Skip to main content

ஒரு இளைய கவிக்கு

 


                            Mahmoud Darwish



                                   Fady Joudah


ஒரு இளைய கவிக்கு

BY MAHMOUD DARWISH

TRANSLATED BY FADY JOUDAH

தமிழில் தி சந்தானம் 




எங்களது விவரங்களை  நம்பாதே. மறந்து போ

உனது  சொந்த    வார்த்தைகளிலேயே தொடங்கு

ஏதோ நீதான் முதலாக கவிதை எழுதுபவன் போல  அல்லது

நீ தான் கடைசிக் கவி என்பதைப்  போல 

எங்களது படைப்புகளை நீ  படித்தாலும் எமது  நீட்சியாக நீ எழுதுவது இருக்க வேண்டாம்


துன்பத்தின் புத்தகத்தில் எங்களின் தவறுகளைத் திருத்தி எழுதியதாக  அவை இருக்கட்டும்

யாரிடமும் கேட்காதே நான் யாரென்று 

உனது அன்னையை  யாரென்று உனக்குத் தெரியும் தானே

தந்தை.. 

தந்தை என்றால், உனக்கு நீயே தந்தையாக இரு

உண்மை வெண்மை. அதன் மேலே எழுதி விடு

காக்கையின் மையைக் கொண்டு

உண்மை கருமை அதன் மேலே எழுதி விடு

கானலின் ஒளியைக் கொண்டு

பருந்தோடு உனக்கு சண்டை என்றால் பருந்தைப் போலவே உயர்ந்து எழு

பெண்ணோடு உனக்குக் காதல் என்றால்

அவளல்ல, நீயே அதன் முடிவை விரும்புவனாக இரு

நாம் யோசிப்பதை விட வாழ்வின் உயிர்ப்பு குறைந்து தான் இருக்கிறது 

ஆனால் நாம் அதிகம் யோசிப்பது கிடையாது

உணர்வுகளின் நலன் கெட்டு விடுமோ என்று

ஒரு ரோஜாவை நெடுநேரம் நீ நினைத்தால் 

புயலுக்கு நீ அசைந்து கொடுக்க மாட்டாய்

நீயும் என்னைப் போலத்தான்

ஆனால் எனது ஆழங்கள் தெளிவாக இருக்கிறது

உனக்கான பாதைகளின் ரகசியங்கள் ஒருபோதும் முடிவதில்லை

அவை  இறங்கும்  ஏறும்

அவை இறங்கும் ஏறும்

இளமையின் இறுதியை நீ திறமையின் முதிர்ச்சி என்று சொல்லலாம்

அல்லது ஞானம் என்று

சந்தேகமில்லை அது ஞானமே

வரிகள் இல்லாப் பாடலின் ஞானம்

கையில் இருக்கும் ஆயிரம் பறவைகள் மரத்தை அணிந்திருக்கும் ஒரு பறவைக்கு ஈடாகாது

கடுமையான நாட்களில் கவிதை என்பது  கல்லறை மீதான அழகிய மலர்களாக இருக்கும்

எடுத்துக்காட்டாக இருப்பது

அத்தனை எளிதல்ல

நீ நீயாகவே இரு

எதிரொலியின் எல்லைகளுக்கு அப்பால் வேண்டுமானால் வேறாக இரு

ஆர்வத்திற்கும் காலாவதியாகும் தினம் உண்டு, அது நீட்டிக்கப் படும் அளவு

எனவே உனது இதயத்தின் பொருட்டு உக்கிரம் கொள்

உனது வழியை அடையும் வரை அதனைப் பின்தொடர்ந்து செல்

உனது அன்பிடம் சொல்லி விடாதே  நீதான் நான் என்று

மேலும் நான் தான் நீ என்று

நீ மாற்றிச் சொல் நாம் உபரி மேகத்தின்

தப்பியோடிய மேகத்தின்

இரண்டு விருந்தினர்கள் என்று


விலகிச் செல் முழு பலத்துடன்

விதிகளிலிருந்து விலகு

ஒரே வாசலில் இரண்டு நட்சத்திரங்களை வைக்காதே

அவசியமானதிற்கு அருகில் மற்றதை வை  

எழுகின்ற பேரானந்தம் நிறைவு கொள்ளுமாறு

எமது அறிவுறுத்தல்கள் சரியே என்று எண்ணி விடாதே 

ஒட்டகங்களின் வரிசையில் தடங்களை மட்டுமே நம்பு

கவியின் உள்ளத்தில் போதனை ஓரு துப்பாக்கிக் குண்டு போல

ஒரு பயம் தரும் அறிவு

கோபம் கொள்ளும் போது காளையைப் போல் திடமாக இரு

காதல் கொள்ளும் போது பாதாம் மலரைப் போல மென்மையாக இரு

மூடிய அறையில் பாடும் போது எதுவாகவும் இல்லாமல் இரு

பாதை நீள்கிறது ஒரு புராதனக் கவியின் இரவைப் போல

சமவெளிகளும் மலைகளும் நதிகளும் பள்ளத்தாக்குகளும் நடக்கின்றன

 உனது கனவின் அளவு  தொட்டு

 ஒரு லில்லிப் புஷ்பம் உன்னைப் பின் தொடர்கின்றது

 அல்லது  ஒரு தூக்குமரம்

உனக்கான பணிகளே நான் உன்னைப் பற்றி கவலைப் பட  வைக்கிறது


நான் கவலைப்படுகிறேன்


குழந்தைகளின் கல்லறை மீது நடனம் செய்பவர்களில் இருந்து


பாடகிகளின் தொப்புளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் காமராவில் இருந்து


நீ என்னை ஏமாற்றமடைய விடமாட்டாய் 


மற்றவர்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் உன்னைத் தொலைவு படுத்திக் கொண்டால்


எது என்னைப் போல இல்லையோ அது மிகவும் அழகாக இருக்கும்


இப்போதிலிருந்து உனது ஒரே காப்பாளர் கைவிடப்பட்ட எதிர்காலம்


துயரில் மெழுகைப் போல உருகும் போது யோசிக்காதே 

யார் உன்னைக் காண்பார்கள்

யார் உனது உள்ளுணர்வின் ஒளியைத் தொடருவார்கள் என்று

உன்னையே நினை. என்னுள் இத்தனை தானா என்று


.

கவிதை எப்பொழுதும் முற்றுப் பெறுவதில்லை.

வண்ணத்துப் பூச்சிகள் அதை முழுமையுறச் செய்கிறது


காதலுக்கு அறிவுரைகள் கிடையாது.  அது அனுபவம் மட்டுமே


கவிதைக்கு அறிவுரை கிடையாது. அது திறமை மட்டுமே.


.இறுதியாக ஒன்று.  உனக்கு சலாம்





Comments

  1. சற்று நீளமான கவிதை. நிதானமாகப் படித்தேன். கருத்து நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்று !! முந்தைய படைப்புகள் நமக்குள் ஒரு தாகத்தை உண்டாக்கும்போது, அவைகளையே அருந்தக்கூடாது. தாகம் தீர்க்கும் நீரை வேறு இடத்தில் கண்டு கொள்வதுதான் கலை, இலக்கியத் தேடல் !!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...