Skip to main content

புல்லை நகையுறுத்தி

 



வானில் பறக்கும் புள்ளெலாம் நான் என்று பாரதியின் பாடல் ஒன்று துவங்கும். அதன் நடுவில் கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று ஒரு வரி வரும். பாரதிக்கு ஷெல்லியைப் பிடிக்கும். அதற்கு சற்றும் குறையாமல் கம்பனைப் பிடிக்கும். அதனால் தான் வானில் பறக்கும் பறவை மண்ணில் திரியும் விலங்கு என்ற வரிசையின் நடுவில் கம்பன் உரைத்த கவியும் தானும் வேறல்ல என்று குறிப்பிடுகிறார்.  


யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்,பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை


என்று கம்பனை முதலிடத்தில் வைத்துப் போற்றுகிறார். மேலும் தனது ஸ்வசரிதையைக் கவிதையாக வடிக்கும் போது கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததைக் கொண்டாடுகிறார். 


கல்வி சிறந்த தமிழ் நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு என்று மகிழ்ந்து போகிறார்.


கம்பனின் வரிகளில் அவர் மனம் தோய்ந்து தோய்ந்து ஆனந்தம் கண்டிருக்க வேண்டும்.


கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல். பால காண்டத்தில் வருகிறது.


முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,

    மருதத்தை முல்லை ஆக்கிப்

புல்லிய நெய்தல் தன்னைப்

    பொரு அரு மருதம் ஆக்கி,

எல்லை இல் பொருள்கள்

    எல்லாம் இடை தடுமாறும் நீரால்

செல் உறு கதியில் செல்லும்

    வினை எனச் சென்றது அன்றே.


பாரதியின் குயில் பாட்டில் சின்னக் குயிலியின் கதையைப் பாரதி சொல்வார். அந்த நாசக் கதையை நடுவே நிறுத்தி விட்டு காலைக் கதிரொளியின் கற்பனைகள் பாடுவார்.


புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி 

மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து

விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக்

காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.

நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்,

இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன். 


இப்படி அவர் பாடும் போது கம்பனின் கவி போன்று தொனிப்பதை நம்மால் உணர முடிகிறது அல்லவா? கம்பன் அவரது நெஞ்சில் கலந்து நிற்பதைக் காண முடிகிறது அல்லவா?


Comments

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...