கல்லூரியில் ஹிந்தி மொழியைக் கற்றேன். தமிழ் இலக்கியம் போலச் செறிவு மிகுந்தது அல்ல ஹிந்தி இலக்கியம். தமிழ் மீது தணியாத ஆர்வம் உண்டு. எனினும் பண்டைத் தமிழ் இலக்கியச் சுவையைப் பருகினேன் அல்லேன்.
ஹிந்தியைத் தேர்வு செய்யப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஹிந்திப் பிரச்சார சபை நடத்திய ஓரிரண்டு தேர்வுகளை எழுதியிருந்தேன்.முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தேன். ஓரளவு ஹிந்தி அப்போது தெரிந்தது. அப்போது நான் ஹம்ராஜ் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். நீல வானம். பனி மூடிய இமயத்தின் சிகரங்கள். வண்ண மலர்கள். இந்தக் காட்சிகள் எல்லாம் திரையில் விரிந்தது. மனதைப் பறி கொடுத்தேன். இசையோ இனிமை. ஆனால் பாடலின் பொருளோ பேசும் வசனமோ சிறிதும் புரியவில்லை. எனவே ஹிந்தியில் மேல் ஒரு ஆர்வம். ஹிந்தியைத் தேர்ந்து எடுத்தேன்.
கபீர் தாஸ் என்ற பெயர் அறிமுகம் ஆனது. அவர் எழுதிய கண்ணிகளைத் தோஹா என்று குறிப்பிடுவார்கள். எளிமையான சொற்கள். பெரிய உண்மைகள் அதிலே பொலிந்து நிற்கும். யோசிக்க வைத்து விடும். ஒரு பேச்சுக்காக திருக்குறளைப் போல என்று சொல்லலாம். அதன் சுருங்கிய வடிவத்திற்காக. ஆனால் இரண்டும் வேறானவை. கபீர் தாஸின் கண்ணிகள் சில இன்றளவும் மனதில் நிற்கிறது. அதில் ஒன்று. துக்கம் வரும் போது எல்லோரும் இறைவனை நினைக்கிறார்கள். சுகம் வரும் போது நினைப்பார் இல்லை. சுகம் வரும் போதும் அவனை நினைத்தால் துக்கம் எப்படி வரும? பிறிதொன்று. ஜப மாலையை எடுத்து உருட்டுகின்றேன். மனமோ பத்து திசைகளிலும் உருளுகின்றது. கடவுளே எனக்கு இத்தனையே வேண்டும். அது நானும் குடும்பமும் பசியாது வாழப் போதுமானதாக இருக்க வேண்டும். சாது ஜனங்களுக்கு உணவிடவும் போதுமானதாக இருக்க வேண்டும்.
கபீரின் பிறப்புப் பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை. ஒரு இஸ்லாமியர் அவரைக் குளக்கரையில் கண்டெடுத்து வளர்த்ததாகச் சொல்வர்.
சமீபத்தில் கபீரின் பாடல்களை ஆங்கிலத்தில் படிக்க நேர்ந்தது. அதைத் தமிழில் செய்ய முயன்றிருக்கிறேன்.
A drop falls in the ocean
Everyone agrees
The ocean held in a drop?
A rare one sees
The wave in the ocean
Is the ocean itself
Rising, water, falling, water
Tell me how it could be
Any other?
Instead of ‘ocean’
You call it a ‘wave’
By doing so
Does it lose its water?
The world’s a mirage
That obscures the eternal
Kabir has seen through it
And blown its cover
ஒரு துளி கடலில் விழுகிறது
அனைவரும் ஒத்துக் கொண்டார்கள்
ஒரு துளியிலே கடல்?
இதை அரிதாக யாரோ காண்கிறார்கள்
கடலிலே அலை என்பது
கடலே தான்
எழுவதும் நீரே, விழுவதும் நீரே
சொல்லேன், அது வேறு எதுவாக இருக்கும்?
கடல் என்று அழைப்பதற்குப் பதில்
நீ அலை என்று அதை அழைக்கிறாய்
அப்படிச் செய்வதால்
அது நீரை இழந்து விடுமா என்ன?
உலகம் ஒரு கானல்
நிரந்தரத்தை அது மறைத்து விடுகிறது
கபீர் அதைப் பார்த்து விடுகிறான்
அந்த மறைப்பை ஊதியெடுத்து விடுகிறான்
This truth, that truth is one!
One breath, two lives
Look in your heart, and you will know
What is stirring in mine
Nothing in me, is mine to claim
All that is, is yours
I surrender what’s yours
To you again
What can I say I’ve lost?
இந்த உண்மை, அந்த உண்மை ஓன்றே உண்மை
ஒரு சுவாசம், இரு வாழ்க்கைகள்
உன் இதயத்தைப் பார்
நீ அறிவாய்
எனது இதயத்தில் எது அசைகிறது என்று
எனக்குள்ளே எதுவும் எனதல்ல உரிமை கொள்ள
உள்ளது எல்லாம் உனது
எது உனதோ அதை
நான் உன்னிடமே ஒப்படைப்பேன்
நான் இழந்தது என்று எதனைச் சொல்வேன்?
I won’t come
I won’t go
I won’t live
I won’t die
I’ll keep uttering
The name
And lose myself
In it
I’m bowl
And I’m platter
I’m man
And I’m woman
I’m grapefruit
And I’m sweet lime
I’m Hindu
And I’m Muslim
I’m fish
And I’m net
I’m fisherman
And I’m time
I’m nothing
Says Kabir
I’m not among the living
Or the dead
நான் வர மாட்டேன்
நான் போக மாட்டேன்
நான் வாழ மாட்டேன்
நான் சாக மாட்டேன்
நான் தொடர்ந்து உச்சரிப்பேன்
பெயரை
என்னையே அதற்குள்ளே
தொலைத்து விடுவேன்
நான் கிண்ணம்
நான் தட்டு
நான் மனுஷன்
நான் மனுஷி
நான் திராட்சை
நான் சாத்துக்குடி
நான் இந்து
நான் முஸ்லீம்
நான் மீன்
நான் வலை
நான் மீனவன்
நான் காலம்
கபீர் சொல்கிறான்
நான் ஏதும் இல்லை
நான் வாழ்பவரில் இல்லை
செத்தாரிலும் இல்லை
கபீர் நெசவாளியாக இருந்தார். நெசவின் வழியாகவே வாழ்க்கையை அறிந்தார். நெய்யும் ஒவ்வொரு இழையிலும் ராமனைக் கண்டார். அவருடைய உலகத்தில் ராமன் வேறு. ரஹீம் வேறு அல்ல.
எனவேதான் அவர் இறந்தபோது இந்துக்களும் அவர் உடலுக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். இஸ்லாமியரும் அவர் உடலுக்குச் சொந்தம் கொண்டாடினார்கள்.
அவர் உள்ளத்தை அறிந்தார் எவரும் இல்லை.
Comments
Post a Comment