Skip to main content

வைகல்

 தினம் தினமும் என்று ஒரு பாடல் சிறிது காலத்திற்கு முன் பிரபலமானது. விடுதலை 2 திரைப்படத்தில். தினம் தினமும் என்ற வார்த்தையை சாதாரணமாக அன்றாடம் என்று குறிப்பிடுவார்கள். பேச்சு வழக்கில் அன்னாடம் என்று சொல்வது உண்டு. அன்றன்று சம்பாதித்துக் காலம் கழிப்பவர்களை அன்றாடங் காய்ச்சி என்று அழைப்பார்கள்.


அன்றாடம், தினம் தினம், தினந்தோறும் என்பதை நல்ல தமிழ் வைகல் என்று சொல்லும்.


வருவிருந்து வைகலும ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று


என்பது குறள். தன்னை நோக்கி வரும் விருந்தினரை தினந்தோறும் போற்றுபவன் வாழ்க்கை பாழ்படுவதில்லை என்பது பொருள்.



நற்றிணையில் ஒரு பாடல்.


வைகல்தோறும் இன்பமும் இளமையும்

எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;

காணீர் என்றலோ அரிதே; அது நனி

பேணீர் ஆகுவிர்-ஐய! என் தோழி


தலைவியைப் பிரிந்த தலைவன் பொருள் ஈட்டச் சென்று விடுகிறான். இதைப் பொருள் வழிப் பிரிதல் என்று பழம் தமிழ் இலக்கியம் சொல்லும். பல நாட்கள் ஆயிற்று. அவன் திரும்பவில்லை. இங்கே இவள் வாடுகிறாள். இளமை கழிந்து கொண்டிருக்கிறது. எப்படி? எய்து விட்ட அம்பின் நிழல் போல அவள் இளமையும் இன்பமும் மறைகின்றதாம். தினம் தோறும் குன்றியபடியே இருக்கிறதாம். இவ்வாறு தோழி புலம்புவதாகப் பாடல் அமைந்திருக்கிறது.


நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் ஒரு பாசுரம்.


வைகல் பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்

செய் கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும்

கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு

கைகள் கூப்பி சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே 


கடலின் அருகே அழகிய நீர் நிலை. அங்கே கொக்குக் கூட்டம் தினந்தோறும் இரையுண்ண வருகின்றன. அவற்றை நோக்கித் தலைவி சொல்கிறாள். கனி போன்ற வாய் கொண்ட என் பெருமான் கையிலே சக்கரம் ஏந்தியபடி திருவண்வண்டூரில் இருக்கிறான். அவனிடம் சென்று கை கூப்பி நான் அவன் மேல் கொண்ட காதலைச் சொல்லுங்கள். 

இப்படி கொக்கின் கூட்டத்தைத் தூது விடுகிறாள் தலைவி.


Comments

  1. தினம் தினமும் மற்றும் வைகல் என்ற வாரத்தைகளை வைத்துக் கொண்டு அருமையான பதிவு. என் போன்றவர்கள் யோசிப்பது என்பது முடியாத காரியம். பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல தகவல் ! வைகல், வைகறை (விடிகாலை) இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. வைகறை என்பது விடியல். வைகு என்று ஏதும் வேர்ச்சொல் இருக்குமா தெரியவில்லை.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...