Skip to main content

மரம் அறியும்

 I carry inside myself my earlier faces, as a tree contains its rings.


                                         Tomas Transformer



மரங்கள் எப்படியாவது கவர்ந்து இழுத்து விடுகிறது. நடை பழகும் காலை நேரங்களில் பெரிய பெரிய மரங்களைப் பார்த்தபடியே நின்று விட நேர்கிறது.மரத்தின் கீழே அமர்ந்து கண்மூடி அசையாமல் எவரேனும் இருந்தால் அவரும் மரமே என்றே தோன்றுகிறது. மாலை நேரங்களில் இள வயது ஆணும் பெண்ணும் மரத்தடியில் தான் பேசுகிறார்கள். என்ன ஒரு பேச்சு. தீராத பேச்சு. மரத்தின் இலைகள் ஒன்றுடன் ஒன்று பேசுவதைப் போல.


மரத்தடியில் தான் கெளதமனுக்கு ஞானம் பிறந்தது. பின்பு அவர் புத்தர் ஆகிவிட்டார். அவர் பல நாட்கள் அலைந்து திரிந்தார். மனிதர்கள் துக்கத்தில் வீழ்ந்து அல்லல் படுகிறார்கள். இதைத் தீர்க்க வழி ஏதும் உண்டா என்றே அவருக்குச் சிந்தனை.  பல நாள் அலைச்சல். பல நாள் பசி. சுருண்டு விழுந்து விடுகிறார். அப்போது கறந்த பாலைக் சுமந்து செல்லும் பெண் அவரைக் காண்கிறாள். இயல்பான அக்கறையோடு அவருக்குப் பாலருந்தத் தருகிறாள். சிறிது சிறிதாகப் பருக ஒரு தெம்பு பிறக்கிறது.

அவர் ஒரு முடிவுக்கு வருகிறார். இனி உணவின்றி இந்த உடலை வாட்டுவது கிடையாது. கொஞ்சம உணவாவது தேவை. இல்லை என்றால் இந்த உடலைச் செலுத்துவது எப்படி?  தெளிவோடு கூடிய வைராக்கியம் பிறக்கிறது. மரத்தடியில் சென்று கண்மூடி அமர்கிறார். அது ஒரு அத்தி மரம். ஞானம் அங்கே பிறந்ததால் அது போதி மரம்.


காலையில் நகரத்துக்குத் திரும்புகிறார் ஏசு. அவருக்குக் கடுமையான பசி. வழியில் ஒரு அத்தி மரத்தைப் பார்க்கிறார். அந்த மரத்தில் இலைகளைத் தவிர எதுவும் இல்லை. ஏசு இந்த மரத்தில் எதுவும் காய்க்காது என்று சாபமிடுகிறார். அந்த ஒரு சொல்லிற்கு மரம் பட்டுப் போகிறது.

பள்ளிப் பருவத்தில் பாடத்தில் வரும் ஓரு பாடல். படிக்காசுப் புலவர் எழுதியது. ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன காயாத எட்டி மரம் காய்த்தென்ன காய்த்துப் பலன் என்ன?  அது நினைவுக்கு வருகிறது இல்லையா?


அறியாப் பருவத்தில் பார்த்த ஒரு திரைப்படம் அன்னை. அந்தத் திரைப்படத்தின் காட்சிகள் குழப்பமாக மனதில் ஓடும். அதில் ஒரு பாடல்

பூவாகிக் காயாகிக் கனிந்த மரம் ஒன்று

பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று.

கேட்டாலே மனதில் வேதனை பெருகும்.


சில திரைப்படங்களில் மரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும். ரித்விக் கடக் இயக்கிய வங்காளப் படம் ஒன்று.  மேகே தக்கா தாரா

என்று. துவக்கக் காட்சியில் பின்னணியில் ஆலாபனை ஒலிக்க மரங்களைக் கடந்து நாயகி நடந்தபடி வருவதாக அமைக்கப் பட்டிருக்கும்.  நதியின் கரையருகே நாணல் புதர். அதன் அருகே பாடிப் பழகும் குரல் அவளுடைய சகோதரனுடையது. . தொலைவில் பாலத்தில் பனி மூட்டத்தின் ஊடே ஒரு புகைவண்டி தடதடத்துச் செல்லும். அவளுடைய இதழில் ஒரு புன்னகை. அருமையான  கறுப்பு வெள்ளைக் காட்சி.




