Skip to main content

அற்புதங்கள் ஆழத்தில்

 


ஹான் ஷான் என்ற சீனக் கவியின் Cold Mountain தொகுப்பிலிருந்து மேலும் சில கவிதைகளைப் பார்க்கலாம்


Bright water shimmers like crystal,

Translucent to the furthest depth.

Mind is free of every thought

Unmoved by the myriad things.

Since it can never be stirred

It will always stay like this.

Knowing, this way, you can see,

There is no within, no without


ஒளி பொருந்திய தண்ணீர்

ஸ்படிகம் போல் மின்னுகிறது.

வெளிச்சம் அதன் ஆழங்களில்

ஊடுருவியிருக்கிறது 

மனம் ஒவ்வொரு எண்ணத்திலிருந்தும் 

விடுபட்டு இருக்கிறது

பலபலவான எண்ணங்கள் அதில் சலனம் செய்ய முடியாது

அதனால்

அப்படித்தான் அது எப்போதும் இருக்கும்

தெரிந்து கொள் இந்த வழியை

உள்ளே என்றும் வெளியே என்றும் ஏதும் கிடையாது


Are you looking for a place to rest?

Cold Mountain’s good for many a day.

Wind sings here in the black pines,

Closer you are, the better it sounds.

There’s an old man sitting by a tree,

Muttering about the things of Tao.

Ten years now, it’s been so long

This one’s forgotten his way home.


ஓய்வெடுக்க இடம் தேடுகிறாயா?

குளிர் மலையே நல்லது அதற்கு

கரிய பைன் மரங்களில் காற்று பாடுகிறது

பக்கத்தில் நெருங்க நெருங்க பாடல் நன்றாக ஒலிக்கும்

பழைய மனிதன் ஒருவன் மரத்தடியில் அமர்ந்திருக்கிறான் 

அவன் தாவோவைப் பற்றிச் சிலதை முணுமுணுக்கிறான்

பத்து வருடங்கள் ஆயிற்று, மிக நீண்ட நாட்கள்

இவன் வீட்டுக்குப் போகும் வழியை மறந்தாயிற்று 


Cold rock, no one takes this road.

The deeper you go, the finer it is.

White clouds hang on high crags.

On Green Peak a lone gibbon’s cry.

What friends do I need?

I do what pleases me, and grow old.

Let face and body alter with the years,

I’ll hold to the bright path of mind.


பனிப் பாறை,

யாரும் இந்த வழி வருவதில்லை

ஆழத்தில் செல்லச் செல்ல,

அத்தனை அற்புதம்

நெட்டைப் பாறைகளில் தொங்கும் வெள்ளை மேகங்கள்

பச்சை சிகரத்தில் தனித்தொரு மந்தியின் குரல்

எனக்கு ஏன் நண்பர்கள் தேவை?

நான் விரும்பியதைச் செய்கிறேன்

எனக்கு வயதாகிறது

முகமும் மேனியும் வருடங்கள் தோறும் மாறுகிறது

மனதின் பாதையில் வெளிச்சம் கூடும்

நான் பாதையிலிருந்து மாற மாட்டேன்


தமிழில்

தி சந்தானம்

Comments

  1. ஆழ்ந்த கருத்துக்கள். அருமையான மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...