பெர் லாகர்க்விஸ்ட் ஸ்வீடன் தேசத்து எழுத்தாளர். அவர் எழுதிய நாவல் Barabbas. அது நோபல் பரிசு பெற்ற நாவல். சென்ற வருடம் தான் படித்தேன். பாரப்பாஸ் ஒரு கொள்ளையன். சிலுவையில் ஏற்றப்பட்டு தண்டனை பெற வேண்டியவன். பஸ்கா விருந்து நாளில் மக்கள் விரும்பினால் ஒருவரை தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும். பிலாத்து கேட்கும் போது எல்லோரும் நசரேயன் என்ற ஏசுவைச் சிலுவையில் ஏற்றச் சொல்லிக் கூக்குரல் இடுகிறார்கள். பிலாத்து ஏசுவைச் சுட்டிக் காட்டி இந்த மனிதன் மேல் நான் ஒரு குற்றமும் காணவில்லையே என்று சொல்கிறான். பின்பு தண்ணீர் கொண்டு வரச் சொல்லி ஒரு பாத்திரத்தில் தனது கைகளைக் கழுவிக் கொள்கிறான். நீங்கள் சொல்வதால் ஏசுவைச் சிலுவையில் ஏற்றும் தண்டனையை வழங்குகிறேன். இந்தப் பாவம் என்னைச் சேராது என்கிறான்.
பாரப்பாஸ் நாவல் தண்டனைக்குத் தப்பிய கொளளையனைப் பற்றியது. இதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தது பற்றியே மேலே குறிப்பிட்டிருந்தேன். பெர் லாகர்க்விஸ்டின் எழுத்து எளிமையான சொற்களால் ஆனது. ஆனால் அதனுடைய ஆழம் நம்மை எங்கோ கொண்டு அமிழ்த்தி விடும். நம்மைப் பற்றி மிகவும் யோசிக்க வைக்கும். ஒரு ஆன்மிக தளத்தில் நின்று பேசுவதாக இருக்கும். சாரம் கொண்ட தனிமையில் ஊறி வந்த சொற்கள் அவருடையது.
நாவலைப் படித்ததின் தொடர்ச்சியாக இவரது பல கவிதைகளைப் படித்தேன். அதில் ஒரு கவிதையைத் தமிழில் செய்தேன். அது.
When Darkness Falls
It’s the most beautiful when darkness falls
All the love heaven holds
is gathered in a dim light
over the earth,
over the house of the field.
Everything is tenderness, everything is touched by hands.
The Lord Himself obliterates distant shores.
Everything is close, everything is distant.
Everything is given
man as a loan
Everything is mine, and everything shall be taken from me
Soon everything will be taken from me.
The trees, the clouds, the ground where I go.
I will walk
lonely without traces.
Par Lagerkvist
இருள் விழும் போது
இருள் விழும் போது அத்தனை அழகு
சொர்க்கம் கொண்டிருக்கும் எல்லா அன்பும்
ஒரு மங்கிய வெளிச்சத்தில் சேகரிக்கப்படுகிறது
பூமியின் மேலிருக்கும்
வயல் வெளி வீட்டின் மேலிருக்கும்
மங்கிய வெளிச்சத்தின் மேல்
எல்லாமே மென்மை
எல்லாமே கைகளால் தீண்டப்படுகிறது
தூரத்துக் கரைகளை இறைவனே அழித்து விடுகிறான்
எல்லாமே அருகில், எல்லாமே தொலைவில்
எல்லாமே கடனாக வழங்கப்பட்டிருக்கிறது.
எல்லாமும் எனது. எல்லாமும் என்னிடமிருந்து எடுத்துச் செல்லப்படும்
விரைவிலேயே எடுத்துச் செல்லப்படும்
மரங்கள், மேகங்கள், நான் செல்கின்ற நிலப் பரப்பு
நான் தனியே நடந்து செல்வேன்
தடயங்கள் ஏதும் இன்றி
தமிழில்
தி சந்தானம்
இந்தக் கவிதை ஒரு தரிசனத்தைத் தந்தது.
பெர் லாகர்க்விஸ்டை அறிய வாய்த்தது ஒரு பேறு.
Very beautiful thought. Your search and the books you meet in your journey fascinate me in all these posts.
ReplyDeleteThanks Janani
Deleteஇது மாதிரி ஒரு நாவலைப் பற்றி கேள்விப் பட்டதே இல்லை. தேடித் தேடி விஷயங்களை பகிர்ந்தற்கு நன்றி
ReplyDeleteநன்றி ராம்
Deleteஅருமை
ReplyDeleteநன்றி மதி
DeleteWonderful piece of writing . You are introducing lots of new authors to us.Very interesting series.Congratulations
ReplyDeleteThank you Ram. I know you would appreciate this. Cherish our moments of identical interest
Delete