Skip to main content

சிறிய பயணம்

 


The living is a passing traveller;

The dead, a person come home.

One short journey between heaven and earth,

Then, alas! we are the same old dust of ten thousand ages.

The rabbit in the moon pounds out the elixir in vain;

Fu-sang, the tree of immortality, has crumbled to kindling wood.

Man dies, his white bones are dumb without a word

While the green pines feel the coming of spring.

Looking back, I sigh; looking in front of me, I sigh again.

What is there to value in this life's vaporous glory?


Li Bai



உயிர்த்து இருப்பவன் அலையும் பயணி

மரித்து இருப்பவன் வீடு திரும்பியவன் 

சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையே ஒரு சிறிய பயணம் 

பின்பு, அந்தோ! நாம் பத்தாயிரம் ஆண்டு

பழமையான தூசி

முயல் ஒன்று நிலவிலிருந்து அமுதத்தை வடித்து எடுக்க முயன்று தோற்கிறது

ஃபூசாங் தரு முறிந்து தீ மூட்டும் விறகு ஆகிப் போனது

மனிதன் இறந்து போகிறான்

அவனது வெள்ளை எலும்புகள் ஒரு வார்த்தை கூட பேசாத ஊமை என ஆகின்றன

பசிய பைன் மரங்கள் வசந்தம் வருவதை உணர்கின்றன 

கடந்ததை எண்ணி நான் பெருமூச்சு விடுகிறேன்

எதிர் வருவதை எண்ணி நான் பெருமூச்சு விடுகிறேன்

ஆவியாகிப் போனது இந்த வாழ்வின் பெருமை

இதில் மதிக்க என்று என்ன இருக்கிறது?


லீ பெய்


தமிழில் தி சந்தானம் 






Comments

  1. வாழ்வின் யதார்த்தம். அருமையான மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் உடனுக்குடன் படிப்பநற்கும் மறுமொழி இடுவதற்கும்

      Delete
  2. sarvE asi brahmam...tat avyaya: avinAshaka: ..jAnanti chEt pUrNagnAnam...nAsti chEt puna:puna: iha lOkE AhamishyAma: vayam..

    ReplyDelete
  3. இப்பாடல் காலத்தில் முந்தியிருந்தாலும், எனது படிப்பு அறிமுகத்தில் சித்தர் பாடல்களின் மென்வடிவத்தில் தெரிகிறது.

    இதை ஒரு ஹைக்கு வடிவத்தில் முயற்சி:

    காலச்சகடின் சுருளில்
    ஞாலத்தின் உருமாற்றம் -
    அடிநாத அண்டத்துகள்கள் !

    -சீனு

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? ஹைக்கூவை பாரதி ஹொக்கு என்று குறிப்பிடுவார். ஒரு அற்புதமான கட்டுரை எழுதியிருக்கிறார்.

      Delete
    2. புதிய தகவல் - இணையத்தில் தேடிப் பார்க்கிறேன். நன்றி !

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...