Skip to main content

இருவராய் வந்தார்




 மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ

மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட

எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே


இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்


கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்


கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே


அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி!


அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே 



திருநெடுந்தாண்டகம் 

திருமங்கையாழ்வார்


குறிப்பு


தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும்.

நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும்.

மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம். 

ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும்.


மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர்

மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர்

ஆக  மொத்தம் எட்டு சீர்

இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும்.

ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது.

கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை.




She says to her friend


Hair fragrant and black ink in colour

Curling behind, over the shoulders

The ear drops, fish shaped, 

Dangling on both sides in a rhythm..

With bows to pull in their arms as guard

They came here, the Two, stood before me,

Palms the colour of lotus, mouth as lotus,

The pair of eyes and the feet like lotus

Seeing them, their demeanour, my friend,

I feared they were from the other World


In English

T Santhanam


Note


The above is a translation.of a particular type of Tamil verse known as Thandakam.  Thandakam is of two types.


  1. Kurunthandakam

       2. Nedunthantakam.    


Kurunthandakam has a meter of 6 words each in 4 stanzas while Nedunthantagam follows a pattern of 8 words each  in 4 stanzas.

The English  translation follows a blank verse pattern and attempts to bring the essence of the original. Here in this verse Thirumangai Alwar takes the role of a mistress who speaks  to her friend about the two young men with bows whom she chances to meet on the way

Needless to say that the two young men are Ram and Laxman from the Great epic Ramayana.










Comments

  1. Nice - both the translation and explanation !
    -Cheenu

    ReplyDelete
  2. அருமை .. ஆங்கிலத்தில் அமுதப் பாசுரங்கள் நூல் வெளியீடு எப்ப?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயந்தி.. பார்க்கலாம்

      Delete
  3. மிக அருமை. பாராட்டப்பட வேண்டிய மொழி பெயர்ப்பு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...