இப்படி எல்லாம் அவன் யோசிக்கிறான். அவன் கவிதை எழுதுபவன் தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்று ஒரு கவிதை எழுதுகிறான். அந்தக் கவிதையின் தலைப்பு தோற்றுவாய். கவிதை வருமாறு
ஓசையின் காட்சி நாளைய தினத்தைத்
தாங்கிக் கொள்வதற்கு
நம்பிக்கையின் ஒரு கல் மலையேற்றத்தில்
மூச்சு வாங்கியபடி புரட்டுவதற்கு
இன்று விளையாடித் தீர்ந்த பின்பு தானே
நாளை வந்து சேரும்
நீ ஏற்கனவே வழியைக் கண்டடைந்து விட்டாய், எனவே கேள்
நாம் அந்த நகரத்தை நோக்கி நடப்போம்
வாழ்க்கை எத்தனை தூரம் நம்மை இட்டுச் செல்கிறதோ அத்தனை
இன்று விளையாடித் தீர்ந்த பின்பு தானே
நாளை வந்து சேரும்
ஆயிரம் ஆயிரம் முத்துக்களை நீ சேகரித்துக் கொள்
இறுதி நாளில் நீ வெறும் கையோடு தான்
செல்ல வேண்டி இருக்கும்
இன்று விளையாடித் தீர்ந்த பின்பு தானே
நாளை வந்து சேரும்
மறுநாள் அவன் வீட்டிற்கு ஷைலஜாவும் அவள் கணவரும் வருகிறார்கள். பிரதீப் கவிதைகள் எழுதுவது பற்றிப் பேச்சு வருகிறது. பிரதீப் அதை ஒரு கூச்சத்துடன் எதிர்கொள்கிறான். பிரதீப்பின் மனைவி அவனுடைய கவிதைகள் அடங்கிய நோட்டை எடுத்து வருகிறாள். அதில் ஒரு கவிதை
நிலவு கடலிடம் சொன்னது
நீ கடைந்தது எல்லாம் வீண்
நீ ஏங்குவது எல்லாம் பொய்
நீ என்னைக் காண வருவது இல்லை
கடல் சொன்னது
நிலவே எனதன்பே
உன்னை விரைவில் காண வேண்டி
எனது இதயம் பொங்குகிறது
ஆனால் என்ன செய்வது?
ஒவ்வொரு முப்பது நாளிலும்
முப்பது விதமாக உனது முகம்
மாறுகிறதே
இந்தக் கவிதையை பிரதீப் வாசிக்கிறான். ஷைலஜாவின் கணவர் கவிதை அருமையாக இருக்கிறது என்று சொல்கிறார். ஷைலஜா இந்தக் கவிதை உனது என்று என்னால் அடையாளம் காண முடியும். கவிதையில் உள்ள கள்ளமின்மைதான் அதன் அடையாளம் என்கிறாள். பிரதீப்பின் மனைவி இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இது மிகவும் சாதாரணமான கவிதை என்று இவர் சொல்லுகிறார் என்றாள். எல்லாவற்றிற்கும் பிரதீப் புன்னகையே பதிலாகத் தருகிறான்.
கவி உள்ளம் ஆழமானது. அந்த ஆழத்தில் என்ன புதைந்து இருக்கும் என்பதை அறிவது கடினம்.
டாக்டர் ஷிவாகோ நாவலில் பிற்சேர்க்கை போல எனது முந்தைய பதிவின் பிற்சேர்க்கையாக மேலே சொன்ன கவிதைகளைக் கருத வேண்டுகிறேன்
அருமை 👌🏻
ReplyDeleteபிற்சேர்க்கை மொழியாக்கம்
நன்றி மதி
Deleteசொன்னா நம்ப மாட்ட.. அந்த கவிதை சீன் வந்த உடனயே நீ இங்க அந்த பட பதிவுல மொழியாக்கம் செஞ்சிருப்பேன்னு நெனச்சு வந்தேன். காணமேன்னு பார்த்தா தனி போஸ்ட். இரு இன்னும் படிக்கல. படிச்சுட்டு வரேன். நா கூட சப் டைடில் உதவியோட முயற்சி செய்யலாமான்னு பார்த்து வேணாம் விஷப்பரீட்சைன்னு விட்டேன். :)
ReplyDelete400 லிருந்து 500 வார்த்தைகளுக்குள் பதிவு அடங்கி விட வேண்டும் என்று நினைப்பது உண்டு. சில சமயம் நீண்டு விடுகிறது. இதையும் தாண்டி சில விஷயங்கள் விடுபட்டுப் போகிறது. எனவே....
ReplyDeleteஅருமை அருமை இரண்டாது பதிவு மற்றும் மொழியாக்கம்
ReplyDeleteநன்றி ராம் தொடர்ந்து படிப்பதற்கு
Delete