இளையராஜா, மன்னிக்கவும் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. அரசே நடத்திய விழா. சிகரம் தொட்ட தமிழன் என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். சிம்பனி என்ற மேற்கத்திய இசை வடிவத்தை உருவாக்கியதைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா. இந்த விழாவில் பேசியவர்கள் பெரிதாக சிம்பனி பற்றிப் பேசவில்லை. உணர்ச்சிப் பெருக்கில் இளையராஜாவால் சரியாகப் பேச முடியவில்லை. இதை அவரே தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். மூகாம்பிகை மேல் கொண்ட பக்தி குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போனது பற்றி எல்லாம் பேசியவர் ரஜினிகாந்தோடு சேர்ந்து குடித்ததைப் பற்றிக் கூற முயன்றார். சரிவர அதைச் செய்ய முடியாமல் போனது. அவருக்கு உதவி செய்ய ரஜினிகாந்த் மன்னிக்கவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மைக்கைப் பிடித்தார். பெருத்த ஆரவாரம். ரஜினிகாந்த் மகேந்திரன் மற்றும் இளையராஜாவோடு சேர்ந்து குடித்ததை பெருங்கூட்டத்தோடு பகிர்ந்து கொண்டார். எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இசைதான் வாழ்வு என்று ஆனபின் இளையராஜா மிகுந்த ஈடுபாடு மற்றும் முனைப்புடன் தனது வேலையைச் செய்தார். தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தார். தனிப்பட அவரிடம் இருந்த ஒழுங்கு கட்டுப்பாடு மற்றும் சிரத்தை யாவும் அவருக்காக வாசிக்கும் இசைக் கலைஞர்களிடம் கூட அவரால் கொண்டு வர முடிந்தது. இசைக் குறிப்புகளை எழுதி அதைப் பார்த்து கலைஞர்கள் வாசிக்கும் முறை அவரால் வந்தது.
அவரது பாடல்கள் சிறப்பாக அமைந்தன. சாமான்ய மக்களும் அதை ரசித்துக் கொண்டாடினார்கள். நாட்டுப்புற இசையும் மேற்கத்திய இசையும் கலந்து பரிணமித்தது. பாடல்கள் அழகாக உருவானது போல அவரது பின்னணி இசையும் சிறப்பாக அமைந்தது. அதற்காக அவர் மெனக்கிட்டார். அவரது ஆரம்ப காலப் படங்களிலேயே அவரது திறமை பளிச்சிட்டது. நான் நிறைய அதை அனுபவித்திருக்கிறேன். கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் டைட்டில் இசை மற்றும் பல காட்சிகளின் பின்னணி இசை இன்றளவும் நினைவில் உண்டு.
திரை இசை ஒரு புதுத்தடத்தில் பயணப்பட்டது. எல்லா இசையமைப்பாளர்களும் அதே பாட்டையில் பயணிக்க முற்பட்டார்கள்.
மெல்ல மெல்ல ராஜா என்கிற இளையராஜா இசை ஞானி, இசைக் கடவுள், இசை அவதாரம் என்றென்றெல்லாம் கொண்டாடப்பட்டார்.
ஒரு புனிதத் தன்மை அவர் விரும்பியோ விரும்பாமலோ அவர் மேல் ஏற்றப்பட்டது.
அவரை வழிபடத் தொடங்கியது திரை உலகம். ரஜினிகாந்த் அவரை சாமி என்றே அழைத்தார். எழுத்தாளர் ஜெயமோகன் அவரை mystic என்று கொண்டாடினார்.
பாராட்டு விழாவில் கொஞ்சம் அந்தப் புனிதத் தன்மையை சற்றுக் கீழே இறக்கி வைத்து விட்டு நானும் சாதாரணமானவன் குடிக்க எல்லாம் செய்திருக்கிறேன் என்று இளையராஜா சொல்ல நேர்ந்திருக்கிறது.
சமீபத்தில் ஒரு சீனக் கவிதை படித்தேன் அதை பகிரத் தோன்றியது.
மலர்களின் நடுவே இருந்து
மதுக் கோப்பையை நான் எடுக்கிறேன்
தனியே குடிக்கிறேன்
நண்பர்கள் யாரும் இல்லை
நான் கோப்பையை நிலவை நோக்கி உயரத்தினேன்
இப்போது நிலவு, நான், எனது நிழல் மூவர்
ஆனால் நிலவு குடிக்கவில்லை
எனது நிழலோ என்னையே பின்பற்றுகிறது
நான் நிலவோடும் நிழலோடும் பயணப்பட்டேன்
வசந்தத்தின் இறுதி வரை ஆனந்தம் கொண்டேன்
நான் பாடினேன், நிலவு ஆடியது
நான் ஆடினேன், எனது நிழலும் ஆடியது
சாதாரணமாக இருக்கும் போது வாழ்வின் சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்
குடித்து விட்டாலோ அவரவர் அவரவர் வழியில்
என்றும் நண்பர்கள், எங்கே அலைந்தாலும்
மீண்டும் பால்வீதியில் நாம் சந்திப்போம்
லீ தாய் போவின்
சீனக் கவிதை
ஆங்கிலம் வழியாகத் தமிழில்
தி சந்தானம்
👌அருமை 👏👏👏👏
ReplyDeleteநன்றி மதி
ReplyDeleteநானும் அந்த விழாவைப் பார்த்தேன்.இசைஞியைப் பற்றி இசையைப்பற்றி அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து எல்லோரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
ReplyDeleteசிம்பனியைத்தவிர மற்ற எல்லாம் சொதப்பல்.
சீனக்கவிதையும் படித்தேன். நன்றி
ReplyDeleteஎன் பதிவில் இசைஞானி என்று இருக்க வேண்டும்.
ReplyDeleteநன்றி ராமனாதன்
Deleteஇளையராஜாவின் ஆரம்பகாலப் பாடல்களை உத்தம பாளையம் ஞானாம்பாள் லாட்ஜ்க்கு கீழே உள்ள டீக்கடையில் நிதானமாக ரசித்திருக்கிறோம்.
ReplyDeleteஆமாம். அற்புதமான நாட்கள்.
Delete