அம்மா அறியான் என்று ஒரு மலையாளப் படம்.  அற்புதமான படம். ஜான் ஆபிரகாம் இயக்கிய படம். அவர் தோற்றம் ஏசுவைப் போல இருக்கும். இந்தத் திரைப்படத்தின் துவக்கக் காட்சி. புருஷன் மேல்படிப்புக்கு டெல்லி செல்வதாக இருக்கிறான். அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிராமத்தை விட்டுக் கிளம்புகிறான். அவன் மனதில் கவிதை ஓடுகிறது.


Why I must go

I do not want to go

Night creeps into my days

My spent dreams are scarred with silence

I throw them into nights empty sleep

They fall into the deserts of nightmare, of misery

In the eyes of this village… dry and scorched

I seem to find myself

But I must traverse the path of ill omen

I am accursed


இந்த வரிகள் ஓடும் போது கிளைகள் உயர்த்திய ஒரு மரம் நிழலோவியமாய் எதிரே விரிகிறது.  மலைப்பாதையில் செல்லும் போது ஜீப் நிறுத்தப் படுகிறது. போலீஸ் வலுக்கட்டாயமாக அனைவரையும் இறக்கி விடுகிறது. இறந்த உடலை ஜீப்பில் ஏற்றுகிறார்கள்.  தற்கொலை கேஸ் என்று சொல்கிறார்கள். அந்த முகம் புருஷனுக்குப் பரிச்சயமானது போல் தோன்றுகிறது. அவன் ஒரு தாள வாத்தியக் கலைஞன்.  இயக்க நாடகங்களில் தபலா வாசிப்பவன். அருகில் இருந்த கிராமவாசி ஒருவர் மலைப் பாறையில் ஒரு மரத்தில் அவன் தூக்கில் தொங்கியதாகச் சொல்கிறார். புருஷன் மலைப்பாறையில் ஏறி அந்த மரத்தைப் பார்க்கிறான். மரத்தில் ஒரு கயிறு காற்றில் அசைந்தபடி இருக்கிறது.

பின்னணியில் பாப்லோ நெருடாவின் கவிதை ஒலிக்கிறது.


I do not know, I am ignorant, I hardly see

but it seems to me that its song has the colour of wet violets,

violets well used to the earth,

since the face of death is green,

and the gaze of death green

with the etched moisture of a violet's leaf

and its grave colour of exasperated winter.


But death goes about the earth also, riding a broom

lapping the ground in search of the dead -

death is in the broom,

it is the tongue of death looking for the dead,

the needle of death looking for the thread.


மரணம் என்ற ஊசி தனது நூலைத் தேடுகிறது. மரத்தின் கிளையில் அந்தக் கயிறு காற்றில் அசைந்தபடி இருக்கிறது.



மரம் ஒரு குறியீடு. அது மனிதர்களை அறியும். ஒரு மெளன சாட்சியாய் நிற்கும். அன்று ஒரு நாள் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. சடசடவென்று ஒரு சத்தம் எழுந்தது. மரம் வீழ்ந்து கிடந்ததைப் பார்க்கும் போது ஒரு பெரும் வாழ்வு வீழ்ந்து கிடப்பதைப் போலிருந்தது.



Comments

  1. ஆஹா அருமை அருமை. என்ன ஒரு அழகான எழுத்து.
    மரம் வெறும் வார்த்தையில்லை. அது ஒரு உணர்வு.

    ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக். போன வருடம் புயல் அப்ப எங்காத்து வாசல்ல இருந்த வாதா மரம் வேரோட சாய்ந்த்தது. சாய்ந்து முழுதும் தரையில் விழாமல் இருந்ததை கார்ப்பரேஷன்ல இருந்து, JCB எடுத்தண்டு வந்து அதை கீழே சாய்த்தனர். சொன்னால் நம்ப மாட்டாய், நம்மாத்து வாசல் அகலமான 40 அடிக்கு அது அப்படியே முழுவதுமாக அடைத்துக்கொண்டு கிடந்தது. இரவு நேரம், மழை, வண்டியின் வெளிச்சம் மட்டும், பால்கனியில் இருந்து பார்க்க திகில் படம் பார்ப்பது போல் இருந்தது. பழைய புராண சினிமால காமிக்கற மாண்டு கிடக்கும் பெரிய அரக்கன். போலக் கிடந்தது அந்த மரம். ஒரு மாதிரி பயம், வேதனை எல்லாம் கலந்து அழுகை அழுகையாக வந்தது. அத அப்றம் க்ளியர் பண்ண மேலும் நான்கு நாட்கள் ஆச்சு.

    ReplyDelete
  2. மரம் என்ற ஒரு வார்த்தை பற்றி எவ்வளவு தொடர்புடைய எவ்வளவு விஷயங்கள். அருமையான மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Beautifully written , thoroughly enjoyed
    .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...